என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஒரே ஒரு ஓட்டு... 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்த வாக்காளர்
- தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.
- வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
குஜராத்:
பாராளுமன்ற தேர்தலில் நேற்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பனேஜ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் உறுதி செய்துள்ளார்.
கிர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பனேஜின் கோவில் பூசாரியான மஹந்த் ஹரிதாஸ், ஜூனாகத் பாராளுமன்ற தொகுதியின் கீழ் வரும் வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட ஒரே வாக்காளர் ஆவார். அவருக்காக தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.
நேற்று காலை 11 மணியளவில் மஹந்த் ஹரிதாஸ் வாக்களித்தன் மூலம் வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்