search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல். திருவிழா 2024

    • கொல்கத்தா அணியின் பில் சால்ட் 68 ரன்களை குவித்தார்.
    • டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

    154 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 68 மற்றும் 15 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

    இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 33 மற்றும் 26 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
    • 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக மயங்க் அகர்வால் விளையாடி வருகிறார். இவர் இரண்டு போட்டிகளில் களம் இறங்கி அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 155 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினார்.

    அதிவேகமாக பந்து வீசினாலும், துல்லியமாக பந்து வீசினார். இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்தில் ரன்கள் குவிக்க திணறினார். இரண்டு போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    ஆனால், 3-வது போட்டியில் ஒரு ஓவர் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். இந்த நிலையில் நாளை மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் விளையாட அனைத்து வகையிலான டெஸ்டிலும் தேர்ச்சி பெற்று விட்டனர் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் மோர்கல் தெரிவித்துள்ளார்.

    புள்ளிகள் பட்டியலில் லக்னோ 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    • ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அஸ்வின் பந்து வீசுவதில்லை
    • டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பந்து வீசினால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தான் அழுத்தம் ஏற்படும்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

    அஷ்வின் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறார்.

    இந்நிலையில் அஸ்வினின் பந்துவீச்சு இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கவலை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் அஷ்வின் விக்கெட் வீழ்த்தும் பந்துகளை தவிர்த்து வருகிறார். ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அவர் பந்து வீசுவதில்லை. எனவே என்னை பொறுத்தவரை இனிவரும் போட்டிகளில் நான் அவரை சேர்க்க மாட்டேன். சொல்லப் போனால் அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

    • கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

    கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டெல்லி அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. டெல்லி அணி இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி, ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    டெல்லி அணி விளையாடிய கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    • பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும்.
    • 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் 2024 சீசனில் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படுகிறது. 200 ரன்கள் எளிதாக அடிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் ஆறுமுறை 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 262 இலங்கை எட்டிப்பிடித்தது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 212 ரன்கள் குவித்தது. பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 134 ரன்னில் சுருண்டது.

    இந்த போட்டிக்குப்பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மினஸ் கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதுதான். தற்போது இந்த ஐபிஎல் தொடரில் முற்றிலும் புதிய லெவலுக்கு சென்றுள்ளது. இந்த லெவலை அமைக்கும்போது, நாம் உண்மையிலேயே ஆக்ரோஷமாக விளையாடும் சில வீரர்களை பெற்றிருந்தால், அதற்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மேலும், தொடரில் வெற்றி பெற முடியும்.

    வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகப்பெரிய அளவில் பந்து வீச்சு ஆப்சனை பெறவில்லை. பந்து ஸ்விங் ஆகும் வகையில் இது டெஸ்ட் கிரிக்கெட் அல்ல. ஆடுகளமும் மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருப்பதில்லை.

    இதனால் பெரும்பாலான நேரங்களில் முயற்சி செய்வதும், குறைந்த ரன்கள் கொடுக்க முயற்சிப்பதும் விக்கெட் எடுப்பதற்கு சிறந்த வழி. பேட்ஸ்மேன்கள் சிறந்த முறையில் பந்தை அடிக்க தொடங்கிவிட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு சவாலானதாக இருக்கும். அதேவேளையில் 270 முதல் 280 ரன்கள் அடித்துவிட்டால், பந்து வீச்சாளர் சராசரியாக 9 ரன்கள் வரை விட்டுக்கொடுக்க இயலும். இது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்.

    நாங்கள் சேஸிங் செய்யும் வகையில் நன்றாக தயாராகி இருந்தோம். ஆனால், இதுவரை எங்களுக்கு சிறந்த வகையில் அமையவில்லை. அந்த விசயத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    • ஐதராபாத் அணிக்கு ஏய்டன் மார்க்ரம் 32 ரன்களை குவித்தார்.
    • தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

    டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    213 ரன்களை துரத்திய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா முறையே 13 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

    இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் நிதானமாக ஆடினார். இவர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதிஷ் குமார், கிளாசன் முறையே 15 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்தது.

    இதன் காரணமாக ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை சார்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளையும், பத்திரனா மற்றும் முஸ்தாஃபிசுர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர்.
    • புவனேஷ்வர் குமார் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில்பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெறும் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

    டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • சென்னை அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • ஐதராபாத் அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெறும் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணி இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஐதராபாத் அணி எட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணியும், தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ஐதராபாத் அணியும் களமிறங்குகிறது. 

    • முதலில் ஆடிய குஜராத் 200 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் சாய் சுதர்சன் 84 ரன்கள் எடுத்தார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்களை குவித்தது. அதிரடியில் மிரட்டிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 பந்தில் 58 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்தார்.

    பெங்களூரு அணி சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் களமிறங்கினர். டூ பிளசிஸ் 12 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து விராட் கோலியுடன் வில் ஜாக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். மோகித் சர்மா வீசிய 15வது ஓவரில் வில் ஜாக்ஸ் 29 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், பெங்களூரு அணி 16 ஓவரில் 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 41 பந்தில் 10 சிக்சர், 5 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். விராட் கோலி 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் நடப்பு தொடரில் பெங்களூரு அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது.

    • குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார்.
    • ஸ்வப்னில் சிங், சிராஜ், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்களான ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 30 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடனும், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார்
    • அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும்

    இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை டோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த டோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.

    ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று டோனி நேரடியாக கூறிவிட்டதாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

    ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். அதனால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி டோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ×