search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • அக்ஷய்ய திருதீயா புண்ய காலே
    • பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    தானம் அளிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...

    அக்ஷய்ய திருதீயா புண்ய காலே அக்ஷய்ய புண்ய ஸம்பாதனார்த்தம் (பித்ரு ப்ரீத்யர்த்தம்) தர்மகடாக்ய உதகும்ப தானமஹம் கரிஷ்யே..

    ஏஷ தர்மகடோ தத்தோ ப்ரும்ஹ விஷ்ணு சிவாத்மக: அஸ்ய) பரதாநாத் ஸகலா: மம ஸந்து மனோரதா:

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.
    • பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும்.

    மகாத்மாவான தருமரை, துரியோதனன் தன் தாய்மாமன் சகுனியின் உதவி கொண்டு சூழ்ச்சி செய்து சூதாட்டத்தில் தோற்கடித்தான். இதனால் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தது. அவர்கள் அஸ்தினாபுரத்தில் இருந்து திரவுபதியோடு வடக்கு நோக்கி யாத்திரையை தொடங்கினார்கள். அப்போது இந்திராதி தேவர்களும், வேதம் ஓதும் அந்தணர்களும் மற்றும் மிகுந்த பற்றுள்ள மக்களும் பாண்டவர்களின் பின் சென்றனர்.

    பஞ்சபாண்டவர்கள் அவர்களை நோக்கி, "உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். எனது அருமை மக்களே நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்" என்று வேண்டிக்கொண்டனர்.

    ஆனால் மக்களோ, பாண்டவர்களை நோக்கி பலவிதமாக புகழ்ந்தனர். அப்போது தருமர் அவர்களிடம், "நீங்கள் அன்பால் என்னை இவ்வாறு புகழ்கிறீர்கள். எங்களிடம் இல்லாத உயர்ந்த குணங்களை கூட எங்களிடம் உள்ளது போல் சொல்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். இருப்பினும் நீங்கள் திரும்பி செல்லுங்கள்" என்று கூறினார். பின்பு பஞ்ச பாண்டவர்கள், கங்கை கரையில் இருந்த பிரமாணக்கோடி என்னும் ஆலமரத்திற்கு அருகில் சென்று, அன்று இரவை அங்கேயே கழித்தனர்.

    அப்போதும் சில அந்தணர்களும் குறிப்பாக அக்னி ஹோதிரிகள் (தினமும் யாகம் செய்யக்கூடிய அந்தணர்களும்) மற்றும் அவர்களது உறவினர்களும் திரும்பி செல்லாமல் நூற்றுக்கணக்கில் பாண்டவர்களுடன் வந்தனர். அவர்களை நோக்கி தருமர், "ராட்சசர்கள் மற்றும் கொடிய மிருகங்கள் வசிக்கும் இந்த இடத்தில் எங்களுடன் ஏன் வருகிறீர்கள்" என்று கேட்டாலும், அவர்களின் அன்பான பேச்சால் மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் ஒரு காரியம் அவர் மனதை நெருடியது. "சன்னியாசிகளும், அந்தணர்களும், உறவினர்களும் நம்முடன் வருகின்றனர். இவர்களின் பசியை போக்க வேண்டியது எனது கடமை. தர்ம சாஸ்திரத்தில் விதித்தபடி தேவர்களுக்கும், நம்மை தேடி வந்த விருந்தினர்களுக்கும், நாய்களுக்கும், காக்கைக்கும், அன்னம் இடாவிட்டால் மகா பாவம். எனவே இதற்கு என்ன செய்யலாம்" என வருத்தப்பட்டார்.

    அப்போது சவுனகர் என்ற மகா முனிவர் அங்கு வந்தார். அவர் தருமரை நோக்கி, "தவத்தின் மூலம் உன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியும். யோக சித்தியை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தவத்தின் மூலம் அடைய முடியாதது எதுவுமில்லை" என்றார்.

    இதையடுத்து தருமர் தன் புரோகிதரான தவுமியரிடம் ஆலோசனை கேட்டார். தவுமியரோ, "தர்ம ராஜாவே.. பிராணிகள் எல்லாம் ஒரு சமயம் கடும் பசியால் துன்பமடைந்த பொழுது, சூரியபகவான் அந்த ஜீவன்கள் மேல் இரக்கம் கொண்டு பூமியில் மேக ரூபமாக மாறி மழை நீரை வெளிப்படுத்தினார். அந்த மழை நீரால் பூமி செழித்து, அனைத்து ஜீவ ராசிகளின் பசியும் தீர்ந்தது. சூரியன் அன்ன ரூபம் ஆனவர். அனைத்து உயிரையும் காக்கக்கூடியவர். எனவே நீ அவரை நோக்கி தவம் செய்" என்றார்.

