search icon
என் மலர்tooltip icon

    குஜராத்

    • இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை நீராலி என்பவர் ஆர்டர் செய்துள்ளார்.
    • அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசித்து வரும் நீராலி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்காக, உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார்.

    அவருக்கு பன்னீர் டிக்கா சாண்ட்விச்சிற்கு பதிலாக சிக்கன் சாண்ட்விச் அனுப்பட்டுள்ளது. அதை அறியாமல் அதை அவர் சிறிது சாப்பிட்டுள்ளார். பின்னர் இது சிக்கன் சாண்ட்விச் என்று தெரிந்ததும் ஆத்திரமடைந்த அவர் அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

    தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் 50 லட்சம் வழங்கவேண்டும் என்று அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இதனை விசாரித்த சுகாதாரத்துறை VRYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் இந்த தவறுக்காக நீராலிக்கு ரூ.5000 அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதே தவறை மீண்டும் செய்தால், உங்கள் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.
    • கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத் மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

    குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார்.

    இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பார்த்தம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார். அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார்.

    பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது,

    தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

    • தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.
    • வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

    குஜராத்:

    பாராளுமன்ற தேர்தலில் நேற்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பனேஜ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் உறுதி செய்துள்ளார்.

    கிர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பனேஜின் கோவில் பூசாரியான மஹந்த் ஹரிதாஸ், ஜூனாகத் பாராளுமன்ற தொகுதியின் கீழ் வரும் வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட ஒரே வாக்காளர் ஆவார். அவருக்காக தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.

    நேற்று காலை 11 மணியளவில் மஹந்த் ஹரிதாஸ் வாக்களித்தன் மூலம் வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.

    வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

    • மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
    • மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன.

    குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி எழுதிய தேர்வுகளில் குஜராத்தி மற்றும் கணித பாடங்களில் தேர்வு மதிப்பெண் அதிகபட்சமாக 200-க்கு 211 மற்றும் 212 பெற்றதாக முடிவுகள் வழங்கப்பட்டது. இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த மாணவி தனது மதிப்பெண் சான்றிதழை தனது வீட்டிற்கு கொண்டு சென்று பெற்றோரிடம் காட்டினார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் தங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். அப்போது தேர்வு முடிவுகளை தொகுத்த போது பிழை ஏற்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன. அதன் படி மாணவி குஜராத்தி பாடத்தில் 200-க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200-க்கு 190 மதிப்பெண்களும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • திரளான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும்.
    • கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும்போது ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    அகமதாபாத்:

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிக்கு வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி,

    இந்தியாவின் தேர்தல் செயல்முறை, தேர்தல் மேலாண்மை உலக ஜனநாயக நாடுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறது. சுமார் 64 நாடுகளில் தேர்தல்கள் நடக்கின்றன. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்து ஒப்பிடவேண்டும்.

    இந்த தேர்தல் ஆண்டு ஜனநாயகத்தின் கொண்டாட்டம் போன்றது. திரளான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    கோடை காலத்தில் செய்தி சேகரிக்கும்போது ஊடகவியலாளர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் உங்களுக்கு ஆற்றலையும் தரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

    இதையடுத்து, உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

    முன்னதாக, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்காளர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு இருந்தார்.


    • 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந் தேதி தேர்தல் நடந்தது.
    • வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்தியாவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மிகப்பெரிய கட்டமான இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    அடுத்ததாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதிகளும், கர்நாடகாவின் 14 தொகுதிகளும் முக்கியமானவை.

    இதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இதனிடையே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குஜராத்தில் தங்களது வாக்குகளை செலுத்துகிறார்கள்.

    • 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • இதில் 11 பள்ளிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத் மாநிலத்தில் நாளை 26 தொகுதிகளில் 25-ற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பல பள்ளிக்கூடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இன்று அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 16 பள்ளிக்கூடங்களில் 11 பள்ளிக்கூடங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து மிரட்டல் வந்துள்ள பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்குரிய வகையிலான எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. பின்னர், அது போலி மிரட்டல் எனத் தெரியவந்தது.

    சமீபத்தில் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்தது. அதேபோன்றுதான் தற்போது இங்கேயும் மிரட்டல் வந்துள்ளது. மெயில்கள் ரஷியாவில் பயன்படுத்தப்படும் "mail.ru" மூலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய எந்த பொருட்களும் சோதனையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இது போலியான மிரட்டில் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது என கிரைம் பிரிவு இணை கமிஷனர் ஷரத் சிங்கால் தெரிவித்துள்ளார்.

