என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "women"
- ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் ரத்தசோகை பிரச்சனை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ரத்தசோகை நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக மகப்பேறு காலகட்டத்தில் பெண்களுக்கு ரத்தசோகை குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவ நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பெண்கள் இயல்பாகவே ரத்தசோகைக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மட்டுமே ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு 15-49 வயது பெண்களிடம் ரத்தசோகை பாதிப்பு தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி, இந்தியாவில் அதிகப்படியாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் 92.8 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 71.4 சதவீத பேரும், திரிபுராவில் 67.2 பேரும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளில் 25.8 சதவீத பேரும், நாகாலாந்தில் 28.9 சதவீத பேரும், மணிப்பூரில் 29.4 சதவீத பேரும், மிசோரம் மாநிலத்தில் 34.8 பேருக்கும் ரத்தசோகை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 53.4 சதவீத பேரும், புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பை மத்திய சுகாதாரத்துறை 2019-2021 காலகட்டத்தில் எடுத்துள்ளது. இதன்படி, இந்தியாவில் அதிக ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 22-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, "ஏறத்தாழ 50 சதவீத ரத்தசோகை நோய் பாதிப்பு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. மற்றவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் வருகிறது" என்றார்.
- பெண்களை சீட்டிலிருந்து எழக்கோரி இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதியை தமிழ்நாடு வழங்கி வருகிறது.
இந்நிலையில், "ஓசி டிக்கெட்ல தானே பயணம் பண்றீங்க.. நாங்க டிக்கெட் எடுத்துட்டு வர்றோம்" என அரசுப்பேருந்தில் பெண்களை சீட்டிலிருந்து எழக்கோரி இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற 'எண் 26' பேருந்தில் வடபழனி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது.
சீட்டில் அமர்ந்து இருந்த வயதானவர்கள், பெண்களை எழுப்பி விட்டு, அந்த சீட்டில் இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். இதற்கு பெண் பயனைகள் எதிர்ப்பு தெரிவிக்க, இளைஞர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
``ஓசி டிக்கெட்டுக்குலாம் சீட்டு இல்ல'' - பெண்களை எழுப்பிவிட்டு அட்டகாசம்.. இளைஞர்களின் ஆபாச பேச்சு#chennaibus #bus #womenbus pic.twitter.com/arxn5ge6uN
— Thanthi TV (@ThanthiTV) February 10, 2025
- நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
- ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே.
நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மனஅழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்.
ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே! அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் சேர்ந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்!," என்று விஜய் தெரிவித்துள்ளார்.
என்றும் என்றென்றும் பெண் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அரணாக நம் தலைவர் தளபதி விஜய் அவர்கள் இருப்பார்...வருங்கால தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான தமிழகம் ஆக நிச்சயம் படைப்போம் நம் தலைவர் தளபதி விஜய் அவர்கள்..@tvkvijayhq | #TVKVijay#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/KcO33Z0wKx
— தமிழக வெற்றிக் கழகம் IT WING (@Tvk_ITWING_) December 30, 2024
விஜய் எழுதிய இக்கடிதத்தை தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர். அப்போது அனுமதி இன்றி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்ததாக த.வெ.க. தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், விஜய் கைப்பட எழுதிய இந்த கடிதத்தின் நகலை சென்னை தி. நகரில் விநியோகம் செய்த த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்துள்ளனர் .
- அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம்.
நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "கல்வி வளாகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களும், சட்டஒழுங்கு சீர்கேடும் நடைபெறுகிறது"
"பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மனஅழுத்தத்திற்கும், சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன்"
"ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே!"
"அதற்காகவே இக்கடிதம்"
"எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன், அண்ணணாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்."
"பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம்! - அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் சேர்ந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்!," என்று குறிப்பிட்டுள்ளார்.
- தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும்.
- தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பீகாரில் குறைவாகவும் உள்ளது.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சிசேரியன் பிரசவங்கள் குறைவாக உள்ளன. நாட்டில் அரசு மருத்துவமனைகளைவிட தனியாா் மருத்துவமனைகளில் அதிக சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது.