    தருமரும் ஒரு மனதுடன் அன்ன ஆகாரம் இன்றி சூரிய பகவானின் விசேஷமான 108 நாமத்தை கூறி தவம் இயற்றினார். பின்னர் சூரிய பகவானை நோக்கி, "12 ஆதித்யர்களும், 11 ருத்திரர்களும், அஷ்டவசுக்களும், இந்திரனும், பிரஜாபதியும், ஆகாசத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களும், உங்களை ஆராதித்து சித்தி அடைந்தனர். தங்களை ஆராதிப்பதால் ஏழு வகை பித்ருக்களும் திருப்தி அடைகின்றனர். தாங்கள் எனக்கு உதவ வேண்டும்" என்று தருமர் கேட்டுக் கொண்டார்.

    அதற்கு சூரிய பகவான், "தர்மராஜா.. நீ வேண்டியது அனைத்தும் உனக்கு கிடைக்கும்படி செய்கிறேன். இப்பொழுது நான் தரும் பாத்திரம் உனக்கு 12 ஆண்டு வரை சக்தி உள்ளதாக இருக்கும். இந்த பாத்திரத்தை பெற்றுக்கொள். இதில் நீ இடும் பழமோ, கிழங்கோ, கீரையோ, காய்கறிகளோ அல்லது அவற்றை கொண்டு தயார் செய்த உணவோ, தான் உண்ணாமல் திரவுபதி அந்த உணவை பரிமாறிக் கொண்டே இருக்கும் வரை, அது வளர்ந்து கொண்டே இருக்கும். இன்றைய தினத்தில் இருந்து நீ இதை பயன்படுத்தலாம்" என்றார்.

    தருமரும் ஒரு அடுப்பு மீது அந்த பாத்திரத்தை வைத்து சமையல் தயார் செய்தார். அதில் தயாரித்த உணவு சிறிய தாக தோன்றினாலும், அந்த பாத்திரத்தின் சக்தியால் அது வளர்ந்து கொண்டே இருந்தது. அங்கிருந்த அனைவருக்கும் உணவளித்த பிறகு மீதமிருந்த அன்னத்தை பிரசாதமாக தருமரும் மற்றவர்களும் சாப்பிட்டனர். இறுதியாக திரவுபதி சாப்பிட்டாள். அட்சய பாத்திர மகிமையால் அங்கிருந்த அனைவரும் பசி நீங்கி மகிழ்ந்தனர். 

    தருமர், மற்றவர்களின் பசியை தீர்க்க சூரிய பகவானிடம் இருந்து, சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அன்று அட்சய பாத்திரம் பெற்றதால் அந்த தினம் 'அட்சய திருதியை' என அழைக்கப்பட்டது.

    'அட்சயம்' என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த திருதியை மிக விசேஷமானது. அன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளோ, அபிஷேகமோ, ஜபமோ, ஹோமமோ மற்ற நாட்களை விட பல மடங்கு உயர்ந்த பலன்களைத் தரும். அன்றைய தினம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் போன்றவை நமக்கு குறைவற்ற செல்வத்தை பெற்றுத் தரும். சிலர் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் அது தானத்தையும், தர்மத்தையும் தான் சிறப்பாக சொல்லியுள்ளது.

    முன்னோர்களின் (பித்ருக்களின்) பிரீதிக்காக நீர் நிறைந்த ஒரு செப்பு பாத்திரத்தை தானம் செய்வார்கள். இதற்கு 'தர்மகட தானம்' என்று பெயர். இதனால் நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் தாகமின்றி இருப்பார்கள். ஒரு செப்பு பாத்திரத்தில் அல்லது கலசத்தில் நல்ல நீரை நிரப்பி ஏலக்காய் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து அதற்கான மந்திரத்தை சொல்லி தானம் அளிப்பது மிகச் சிறப்பானது. 