    இந்த இ-மெயில் தகவலை புறந்தள்ளிவிட்டு, மக்கள் பயமின்றி நாளை வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • குஜராத்தில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை 3-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. சூரத் தொகுதியில் முகுஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தப்படாது. மற்ற 25 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய இருக்கிறார்.

    இந்த பள்ளியில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று அகமதாபாத்தில் வாக்கிற்காக ஓட்டம் என்ற பெயரில் மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதற்கான வழிப்புணர்வு ஓட்டமாக இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

    2014 மற்றும் 2019-ல் பா.ஜனதா 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தற்போது முழுமையாக கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளது.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    • எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது.
    • பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது.

    குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    எனது சகோதரரை இளவரசர் (Shehzada) என பாஜகவினர் அழைக்கின்றனர். இந்த 'இளவரசர்' குமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்து, மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மறுபுறத்தில் (Shehanshah) 'ராஜாதிராஜா' நரேந்திர மோடி அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். தொலைக்காட்சியில் அவரை பார்த்திருக்கிறீர்களா? அவரது முகத்தில் ஒரு துளி தூசியைக் கூட பார்க்க முடியாது. அவரால் எப்படி மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்?

    பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது அல்லது விவசாயம் எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை அவர் எப்படி புரிந்துகொள்வார்?

    எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. இதெல்லாம் மோடிக்கு புரியாது. அவர் கோட்டைக்குள் உள்ளார். அதிகாரத்தால் சூழப்பட்டிருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை. யாரேனும் குரல் எழுப்பினால், அதை அடக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது,
    • அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    குஜராத் மாநிலம் தஹோத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கடவுள் ராமர் கற்பனையே. வரலாற்று ரீதியாக அல்லது அறிவியல்பூர்வமாக அவர் இருந்ததற்கான எந்த சான்றுகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

    அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி கடவுள் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான வழியை ஏற்படுத்தினார். 10 நாட்கள் சடங்குகளுக்குப் பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்றது.

    நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூளையாக செயல்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது, அடுத்த நாளே அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி அங்கே சென்றார்.

    அப்சல் குருவுக்கு ஆதரவான துண்டாக்க விரும்பும் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்தார். அவருடைய கட்சி அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு (கணையா குமார் வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்) மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அவர்கள் தேச விரோத சக்திகளுடன் இல்லையா? அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா?

    அம்பேத்கர் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது, சமூக நீதிக்காக இடஒதுக்கீடு எனக் கூறியதை பிரதமர் மோடி மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

    எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இது நமது அரசியலமைப்ப சூறையாடுவதற்கு சமம். நாட்டை பலவீனப்படுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது.
    • இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

    நான் குஜராத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் நாம் புதிய சாதனை படைப்போம்.

    2014-ல் நீங்கள் என்னை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினீர்கள். குஜராத்தில் பணிபுரியும்போது குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று ஒரு மந்திரம் இருந்தது. நாட்டுக்கு என்ன நடந்தாலும் குஜராத் முன்னேற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.

    2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 24 மணிநேரமும் (24x7) உழைப்பேன் என்பது எனது உத்தரவாதம். 10 ஆண்டுகளில் 14 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தோம். காங்கிரஸ் கட்சியோ 60 ஆண்டுகளில் வெறும் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே கொடுத்தது.

    இந்தியாவில் இன்று காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கே பாகிஸ்தான் அழுகிறது.

    தற்போது காங்கிரசுக்காக பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது. 

    பாகிஸ்தானை பின்பற்றும் ரசிகனாக காங்கிரஸ் இருப்பது நமக்கு முன்பே தெரியும். பாகிஸ்தான் முன்னாள் மந்திரி காங்கிரசை பாராட்டுகிறார். பாகிஸ்தானுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான இந்த கூட்டு தற்போது முற்றிலும் அம்பலமாகி உள்ளது.

    2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க பலவீனமான காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

    இந்தியா கூட்டணி அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டது.

    ஒருபுறம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் பொதுப் பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா கூட்டணி, மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. அவர்களது எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


    ×