'தி லான்செட் பிராந்திய சுகாதாரம்-தென்கிழக்கு ஆசியா' எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 2019 முதல் 2021 வரையிலான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, டெல்லியில் உள்ள 'ஜாா்ஜ் இன்ஸ்டிடியூட் பாா் குளோபல் ஹெல்த்' நிறுவன ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனா்.
நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 15 முதல் 49 வயதுடைய 7.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களின் பிரசவ தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய அளவில் சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 21.5 சதவீதமாகும். பல்வேறு மாநிலங்களில் இந்த விகிதம் கணிசமாக வேறுபடுகிறது. ஒப்பீட்டளவில், நாகாலாந்தில் குறைந்தபட்சமாக 5 சதவீதமும், தெலுங்கானாவில் அதிகபட்சமாக 60.7 சதவீதமும் சிசேரியன் பிரசவ விகிதம் உள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் வசதியான குடும்ப பெண்கள் மத்தியில் சிசேரியன் பிரசவம் இரு மடங்கு அதிகமாக உள்ளது. தெலுங்கானா, தமிழகம், ஆந்திரம் போன்ற தென் மாநிலங்களில் சிசேரியன் பிரசவ விகிதம் அதிகமாகவும், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பீகாரில் குறைவாகவும் உள்ளது.
பொருளாதார வளா்ச்சி, போதிய சுகாதார வசதிகள், அதிக கல்வியறிவு போன்ற காரணிகளுடன் சுக பிரசவம் மீதான அச்சம், வலியற்ற பிரசவம், நல்ல நாளில் குழந்தை பெற வேண்டுமென்ற விருப்பம் ஆகியவையும் சிசேரியன் பிரசவம் அதிகரிப்புக்கு காரணமாகின்றன.
பீகாரை பொருத்தவரை, பெரும்பாலும் வசதி குறைவானவா்களைக் கொண்ட மாநிலம். அங்கு மருத்துவா் சிசேரியனுக்கு பரிந்துரைத்தாலும் குறைவான மருத்துவச் செலவு மற்றும் எளிதில் குணமடைவதைக் கருத்தில் கொண்டு, மக்கள் சுகப்பிரசவத்தையே தோ்வு செய்கின்றனா் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர்.
- பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.
இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று [நவம்பர் 25] கொண்டாடப்படுவதை ஒட்டி ஐநாவின் பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு UNODC இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் காரணமாக உள்ளார். இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும். மேலும் 1 நிமிடத்திற்கு ஒருவர் கொலை என்றும் கணக்கில் உள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/25/6537266-140womankilledeverydayun2.webp)
அதற்கு முன் 2022 ஆம் ஆண்டில் 48,800 பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் இணையர் அல்லது குடும்பத்தினரால் கொல்லட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து இடங்களிலும் உள்ள பெண்களும் சிறுமிகளும் இந்த தீவிரமான பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிக ஆபத்தான இடம் அவர்களது வீடுதான் என்று ஐநா அறிக்கை நிறுவியுள்ளது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/11/25/6537265-140womankilledeverydayun1.webp)
இந்த குடும்ப கொலைகளில் ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 21,700 பேர் தங்களது இணையர் அல்லது உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது கணிசமான எண்ணிக்கை ஆகும். ஆப்பிரிக்காவில் 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் 100,000க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 100,000க்கு 1.5 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில் 100,000 பேருக்கு 0.8 பேர் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பேர் 0.6 பேர் என்ற விகிதங்களில் பெண்கள், குழந்தைகள் கொலையாகி உள்ளனர்.
மேலும் 2023 ஆம் ஆண்டில் குடும்பத்துக்குள் நடந்த கொடிய வன்முறை ஆண்களை விடப் பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. இந்த கொலைகளுக்கு எதிரான =நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை குறைவதற்கு மாறாக அதிகரித்துக் கொண்டு இருப்பதாக ஐநா அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
- ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் தென் இந்தியாவில் குழைந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் குழந்தை பிறப்பை அதிகரிக்க கூறியுள்ள உபாயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு பிறப்பு விகிதம் 5.1 சதவீதம் குறைந்து 758,631ஆகப் பதிவானது. இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,50,074 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே கால் இடைவெளியுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் குறைவாகும்.
