என் மலர்tooltip icon

    செய்திகள்

    • பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார்.
    • பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி குழு தலைவர் கோமதி பட்ஜெட்டை வெளியிட்டார். அதனை மேயர் தினேஷ்குமார் பெற்றுக்கொண்டார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    2025- 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,522 கோடியே 7 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. செலவினம் 1,517 கோடியே 97 லட்சம். உபரி ரூ.4 கோடியே 10 லட்சம் என நிதி குழு தலைவர் கோமதி தெரிவித்தார்.

    இதன் பின்னர் பட்ஜெட் மீது மேயர் தினேஷ்குமார் உரையாற்றினார். மேலும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அதன் விவரம் வருமாறு:-

    புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய நீராதாரம் உருவாக்குதல், நீராதாரத்திலிருந்து தலைமை சுத்திகரிப்பு நிலையம் வரை 19.83 கி.மீ. நீளத்திற்கு பிரதான குழாய்கள் அமைத்தல், 196.00 மில்லியன் லிட்டர்கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாநகர் முழுமை பகுதிக்கும் 144.028 கி.மீ. நீளத்திற்கு நீருந்து குழாய் அமைத்தல், 29 இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல், 1192.331 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாய்கள் பதித்தல் ஆகியவற்றில் பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள்பயன்பாட்டிற்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை 98சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது.

    இப்பணிகள் இவ்வாண்டில் முடிக்கப்பட்டு 3 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கேற்ப மாமன்ற உறுப்பினர்களிள் வேண்டுகோளின் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் 544.281 கி.மீ.நீளத்திற்கு கழிவுநீர் சேகரிக்கும் குழாய்கள் அமைத்தல், 9 கழிவு நீரேற்று நிலையங்கள் கட்டுதல், 44.086 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், 71 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுதல், 62,835 வீட்டு இணைப்புகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 97 சதவீத பணிகள் முடிவுற்றது. இப்பணிகள் இவ்வாண்டில் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை மண்டலத்துக்கு 2 வார்டு வீதம் பரிசோதனை அடிப்படையில் வீடு தோறும் தரம் பிரித்து வழங்க ஒவ்வொரு வீட்டுக்கும், பச்சை, சிவப்பு வண்ணங்களில் இரண்டு பக்கெட்டுகளை வழங்கிட உள்ளோம். பின்பு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 249.06 கி.மீ. நீளத்திற்கு ரூ.133.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மேலும் 18.18 கோடி மதிப்பீட்டில் 26.53 கி.மீ. நீளத்திற்கு மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றியமைக்கப்படும். பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகள் 90.00 கி.மீ. நீளத்திற்கு ரூ.30.00 கோடி திட்ட மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளாலும், இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளால் சேதம் ஏற்பட்டுள்ள சாலைகள் ரூ.7கோடி மதிப்பீட்டில் பழுது நீக்கப்படும். அவினாசி ரோடுமேம்பாலம் முதல் நல்லாத்துப்பாளையம் கேட் தோட்டம் வரையிலான பகுதிகளில் புதிய இணைப்பு சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி.
    • நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன் என்றார் விஜய்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர்," அடுத்தாண்டு மக்கள் இதுவரை சந்திக்காத தேர்தலை சந்திப்பார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டே கட்சிகள் இடையே மட்டும் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக. நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கும் மீண்டும் சந்திக்கிறேன்" என்றார்.

    விஜய்யின் உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "உண்மையான களம் அதிமுகக்கும் திமுகவுக்கும்தான்" என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் பேசிய அவர், " தவெக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் விஜய் அவ்வாறு பேசியுள்ளார்.

    ஆனால், உண்மையான களம் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான்" என்றார்.

    • தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
    • டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.

    இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

    இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.

    அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    • மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
    • சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டது.

    மியான்மரில் இன்று நண்பகலில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் உள்ளே சிக்கியுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. தாய்லாந்தில் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

    சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

     

    • நேரு பிரதமராக இருந்தபோது ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனை.
    • வாஜ்பாய் பிரதமராக இருந்துபோது 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

    மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா இன்று மக்களவையில் பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) திட்டத்தின்கீழ் வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறும் மக்களின் எண்ணிக்கை 62 கோடியாக உள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அதிகப்படியான மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். என்றாலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தரனமான சுகாதாரம் சேவை வழங்குவதில் எந்த சமரசமும் கிடையாது.

    நேரு பிரதமராக இருந்தபோது ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 6 எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது பிரதம்ர மோடி 22 எய்ம்ஸ் மருத்துவமனையை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கிவைத்துள்ளார்.

