search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமன் குமார்"

    • அறிமுக இயக்குனரான மணிவர்மன் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் ’ஒரு நொடி’ திரைப்படம் வெளியானது.
    • அமோஹம் பிக்சர்ஸ் சார்பாக சுபாஷினி மற்றும் வொயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக ரத்தீஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    அறிமுக இயக்குனரான மணிவர்மன் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் 'ஒரு நொடி' திரைப்படம் வெளியானது.

    வெளியான இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படம் வெலியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதிக்களத்தையும் திரைக்கதையை அமைத்தது படத்டின் கூடுதல் பலம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிவர்மன் மீண்டும் தமன் குமார் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார்.

    அமோஹம் பிக்சர்ஸ் சார்பாக சுபாஷினி மற்றும் வொயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக ரத்தீஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று பாண்டிச்சேரியில் தொடங்கியது.

     

    மல்வி மல்ஹோத்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார், மைதிரேயா ரக்ஷா செரின், அருன் கார்த்தி, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, சந்தான பாரதி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். படத்தின் தயாரிப்பாளரான ரத்தீஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.
    • 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்

    புதுமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபாஷங்கர், சிவரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.




    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது இப்படம் தயாரிப்பு பணிகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.




    இந்நிலையில், வருகிற ஏப்ரல் 26-ல் தியேட்டர்களில் இப்படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்து உள்ளது.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்டவருமான தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஒரு நொடி’.
    • இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார்.

    அறிமுக இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஒரு நொடி'. இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கிறார். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.குரு.சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


    பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், 'காற்றின் மொழி', 'இவன் தந்திரன்', 'கோடியில் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார்.


    'ஒரு நொடி' படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.

    வனஷாக்ஷி கிரியேசன்ஸ் பெருமையுடன் வழங்க, தமன்குமார், மியாஸ்ரீ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம் திகிலான திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.
    நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம்.

    கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். 

    ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும் போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள்.



    எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன?, அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?, குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றை எல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? என்பதை முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி.

    இப்படத்தில் “தொட்டால் தொடரும்”, “சட்டம் ஒரு இருட்டறை”, “6 அத்தியாயங்கள்” போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி பாப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

    ×