இந்நிலையில் ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா கடந்த நவம்பர் 8 ஆம் தேதி யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் , 25 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்வதைத் தடைசெய்யவும், 30 வயதாகிவிட்டால் கருப்பை நீக்கத்தை கட்டாயப்படுத்தவும் ஹைகுடா பரித்துரைத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
I want you to know the current state of Japanese politicians.Naoki Hyakuta, leader of the far-right Conservative Party of Japan with 3 seats in the House of Representatives@BBCWorld @bbcnewsjapan @BBC @CNN @NBCNews @ABC @CBSNews @FoxNews pic.twitter.com/utP5Y29veU
— ⁑リコマイ ⁑ (@sakuraironoharu) November 10, 2024
இதனையடுத்து தனது கருத்துக்காக நவோகி ஹைகுடா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசிய கருத்துகள் கடுமையானவைதான் என்றும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்குத் தான் வாதிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.
- பரவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் பூங்குத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முயன்றார்.
- சந்திரபாபு நாயுடுவிடம் வந்த பெண் தன்னிடம் இருந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்தார்.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அனக்கா பள்ளி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று அனக்காபள்ளி மாவட்டத்தில் உள்ள பரவாடா என்ற இடத்த்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனது வாகனத்தில் ஏறுவதற்காக சென்றார்.
அப்போது பரவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் பூங்குத்துடன் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முயன்றார். சந்திரபாபு நாயுடுவின் பாதுகாவலர்கள் பூச்செண்டு கொடுக்க வந்த பெண்ணை முதல் மந்திரியிடம் நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்ட சந்திரபாபு நாயுடு அந்தப் பெண்ணை விடுவிக்குமாறு தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவிடம் வந்த பெண் தன்னிடம் இருந்த பூங்கொத்தை அவரிடம் கொடுத்தார். அப்போது திடீரென சந்திரபாபு நாயுடுவுக்கு அந்த பெண் முத்தம் கொடுக்க பலமுறை முயற்சி செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரபாபு நாயுடு பணிவுடன் மறுப்பு தெரிவித்தார். பெண்ணை தனுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கினார்.
பூங்கொத்து கொடுத்த பெண் சந்திரபாபு நாயுடுவுடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றார்.
பெண் ஒருவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களை தற்போது பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
సీఎం చంద్రబాబుకి ముద్దు పెట్టిన మహిళ pic.twitter.com/IKTuITovPG
— Telugu Scribe (@TeluguScribe) November 2, 2024
- 17 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
- இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கினர்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 17 வயது சிறுவன் ஓட்டிவந்த கார் ரங்கோலி கோலம் போட்டி கொண்டிருந்த 2 பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவ்யா (13) என்ற சிறுமியும் பிரியன்ஷி (21) என்ற இளம்பெண்ணும் தீபாவளியை ஒட்டி தங்களது வீட்டிற்கு வெளியே ரங்கோலி கோலம் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் இவர்கள் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமைடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நவ்யா (13) கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் விபத்து ஏற்படுத்தியவுடன் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், காரை அடித்து நொறுக்கி, ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
மேலும் காருக்குள் மதுபாட்டில்கள் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார். இதனையடுத்து விபத்து ஏற்படுத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
In Indore, Madhya Pradesh, A Full Speed Car crushed two girls. The girls were making Rangoli outside the house. The accused driver is said to be 17 years old Monor. The police have arrested him. The condition of both the girls is very serious pic.twitter.com/F34Rb87XBs
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 29, 2024
- இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணி
- தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் விவாதம்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணியாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் பல்வேறு பதாகைகளை பெண்கள் ஏந்தி சென்றுள்ளனர். குறிப்பாக 'தாடியை நீக்கி காதலை காப்பாற்று' (Remove beard, save love) என்ற பதாகையையும் கிளீன் சேவ் செய்யவில்லையெனில் காதலிக்கமாட்டோம் (No Clean Shave, No Love) என்ற பதாகையையும் , தாடி வேண்டுமா காதலி வேண்டுமா முடிவு உங்கள் கையில் (Keep a beard or keep a girlfriend, the choice is yours) என்ற பதாகையையும் பெண்கள் ஏந்தி சென்றனர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.
