என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women"

    • பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
    • பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்

    இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.

    அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நிச்சயதார்த்தம் முடிந்த பின் மாப்பிள்ளை பிடிக்கவில்லை.
    • கூலிப்படைக்கு 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து மாப்பிள்ளையை தீர்த்துக்கட்ட கட்டளை.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நிச்சயம் செய்த பிறகு மாப்பி்ள்ளை பிடிக்காததால், பெண் ஒருவர் ஐந்து பேருக்கு 1.5 லட்சம் கொடுத்து கொலை செய்ய சொன்ன சம்பவம் நடந்துள்ளது.

    புனே மாவட்டம் கர்ஜாட் தாலுகா மகி ஜல்கான் பகுதியைச் சேர்ந்தவர் சாகர் ஜெய்சிங் கடம். இவருக்கும் 28 வயதான மயூரி சுனில் டாங்டே என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஜெய்சிங் கடாம் ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார்.

    நிச்சயம் செய்யப்பட்ட பிறகு மயூரிக்கு ஜெய்சிங் கடாமை பிடிக்கவில்லை. இதனால் ஜெய்சிங் கடாமை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கான ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஐந்து பேரை தயார் செய்துள்ளார். அந்த ஐந்து பேரும் ஜெய்சிங் கடாமை கொலை செய்ய ஒப்புக் கொண்டனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி புனே-சோலாபூர நெடுஞ்சாலை டவுண்ட் அருகே ஜெய்சிங் கடாம் சென்றபோது, மர்ம மனிதர்கள் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    போலீசார் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவில் ஆதித்யா சங்கர், சந்தீப் கவடா, சிவாஜி ராம்தாஸ் ஜாரே, சுராஜ் திகாம்பர் ஜாதவ், இந்திரபன் சகாராம் கோல்பே ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், மயூரிதான் கொலை செய்ய விசயம் போலீசாருக்கு தெரியவந்தது.

    உடனோ போலீசார் மயூரை கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

    • அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    சென்னை:

    சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், 'தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிர் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவார்கள். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என அரசு உறுதியாக நம்புகிறது' என கூறப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பத்திர பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    இதன்மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து ஓய்வுபெற்ற பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதிவு கட்டணமாக 2 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் அதிகபட்சம் ரூ.10 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம் பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் போதும். இதன்மூலம் ரூ.10 ஆயிரம் மிச்சமாகும்.

    ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளுக்கு மட்டுமே இந்த பதிவு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை பதிவு செய்யும் மகளிர் இந்த சலுகையை பெற முடியாது.

    தற்போது கிராமப்புறங்களில் கூட நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் வெறும் ரூ.10 லட்சத்துக்கு சொத்துகள் வாங்க முடியாது.

    எனவே, ரூ.10 லட்சத்துக்கு அதிகமான சொத்துகளை பதிவு செய்யும் மகளிரும் இந்த சலுகையை பெறும் வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.

    தான செட்டில்மென்ட் பதிவை பொறுத்தமட்டில் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். தான செட்டில்மென்டை பொறுத்தமட்டில் அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.40 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியாக இருந்தாலும் பதிவு கட்டணமாக ரூ.40 ஆயிரம் செலுத்தினால் போதும்.

    அதிக மதிப்புள்ள சொத்துகளை கொண்ட பெரும் செல்வந்தர்களுக்கு சலுகை அளிக்கும்போது மகளிருக்கு சலுகை அளிப்பதில் உச்சவரம்பை நிர்ணயித்து இருப்பது சரியானது அல்ல.

    உச்சவரம்பை நீக்கி விட்டு எவ்வளவு மதிப்பிலான சொத்துகள் என்றாலும் பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் கட்டணம் அளிக்கும்போதுதான் அனைத்து தரப்பு மகளிரும் பயன்பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர்.
    • பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் வெளிநாட்டினரின் நிதி உதவியுடன் ஆபாசப்படம் எடுப்பதையே 5 ஆண்டுகளாக தொழிலாக செய்து வந்த தம்பதி சிக்கியது.

    உஜ்வால் கிஷோர் மற்றும் அவரது மனைவி நீலு ஸ்ரீவஸ்தவா ஆகியோர் நொய்டாவில் வசித்து வந்தனர். இந்த தம்பதி வெளிநாட்டினரிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளாக ஆபாசப்படம் எடுப்பதையே தொழிலாக செய்து வந்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    இதனையடுத்து நொய்டாவில் உள்ள இந்த தம்பதியினரின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது. இதில் ரூ.15.66 கோடி சட்டவிரோத வெளிநாட்டு நிதியைக் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

    இந்த தம்பதி சமூக ஊடகங்களை பயன்படுத்தி மாடலிங் துறையில் விருப்பமுள்ள பெண்களை குறிவைத்துள்ளனர். மாடலிங் விளம்பரம் பார்த்து வரும் பெண்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஆபாச படத்தில் நடிக்கும் தொழிலில் தள்ளியுள்ளனர்.

    இந்தியாவில் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பாக ரஷ்யாவில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. .

    இந்த மோசடியில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆபாச பட தொழிலில் தள்ளப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.

    • லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்க்கின்றனர்.
    • குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.

    அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.

    உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவோரில் 27.4% பேர் தங்கள் இணையை வேவுபார்ப்பதற்காகவே அச்செயலியை பயன்படுத்துவதாக CHEAT EYE ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக மான்செஸ்டரில் 8.8% பெண்களும், பிர்மிங்கத்தில் 8.3% பெண்களும் காதலர்கள் குறித்து துப்பறிந்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 24 வயதுடையோர்தான் இதில் தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
    • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.

    எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 6.4.2025-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
    • சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைதுறை நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வரலட்சுமி நோம்பு நடைபெற்றது. வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள்.

    இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். அதுசமயம் திருப்பலைதுறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை பூஜை செய்து வழிபட்டனர்.

    48 நாட்கள் பெண்கள் விரதமிருந்து வரலட்சுமி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    • திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லை.
    • பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதார ண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உப்பள தொழிலாளர்களின் பணிசூழல் தொடர்பான மாநில மனித உரிமை கழக ஆய்வு கூட்டம் கோடி யக்காட்டில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி மற்றும் உப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களின் பணிச்சூழல், பணியில் இருக்கும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் திறந்த வெளியில் உப்பள உற்பத்தி பேக்கிங் செய்யும் சூழலில் பெண்களுக்கு அடிப்படை வசதி இல்லாத நிலையில் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சூழல் ஆகிய குறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துக்கூறினர்.

    இதுகுறித்து மாநில மனித உரிமை கழக உறுப்பினர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-

    உப்பள தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது.
    • பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே மணிவிழுந்தானில் ஒரு நூற்பாலை உள்ளது. இங்கு உள்ளூர் மட்டு மின்றி வடமாநில தொழி லாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். வடமாநில பெண் தொழிலாளர்கள் சிலர், பெண்கள் பாது காப்புக்கான தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பணி கடினமாக உள்ளது. ஆலையில் இருக்க விரும்பமில்லை என புகார் கூறியுள்ளனர்.

    இதையடுத்து சேலம் மாவட்ட சமூக நலத்துறை உத்தரவுப்படி வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று நூற்பாலையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பணியாற்றி வந்த ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஓடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண் ெதாழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதனர்.

    இதையடுத்து 35 பெண் தொழிலாளர்களை மீட்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்க ளுக்கான கூலி, கருணைத் தொகை தலா ரூ.10 ஆயிரம் வழங்கினர். இதையடுத்து அவர்கள் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • பாட்டு பாடி விவசாய நடவுப்பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
    • சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவனி, ஆத்தூர் கிச்சலி சம்பா உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை இந்தாண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் குட்டை ரகங்களில் ஐ.ஆர். 20, 1009, கோ 43 வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களும் பரவலாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொட்டும் மழையிலும் விவசாய கூலித்தொழிலாளர்கள் நடவுப் பணிகளில் ஈடுபடும் போது வயல்வெளியில் நல்ல விளைச்சல் தர வேண்டும் என நாட்டுப்புற பாடல்களை பாடுவது வழக்கம். அண்மை காலமாக அருகி வந்த நிலையில் பாடல்களை பாடி நடவுப் பணிகளில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு வியப்பான ஒன்றாக உள்ளது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் செடி கொடிகளுக்கு இசையை உணரும் தன்மையும், நல்ல காய், கனிகளை தருகிறதை உறுதி செய்துள்ள நிலையில் கிராமப்புறத்தில் தொன்று தொட்டு நடவுப்பணியில் பாடல் பாடி வருவது நம் முன்னோர்கள் தங்களது விவசாய தொழிலை நேசித்தது தெளிவாக விளங்குகிறது என நடவுப்பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.

    • பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள்.
    • டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

    புதுடெல்லி :

    மது குடிக்கும் பழக்கம் தற்போது ஒரு 'பேஷன்' ஆகி விட்டது. பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள். இந்தநிலையில் டெல்லியில் பெண்களின் மது பழக்கம், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையைவிட தற்போது அதிகரித்து உள்ளது. இதற்கு கொரோனா கால ஊரடங்கே முக்கிய காரணம் என பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ஒரு தொண்டு நிறுவனம் இது தொடர்பான ஆய்வை 5 ஆயிரம் பெண்களிடம் நடத்தியது. இதில் கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களை குடிகாரிகளாக மாற்றிவிட்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர். மேலும், டெல்லியில் மதுபானத்துக்கு அளிக்கப்பட்ட 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', சிறப்பு தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகளும் மது வாங்க தங்களை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

    மது அருந்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் வாரத்துக்கு இருமுறையும், 19 சதவீதம் பேர் வாரத்துக்கு 4 முறையும் மது அருந்துவதாக கூறியுள்ளனர். ஒரு அமர்வுக்கு 4 'பெக்'குகள் வரை தள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் மது அருந்தும் பழக்கம் டெல்லியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதில் விஸ்கி விற்பனை 59.5 சதவீதம், பீர் விற்பனை 5.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலையில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
    • தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மணக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லியடிக்காடு கிராமம், காளியம்மன் கோயில் தெருவில், சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வெள்ள நீர் வடிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.

    சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கண்டு கொள்ளாமல் அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சிறிது தூரம் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தண்ணீரில் இறங்கி நடந்து செல்லும் அவலம் உள்ளது.

    மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் உறங்க முடியாத சூழல் உள்ளது.

    தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி பொதுமக்கள், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வீ.கருப்பையா தலைமை வகித்தனர்.

    சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், சீனிவாசன், முத்துக்குமார், பன்னீர் செல்வம், பாக்கியம், அஞ்சம்மாள், ராஜ்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×