    இந்த திட்டம் பயனாளி அடிப்படையில் விரிவடைந்து கொண்டே வருகிறது. தொடக்கத்தில் ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட என்ற அடிப்படையில் 10.74 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டனர். பின்னர் 10.74 கோடி குடும்பத்தில் இருந்து 12 கோடி குடும்பமாக உயர்த்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா ஊழியர்கள் 37 லட்சம் பேர் பயனடையும் வகையில் விரிவடைந்துள்ளது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

    • பஸ்களின் மாதிரி புகைப்படங்களை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
    • அடுத்த கட்டமாக மாடி பஸ் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சாதாரண பஸ்கள், ஏ.சி.பஸ்கள் புழக்கத்தில் உள்ளன. இதன் அடுத்த கட்டமாக மாடி பஸ் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 12 மீட்டர் நீளம் கொண்ட ஏ.சி. மின்சார பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத் துக்காக வாங்கப்பட உள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனம் 500 சுவிட்ச் இ.ஐ.வி.12 ரக மின்சார பஸ்களை வழங்க ஏற்கனவே டெண்டர் கோரி உள்ளது.


    இந்த ஏ.சி. மின்சார பஸ்களை 12 ஆண்டுகளுக்கு பராமரித்து இயக்கும் என்று அசோக் லேலண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    100 மின்சார பஸ்களை 12 ஆண்டுகளுக்கு பரா மரித்து இயக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதையொட்டி 100 மின்சார பஸ்களுக்கான டெண்டரை போக்குவரத்து துறை கோரி இருந்த நிலையில் இந்த பஸ்களின் மாதிரி புகைப்படங்களை போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது.

    மக்கள் பயன்பாட்டுக்கு இந்த பஸ்கள் சென்னை நகரில் மே மாதம் முதல் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம்.
    • தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    "த.வெ.க. அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரும்போது பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம்.

    சட்டம்-ஒழுங்கை முறையாக Strict-ஆக வைத்திருப்போம். கல்வி, சுகாதாரம், மருத்துவம் என அனைத்திலும் கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லாருக்கும் எளிமையாக கிடைக்கப்படுவதுதான் எங்கள் குறிக்கோள்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள் என தொழிலாளர்கள் பக்கமும் கண்டிப்பாக துணையாக இருப்போம். நாம் எப்போதும் உழைப்பவர்கள் பக்கம்தான் நிற்போம்.

    நம் தமிழ்நாடு விவசாய பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த மண். விவசாயத்திற்கும் இயற்கை வளங்களுக்கும் எதிராக கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் நடவடிக்கையும் கொண்டுவருவதை எங்களால் ஏற்க முடியாது.

    எங்கள் மண்ணை, மக்களை பாதிக்கும் விஷயங்களை செயல்படுத்தாதீர்கள் அதை நாங்கள் எதிர்க்கவே செய்வோம். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டியது எங்களுடைய உரிமை, கடமை, கொள்கை எல்லாமே.

    அரசியலின் அடிப்படை பலம் சமரசமற்ற கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் தான். இதுதான் பெரியாரின் சமூக நீதி, காமராஜரின் நேர்மையான நிர்வாகம், அம்பேத்கரின் சம நீதி மற்றும் சம வாய்ப்பு, வேலு நாச்சியாரின் சமூக உள்ளடக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம், நீர்வளத்திற்காகப் போராடிய அஞ்சலை அம்மாள் ஆகியோரை கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சி ஒன்றில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்யும் வகையில் பாட்டு பாடினார்.
    • ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர்.

    காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சுகிறார்.

    இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.

    குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தார். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    மும்பை கர் காவல் நிலையத்தில் சிவசேனா எம்.எல்.எ. முர்ஜி படேல், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்து பரப்பியதாக புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குணால் கம்ரா முன்ஜாமின் மனுவை விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • த.வெ.கவில் குழப்பம், சாதி பிரச்சனைனு சொல்றது, எல்லாமே தி.மு.கவோட செட்டிங்...
    • யார் எந்த கூட்டணி அமைத்தாலும், த.வெ.க. தனியாக நின்றால் அமோகமாக வெற்றி பெறும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில்,

    ஹிட்லர், முசோலினி அரசியல்போல் மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. கேள்வி கேட்க ஆளே இருக்கக்கூடாதென நினைக்கிறது தி.மு.க.

    நாம் போராடினால வழக்குப்பதிவு செய்வார்கள், மிரட்டுவார்கள். அதற்கெல்லாம் அச்சப்படக்கூடாது.

    அ.தி.மு.க.வினர் நேரடியாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தனர். அதைவிட மோசமாக மத்திய அரசை எதிர்ப்பது போல தி.மு.க. நாடகமாடுகிறது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை எப்படி தி.மு.க.வில் கூட்டணி வைத்து அழித்தார்களோ, அதேபோல் தற்போது வி.சி.க.வை அழித்து வருகிறார்கள்.

