search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார். அதனால் எச்.டி.ரேவண்ணா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவாரா? இல்லையா? என்பது இன்று தெரியவரும்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும் நொறுக்குத்தீனி உணவு வகைகளில் ஒன்று 'வடா பாவ்'. குறிப்பாக தெருவோர கடைகளில் இவற்றின் விற்பனை அதிகளவில் நடைபெறும்.

    டெல்லியில் உள்ள மோங்கோல்புரி பகுதியில் வடா பாவ் கடை நடத்தி வரும் இளம்பெண் சந்திரிகா தீட்சித் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். 'வடா பாவ் கேர்ள்' என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் தனது கடைக்கு அருகே சிறப்பு 'வடா பாவ்' திருவிழா நடத்தினார். அப்போது சாலையில் ஏற்பட்ட கூட்டத்தால் டெல்லி போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் தற்போது சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், காரை ஓட்டி வரும் சந்திரிகா கையில் வடா பாவுடன் இறங்கும் காட்சிகள் உள்ளன. அந்த காரின் மதிப்பு ரூ.70 லட்சத்திற்கு மேல் இருக்கும்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருவேங்கைவாசல் பகுதியில் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் மற்றும் பிடாரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் நடைபெறும் பவுர்ணமி விழாவானது மிகவும் பிரசித்தி பெற்றது

    இங்கு இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா காப்புக் கட்டுதலுடன் கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சாமி திருவிதி உலா மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அப்போது அங்கு அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்த வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து அவர் நடனமாடி உற்சாகமூட்டினார். அவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும்.
    • மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌.

    அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொறு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் நாள் திருதியை திதியில் அட்சய திருதியை சுப தினமாக கொண்டாடப்படுகிறது.

    அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும். அதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.

    தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான்.

    இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

    அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.

    அதன்படி, மே 10ம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

    இரு தினமும் காலை 5.33 மணி முதல் மதியம் 12.18 மணி வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.

    இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு லலிதா ஜூவல்லரி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, தங்க நகைகள் மீதான சேதாரம் ஒரு சதவீதம் குறைத்து சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வைர நகைகள் மீது கேரட்டுக்கு ரூ.5 ஆயிரம் குறைக்கப்படுகிறது.

    இந்த சலுகை கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நாளை தினம் அட்சய திரிதியை என்றாலும், இந்த சலுகை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து லலிதா ஜூவல்லரி அறிவித்துள்ளது.

    • கோலார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக வயதானவர்கள் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு நகரில் மாலை நேரத்தில் கொட்டிய மழை காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சுரங்கப்பாதைகள், நடைபாதைகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதே போல் குடகு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குடகு மாவட்டம் மடிகேரி பகுதியில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மழையில் நனைந்தபடி விளையாடினர்.

    இதே போல் கோலார் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான கடைகளின் மேற் கூரைகள் பறந்து சென்றன. முலப்பாகிலு தாலுகா ஹனுமனஹள்ளியில் 13.4 செ.மீ மழை பெய்தது. இந்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு வீடுகளை சூழ்ந்தும் மழை தண்ணீர் நின்றது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

    இதற்கிடையே மேலும் 2 நாட்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழைக்கு முந்தைய மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இதே வானிலை நீடிக்கும். பகலில் வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
    • நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆண்டிபட்டி, வருசநாடு, கூடலூர், பெரியகுளம், தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உள்ளது 3 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடி திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடியாக உள்ளது. 50 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 2.6, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 7.4, சண்முகாநதி அணை 19.4, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 23, வீரபாண்டி 24, ஆண்டிபட்டி 6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • நிஷாத் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்றார்.
    • தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள தானாடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வர் நிஷாத் (வயது 33). இவர் நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்கு சென்றார். குளத்தின் கரையில் நின்று மந்திரங்களை உச்சரித்த நிஷாத், திடீரென கத்தியை எடுத்து தனது நாக்கை அறுத்தார். பின்னர் அதை கரையில் உள்ள கல்லில் வைத்தார்.

    அதை தொடர்ந்து, நிஷாத் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்றார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிராமத்தினர், நிஷாத்தின் மனைவி வாய் பேச முடியாதவர் என்றும், அவருக்கு பேச்சு வர வேண்டும் என வேண்டி நிஷாத் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி இருக்கலாம் என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்டன.
    • இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    தர்மசாலா:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 13 ஆட்டங்களே மீதமுள்ளன. இருப்பினும் அதிகாரபூர்வமாக எந்தவொரு அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்றை நெருங்கி விட்டன.

    அடுத்த சுற்று வாய்ப்புக்கு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி

    பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிபிடித்து புதிய சரித்திரம் படைத்த பஞ்சாப் அணி தர்மசாலாவில் அரங்கேறிய கடந்த லீக் ஆட்டத்தில் 28 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

    தனது எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இருக்கும் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா-சாவா போன்றதாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும்.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங் (315 ரன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ரபடா, ராகுல் சாஹர், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார்.

    தங்களது உள்ளூர் மைதானங்களான முல்லாப்பூரில் 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 4 தோல்வியும், தர்மசாலாவில் ஒன்றில் ஆடி அதில் தோல்வியும் கண்டுள்ள பஞ்சாப் அணி சொந்த மைதானத்தில் தங்களது பரிதாப நிலையை மாற்ற முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    பெங்களூர் அணி

    இதேபோல் பெங்களூரு அணியும் 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர முடியும் என்ற நிலையில் உள்ள அந்த அணிக்கு இந்த ஆட்டம் தலைவிதியை முடிவு செய்யக்கூடியது எனலாம்.

    முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டு பெருத்த சரிவை சந்தித்த பெங்களூரு அணி கடந்த 3 ஆட்டங்களில் வரிசையாக ஐதராபாத் மற்றும் குஜராத்தை 2 முறை அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடனும், எழுச்சியுடனும் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 542 ரன்கள்), கேப்டன் டுபிளிஸ்சிஸ் (352), தினேஷ் கார்த்திக், ரஜத் படிதார், வில் ஜாக்சும், பந்து வீச்சில் யாஷ் தயாள், முகமது சிராஜ், கரண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக்கும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும்.

    எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 15 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார் அல்லது ராகுல் சாஹர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், ரபடா.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள் அல்லது ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல்.
    • வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளது.

    சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
    • பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெப்ப அலை வீசுவதால் வெளியில் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    நெல்லையில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் அனலாக சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு தவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லையில் நேற்று முன்தினம் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்கள். அப்போது நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பச்சைக்கிளி மயங்கி விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் அந்த கிளியை எடுத்து சென்று, சக போலீஸ்காரர்கள் உதவியுடன் அங்குள்ள குடிநீர் தொட்டியில் வைத்து தண்ணீர் தெளித்தார்.

    அதற்கு தண்ணீரும் பருக கொடுத்தார். இதையடுத்து கண் விழித்த கிளி தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்தி கொண்டு பறக்க தயாரானது. அதற்கு பொரிகடலையை போலீசார் வழங்கினர். அவற்றை உண்ட பின்னர் கிளி பறந்து சென்றது. வெயிலில் மயங்கிய பச்சைக்கிளிக்கு தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய நிகழ்ச்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    • தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.
    • தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.

    வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை தருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, வருகிற 10-ந்தேதி (நாளை), 11-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந்தேதி (நாளை) 425 பஸ்களும், 11-ந்தேதி (சனிக்கிழமை) 505 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10-ந்தேதி மற்றும் 11-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதே போன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 985 பயணிகளும், சனிக்கிழமை பயணம் செய்ய 6 ஆயிரத்து 482 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 237 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×