    இந்த நாளில் எந்தவிதமான பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல் அனைவருக்கும் அன்னதானம் அளிப்பது உயர்ந்த பலனை தரும். மேலும், பசு, பட்சிகளுக்கு உணவளிப்பதும், தண்ணீர் அளிப்பதும் அளவற்ற புண்ணியத்தை தேடித்தரும். இறந்த முன்னோர்களுக்கு நல்ல கதி உண்டாகும். வேதம் படித்த பெரியோர்களுக்கு குடை, விசிறி, நீர் மோர் போன்றவை அளிப்பார்கள். மேலும் அட்சய திருதியை அன்று தான் கிரத யுகம் ஆரம்பித்த நாள். எனவே அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    - 'ஜோதிட சிம்மம்' சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • 108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை.
    • சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம்.

    தாண்டவம் என்பதை வடமொழியில் நிருதயம் என்பர். தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் வெவ்வேறு உறுப்புகளும் இயங்குவது தாண்டவம். சிவன், காளி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் தாண்டவங்களை நிகழ்த்தி உள்ளனர் என்பதை புராணங்கள் மூலம் அறிகிறோம்.

    108 சிவ தாண்டவங்களுள் ஏழு வகைத் தாண்டவங்கள் சிறப்புடையவை எனப்படுகிறது. அவை காளிகா தாண்டவம், சந்தியா தாண்டவம், கவுரி தாண்டவம், சங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், ஆனந்தத் தாண்டவம் என்பன. இவை ச, ரி, க, ம, ப, த, நி என்ற சப்த (7) சுரங்களிலிருந்து தோன்றியவை. பஞ்ச சபைகளில் ஆடியவை, சிவனது நடன சபை (அரங்குகள்) ஐந்து. திருநெல்வேலி தாமிர சபையில் ஆடியது. காளிகா தாண்டவம். மதுரை வெள்ளியம்பலத்தில் ஆடியது சந்தியா தாண்டவம்.

    பாண்டி நாட்டுத் திருப்புத்தூரில் ஆடியது (சிற் சபையில்) கவுரி தாண்டவம். இருண்ட நள்ளிரவில் சங்கார தாண்டவம், திருக்குற்றால சித்திர சபையில் திரிபுர தாண்டவம்; திருவாலங்காட்டு ரத்தின சபையில் ஊர்த்துவ தாண்டவம் (காளியுடன் போட்டியிட்ட தாண்டவம்), ஆனந்தத் தாண்டவம் தில்லை பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) ஆடியவை.

    சிவாய நம என்பது சூட்சம பஞ்சாட்சரம். துடியேந்திய கையில் 'சி' எழுத்தும், வீசிய கரத்தில் 'வா' என்ற எழுத்தும் அபய கரம் 'ய' என்ற எழுத்தையும் தீச்சுடர் ஏந்தியகரம் 'ந' என்ற எழுத்தையும் திருவடியின் கீழ் உள்ள முயலகன் 'ம' என்ற எழுத்தையும் பொருத்திக் காணலாம்.

    துடி ஏந்திய வலக்கரம் படைத்தல் தொழிலையும், அபயகரம் காத்தலையும், தீச்சுடர் ஏந்திய கரம் அழித்தலையும், மற்றொரு கரம் உயிர்களுக்கு முக்தி அருளும் திருவடியையும் காட்டுகிறது. முயலகனை மிதித்துள்ள திருவடி அருள் புரிதலையும் குறிப்பிடுவதாகும். இவ்வாறு சிவாயநம என்ற ஐந்தெழுத்தும் நடராஜர் திருஉருவத்தில் உள்ள தத்துவங்களாகும்

    • வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள்.
    • தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை.

    விளக்குகள் பலவிதம் உண்டு. பித்தளையில் தயாரிக்கப்படும் விளக்கு தான் மிகவும் சிறந்தது. பழைய காலத்தில் பித்தளையில் செய்த விளக்கைத்தான் அனைவரும் பயன்படுத்தினார்கள்.

    இக்காலத்தில் ஸ்டீல் விளக்கு, வெள்ளி விளக்கு முதலியவை உண்டு. மாலை வேளையில் விளக்கேற்றுவதற்கும், விசேஷ நாட்களில் விளக்கேற்றுவதற்கும், தொடக்க விழாக்களுக்கும், திருமணம் போன்ற சடங்குகளுக்கும் பித்தளையில் தயாரிக்கப்பட்ட விளக்குகளையே பயன்படுத்துகிறார்கள். 