    த.வெ.கவில் குழப்பம், சாதி பிரச்சனைனு சொல்றது, எல்லாமே தி.மு.கவோட செட்டிங்... எனக்கு அவங்கள பத்தி எல்லாமே தெரியும். அங்க தான் வேல பாத்துட்டு வந்துருக்கேன். எம்.ஜி.ஆரும் அங்க இருந்து தான் வந்தாரு.

    த.வெ.க. தலைவர் விஜய் மக்களை சந்திக்க செல்லும்போது அரசியலில் பேரதிர்வுகளை ஏற்படுத்தும். யார் எந்த கூட்டணி அமைத்தாலும், த.வெ.க. தனியாக நின்றால் அமோகமாக வெற்றி பெறும் என்றார். 

    • தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிச்சி பிரதமர் சார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து பேசிய விஜய் மத்திய அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது:-

    * இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல... மாண்புமிகு மோடிஜி அவர்களே... என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ... அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும்... பேர சொல்லணும்...

    * சென்டரில் ஆளுகிறவங்கன்னு சொல்றோம். சென்டரில் யார் ஆளுறா? காங்கிரசா? இங்க ஸ்டேட்ல ஆள்றாங்கன்னு பேசுறோம். இவங்க யார் ஆள்றா.. அதிமுகவா? அப்புறம் என்ன பேர சொல்லணும்... பேர சொல்லணும்... புரியலையே?

    * ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளை அடிக்கறதுக்காக உங்களோட அதாவது பா.ஜ.க.வோட மறைமுக கூட்டணி. இப்படி உங்க பேரை சொல்லியே மக்களை ஏமாத்துறதும், உங்க பேரை சொல்லியே மக்களை பயப்படுத்துறதும்... இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்க அரசுக்கு ஏன் ஜி? தமிழ்நாடும், தமிழர்கள் என்றாலே அலர்ஜி?

    * தமிழ்நாட்டில் இருந்து வருகிற ஜி.எஸ்.டி.யே கரெக்ட்டா வாங்கிக்கிறீங்க.. ஆனால் தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கமாட்டேங்குறீங்க. இங்க படிக்கிற பிள்ளைகளின் படிப்புக்கு நிதி ஒதுக்க மாட்டேங்குறீங்க.. ஆனால் மும்மொழிக்கொள்கையை திணிக்கிறீங்க. சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டோட பாராளுமன்ற தொகுதியில் கை வைக்க பார்க்குறீங்க...

    * ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்க ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிடிச்சி பிரதமர் சார். உங்க ப்ளான் என்னன்னு? எங்கெல்லாம் எப்படியெல்லாம் எந்த திசைக்கெல்லாம் இந்த நாட்டை கொண்டு போகலாம்ன்னு.

    * சார் உங்ககிட்ட நாங்க சொல்லிக்கிறது எல்லாம்... தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்டில் பண்ணுங்க சார். ஏன்னா தமிழ்நாடு பலபேருக்கு தண்ணி காட்டுன்ன ஸ்டேட் சார்.... பலபேருக்கு தண்ணி காட்டின்ன ஸ்டேட் சார்... பாத்து சார்... பாத்து செய்ங்க சார். மறந்துடாதீங்க சார் என்றார். 

    • எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.
    • அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

    இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன் வரும் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்பும் ஒரு நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதால், அதை தடுப்பதற்கு என்று ஒரு சிலர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா?

    அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான். காற்று, மழை, வெயில், இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாரால் தடுக்க முடியும். எல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டது. அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது.

    அரசியல் சூறாவளியும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர். அப்படிதான் எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு ஒரு நாளும் மெய்ப்படாது.

    வில்லியம் பிளேக்-ன் சில வார்த்தைகள். யார் வேண்டுமானாலும் வருவாங்க.. யார் வேண்டுமானாலும் போவாங்க.. ஆனால் நான் முன்னோக்கி போய்க்கொண்டே இருப்பேன்.

    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

    கருதி இடத்தான் செயின்

    என்ற குறளுக்கேற்ப, ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலை செய்தால் பூவுலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும் என்ற திருக்குறளுடன் என் நன்றி உரையை நிறைவு செய்கிறேன்.

    பார்த்துக்கொண்டே இருங்கள். அடுத்த வருடம் இதுவரை தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று TVK ஒன்று DMK. நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்," என்று கூறினார்.

    • புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.
    • கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும்.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி விளங்குகிறது. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை புதுச்சேரியை நோக்கி மதுப்பிரியர்களை இழுக்கச் செய்கிறது.

    புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன. புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது.

    புதுவையில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    இதேபோல் புதுவையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.

    டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுவையில் பீருக்கு என தனியான எக்ஸ்குளூசீவ் பார்கள் உள்ளது.

    கோடை காலம் வந்து விட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். புதுவையில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதித்குள்ளாகி உள்ளனர்.

    கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும். இதனால் மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.

    இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.

    சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    ×