இந்த பேரணி உண்மையான பேரணியா? இல்லை ரீல்ஸ்காக எடுக்கப்பட்ட வீடியோவா? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.
#WATCH | No Clean Shave, No Love: Indore Girls Take to the Streets with a Unique Condition for Dating Boys!#IndoreNews #viralvideo pic.twitter.com/yepTLKAZDL
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 18, 2024
- மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமரவைக்கப்பட்டிருக்கிறார்.
- இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட பல்வேறு நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் மாதவிடாய் காலத்தின்போது வீட்டிற்கு வெளியே தங்க வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கொடூரமான கதையை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் பகிர்ந்து கொண்டார்.
ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி பேச தொடங்கிய சஞ்சய் கரோல், "இந்த புகைப்படம் நான் 2023 ஆம் ஆண்டு ஒரு தொலைதூர கிராமத்தில் எடுத்தேன். மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் 5 நாட்களுக்கு தனது வீட்டிற்கு வெளியே அமரவைக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நாட்டில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் அவர்களின் மொழியைப் பேசினீர்களா? நீங்கள் அவர்களை அணுகினீர்களா? நீங்கள் அவர்களைப் புரிந்து கொண்டீர்களா?
இந்தியா என்பது டெல்லி மற்றும் மும்பை மட்டுமில்லை. நாம் இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலர்கள். இந்தியாவின் கடைக்கோடியில் வசிக்கக்கூடியர்கள் குறிப்பாக நீதி கிடைக்காத ஒருவரை அல்லது நீதி என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரை சந்திக்க வேண்டும். அவர்களுடைய மொழியில் பேசி நாட்டின் சட்டத்தை புரிய வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி.
- மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014-ல் மக்கள் நல கூட்டணியில் பயணித்த போது மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம்.
கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்தனர். தி.மு.க.வை மிரட்ட மாநாட்டு நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். அப்போதுதான் தி.மு.க.விடம் அதிக சீட்டு பேரம் பேச முடியும் என பேசுகிறார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என பேசுகிறார்கள்.
மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம். மாநாடு நடத்த வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்தது மக்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு இல்லை.
தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி. மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி.
மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடுள்ள காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்கிறது.
பெண்களை மாநாட்டுக்கு அதிகம் அழைத்து வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சியின் மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை யாரும் பங்கேற்கலாம் என கூறினேன்.
மதுவை ஒழிப்போம் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இடசாரிகள், வி.சி.க.வுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய பிரச்சினை.
காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம். அது போல் மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். மது குடிக்கும் இடத்தில் எப்படி சாதி இல்லையோ, அப்படியே மது ஒழிக்கவும் சாதி வேண்டாம்.
பா.ம.க., பா.ஜ.கவுடன் அணி சேர முடியாது. பா.ஜ.க.கட்சியில் பல நண்பர்கள் உள்ளனர். பா.ம.க. மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.
வெளிப்படையாக தி.மு.க.வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்கு தொடர்பாக அரசியலமைப்பு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.
47-வது உறுப்பில் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிக்கை வைக்கிறோம்.
ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கு மத்திய அரசைதி.மு.க. வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விடுதலை சிறுத்வதைகள் வலியுறுத்துகிறது. எல்லா ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு கொள்கை பேசப்பட்டது.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர் .அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கும் மாநாடு.
தி.மு.க.கூட்டணியில் இருப்பதால் முதல்வரிடம் மனு கொடுக்கலாமே என கேட்கிறார்கள். ஆனால் இது மக்களே ஒன்று சேர்ந்து கேட்கவேண்டிய கோரிக்கை .
அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், சகோதரிகள் நீல நிறபுடவையும் சிகப்பு நிற ஜாக்கெட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.