    விளக்குகளில் குத்துவிளக்கு (சாதாரண விளக்கு, ஐந்து திரி விளக்கு, ஏழு திரி விளக்கு), தொங்கும் விளக்கு, கோல் விளக்கு, சங்கிலிவட்ட விளக்கு என்று பலவகைகள் உண்டு.

    வீடுகளில் மாலை நேரங்களில் விளக்கேற்றுவதற்கு குத்துவிளக்கைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் ஐந்து திரி விளக்கேற்றுவார்கள். கோல் விளக்கு, கோவில்களில் இறைவன் எழுந்தருளும் வேளைகளில் ஏற்றி வைப்பார்கள்.

    தொங்கும் விளக்குகளைச் சாதாரணமாக வீடுகளில் ஏற்றுவதில்லை. இவை பொதுவாக கோவில்களில் மட்டுமே ஏற்றப்படும். அஷ்டமங்கள காரியங்களுக்கு சங்கிலிவட்ட விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    • திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-25 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அமாவாசை காலை 9.19 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : பரணி பிற்பகல் 2.11 மணி வரை பிறகு கிருத்திகை

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. சிறுத்தொண்டர் நாயனார் குரு பூஜை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-ஒற்றுமை

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-சுகம்

    துலாம்- அசதி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- வரவு

    மகரம்-தனம்

    கும்பம்-வெற்றி

    மீனம்-அனுகூலம்

    • மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
    • துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது.

    ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் கட்டாயம் இருக்க வேண்டும். துளசி செடியை வைத்து வளர்த்து வழிபட வேண்டும். குளித்து முடித்தபின் தூய நீரும், பாலும் விட்டு துளசியை வளர்க்க வேண்டும். தினமும் வலம் வந்து வழிபட வேண்டும். மாலையில் துளசிக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். விசேஷ நாட்களில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.

    இப்படியெல்லாம் பக்தியுடன் வழிபட்டால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள். உயர்ந்த நிலையை அடைவார்கள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும். துளசி இலை விஷங்களை முறிக்கக்கூடிய தன்மை படைத்தது. துளசிக்காற்றுப்படும் இடத்தில் விஷ ஜந்துக்களோ, விஷக் காற்றோ இருக்காது என்பது வைத்திய சாஸ்திரம்.

    • கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
    • அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சித்திரை மாத அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சித்திரை மாத அமாவாசையான இன்று (7-ந்தேதி) அதிகாலை சென்னை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் மலையடி வாரமான தாணிப்பாறைக்கு வந்து காத்திருந்தனர். காலை 6 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டது. முன்னதாக பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

     

    சதுரகிரி மலையேற அடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்களை காணலாம்.

    சதுரகிரி மலையேற அடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்களை காணலாம்.

    மலைப்பாதை மற்றும் கோவில்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக மலைப் பாதைகளிலும் கோவில் பகுதியிலும் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்திருந்தனர்.

    பலர் முடி காணிக்கை செலுத்தினர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் 10 மணிக்கே சாமி சரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து இறங்கினர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறையில் இருந்து மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    • 8-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
    • 12-ந்தேதி திருநெல்வேலி புட்டபுரத்தி அம்மன் உற்சவம்.

    7-ந்தேதி (செவ்வாய்)

    * அமாவாசை.

    * நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம் சாற்று விழா.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (புதன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கரி நைவேத்தியம்.

    * திருவரங்கம் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.

    * காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

     

    9-ந்தேதி (வியாழன்)

    * வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப பல்லக்கில் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வெள்ளி)

    * திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்.

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகம் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (சனி)

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு.

    * சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் உலா.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத உற்சவம்.

    * தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி புட்டபுரத்தி அம்மன் உற்சவம்.

    * சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியிலும், இரவு மேற்கு ரத வீதியிலும் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் வைகாசி விசாச உற்சவம்.

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

    * சிவகாசி விஸ்வநாதர் புஷ்ப சப்பரம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டில் எளிமையாக வழிபட விரும்புபவர்கள் ஸ்ரீ யோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
    • தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து வைத்து வழிபடுவது மிகமிக சிறப்பாகும்.

    பவுமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய் கிரகத்துக்குப் பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பவுமாஸ்வினி புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று

    செவ்வாய்க்கிழமை பவுமா அஸ்வினி தினமாகும். மிகவும் அரிதான இந்த நாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான விரைவான நன்மைகளைத் தரும். குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரமும் ஸ்ரீ நரசிம்மரை தேவதையாகக் கொண்ட செவ்வாய் கிழமையும் ஒன்று சேரும் தினமான இன்று நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

    வீட்டில் எளிமையாக வழிபட விரும்புபவர்கள் இன்று காலை ஸ்ரீ யோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அப்போது தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து வைத்து வழிபடுவது மிகமிக சிறப்பாகும்.

    பூஜை முடிந்ததும் அந்த நிவேதனத்தை சுமார் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குத் தந்து சாப்பிடச் செய்யலாம். மேலும் எப்போதும் ஆத்ம விசாரம் செய்துகொண்டு தியானம் செய்து கொண்டிருக்கும் ஞானிகளை அவரது சமாதியை வணங்கி அனுக்கிரகம் பெறலாம். இதனால் சிறந்த ஞாபக சக்தியும், படிப்பில் அறிவில் முன்னேற்றமும் கிடைக்கும்.

    • இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது.
    • காலை புனித நீராடி விட்டு கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி புண்ணியகால எமதர்ப்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்ய வேண்டும்.

    இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது.நமது பாவங்களை எளிதாக போக்கிக் கொள்ள நம் சாஸ்திரங்களில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் எமதர்ப்பணமும் ஒன்று. இந்த எமதர்ப்பணத்தை கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி திதி நாளில் செய்வது மிகவும் நல்லது.

    இன்று கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி தினமாகும். இன்றைய தினமானது சூர்ய கிரகணத்திற்குச் சமமானது. இன்று எம தர்ப்பணம் செய்வதால் நாம் பிறந்தது முதல் செய்துள்ள அனைத்து பாவங்களும் விலகும்.

    காலை புனித நீராடி விட்டு கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி புண்ணியகால எமதர்ப்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்ய வேண்டும். எமன் அனைத்து ஜீவனையும் அடக்குபவர். பித்ருக்களுக்கும் தர்மங்களுக்கும் அரசன். விவஸ்வான் என்னும் சூரியனின் மகன், கையில் தண்டத்தைப் பிடித்திருப்பவர், காலனின் வடிவம். பிரேதங்களுக்குத் தலைவன், மரணத்தை அளிப்பவன், பாவங்களை போக்குபவன், கிருதாந்தகனான எமன் எனக்கு மங்களத்தை அளிக்கட்டும்.

    கருப்புமலைக்கு ஒப்பானவரே ஸ்ரீ ருத்ரனின் கோபத்தில் இருந்து தோன்றியவரே! காலத்திற்குத் தகுந்தவாறு தண்டனையை அளிக்க கையில் தண்டத்தைத் தாங்கியவரே! செல்வங்களுக்கு அதிபதியே விவஸ்வானின் மகளான வைவஸ்வத மகாராஜ இவ்வாறு சொல்லி தர்ப்பணம் செய்வதால் அனைத்து நன்மைகளும் கிட்டும். நோய்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும்.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
    • வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு சித்திரை-24 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தசி காலை 11.17 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம் : அசுவினி பிற்பகல் 3.18 மணி வரை பிறகு பரணி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் பொங்கல் விழா. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சிம்ம வாகனத்தில் பவனி. உய்யக் கொண்டான் சிறுவயல், பொன்னழகியம்மன் சிறப்பு வழிபாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    மேஷம் - பிரீதி

    ரிஷபம் - நன்மை

    மிதுனம் - தெளிவு

    கடகம் - புகழ்

    சிம்மம் - ஓய்வு

    கன்னி - ஆர்வம்

    துலாம் - திறமை

    விருச்சிகம் - உறுதி

    தனுசு - இன்பம்

    மகரம் - ஆக்கம்

    கும்பம் - உற்சாகம்

    மீனம் - வரவு

    • மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
    • அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு.

    அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள். பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.

    கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.

    நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். அது விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு. அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.

    முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியங்கள். உங்களுக்கு தெரிந்த விஷ்ணு&லட்சுமி, சிவன்&பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    குசேலரின் கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.

    அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.


    உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்து வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம். நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.

    அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது. பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.

    இல்லோதருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.

    ×