search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி நாளை வாக்கு செலுத்துகிறார்
    X

    பிரதமர் மோடி நாளை வாக்கு செலுத்துகிறார்

    • குஜராத்தில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை 3-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. சூரத் தொகுதியில் முகுஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தப்படாது. மற்ற 25 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய இருக்கிறார்.

    இந்த பள்ளியில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று அகமதாபாத்தில் வாக்கிற்காக ஓட்டம் என்ற பெயரில் மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதற்கான வழிப்புணர்வு ஓட்டமாக இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

    2014 மற்றும் 2019-ல் பா.ஜனதா 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தற்போது முழுமையாக கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளது.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    Next Story
    ×