search icon
என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளை.
    • எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செக் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்வர ராவ். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திராவில் உள்ள ஓங்கோ என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், மறுநாள் காலை பணிப்பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து பணிப்பெண் வெங்கடேஷராவிடம் கூறியதை அடுத்து, அவர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பிறகு, சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்துக் கொண்டு பெண் வேடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவர்களின் தனித்துவமான உடையின் காரணமாக "சுடிதார் கும்பல்" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவர்கள் எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மே 18 ஆம் தேதி அதிகாலையில் சுடிதார் மற்றும் முகமூடி அணிந்த இரண்டு ஆசாமிகள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தது தெரியவந்தது.

    இதில், 12 சவரன் தங்கம், ரூ. 1 லட்சம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.
    • விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், புவனகிரி பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.

    லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
    • ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பள்ளி சிறுவன் பந்துவீச பேட் கம்மின்ஸ் பேட்டிங் செய்கிறார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தடுமாறி வந்த நிலையில் புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற பேட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்குள் கொண்டு போயுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் ரூ.20.50 கோடிக்கு பேட் கம்மின்சை ஹைதராபத் அணி ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 ஆவது வீரர் என்ற பெருமையை அப்போது அவர் பெற்றார். ஆனால் இவ்வளவு தொகை கொடுத்து அவரை எடுக்க வேண்டுமா என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால் அந்த விமர்சனத்தை தவிடுபொடியாக்கி ஹைதராபாத் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அவர் கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள பல ஒற்றைத் திரை கொண்ட தியேட்டர்கள் 10 நாட்களுக்கு மூடப்படுகிறது.
    • 2 திரைகளுக்கு மேல் உள்ள வணிக வளாக தியேட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் இந்த கோடை விடுமுறையில் லாபத்தை அள்ளி தரக்கூடிய சினிமா படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் ஆந்திராவில் நடந்த பொது தேர்தல் ஆகியவற்றின் தாக்கத்தால் பொதுமக்கள் சினிமா தியேட்டர்களுக்கு வருவதை தவிர்த்தனர்.

    இதனால் சினிமா பார்க்க ஆளில்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடின. கடந்த 2 மாதங்களாக சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் பெரிய லாபத்தை தர தவறிவிட்டன. மேலும் தேர்தல் காரணமாக முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    சினிமா தியேட்டர்களில் வருமானம் குறைந்ததால் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள பல ஒற்றைத் திரை கொண்ட தியேட்டர்கள் 10 நாட்களுக்கு மூடப்படுகிறது.

    வருகிற 14-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தொடர்ந்து சினிமா தியேட்டர்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். 2 திரைகளுக்கு மேல் உள்ள வணிக வளாக தியேட்டர்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

    பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளிவர உள்ள கல்கி 2898 கி.பி மற்றும் அல்லு அர்ஜுனனின் புஷ்பா-2, தி ரூல் போன்ற பான் இந்தியா திரைப்படங்கள் மூலம் தெலுங்கு சினிமா மீண்டும் வசூலில் களைகட்டும் என சினிமா துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்திலும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.
    • தேர்தலுக்குப் பிறகு தெலுங்கானாவிலும் இதேபோல பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி வாக்கு பதிவு நடந்தது.

    இதில் பா.ஜ.க. வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் உள்ள சில தொகுதிகளில் வாக்காளர்கள் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக தெலுங்கானா பா.ஜ.க தலைவர் கிஷன் ரெட்டி கூறுகையில்:-

    சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து 20 ஆயிரம் முதல் 30,000 வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    ஒரு வாரத்திற்கு முன்பு வாக்காளர் சீட்டு பெற்றவர்கள் கூட தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தெலுங்கானாவில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் வேண்டுமென்றே வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாக்காளர் பட்டியலை உருவாக்குவதில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலில் முறைகேடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தில்லுமுல்லு நடந்தது. இது குறித்து முழுமையான தகவல்களை சேகரித்து வருகிறோம்.

    இதன் அடிப்படையில் முறையீடுகள் நடந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்திலும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.

    தேர்தலுக்குப் பிறகு தெலுங்கானாவிலும் இதேபோல பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்.
    • 2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது.

    ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ திட்டத்தில் 90 சதவீத பங்குகள் எல்&டி நிறுவனத்திடம் தான் உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் தான் தெலுங்கானா அரசிடம் உள்ளது. மெட்ரோ ரயில்களை இன்னும் 65 ஆண்டுகள் இயக்குவதற்கான உரிமை எல்&டி நிறுவனத்திடம் உள்ளது.

    பிசினஸ் டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்த எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன், "தெலுங்கானாவில் பேருந்துகளின் எண்ணிக்கை உயரவில்லை என்ற போதும், பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. பாலின பாகுபாடு ஏற்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது. மெட்ரோ திட்டம் லாபகரமானதாக இயங்க ஒரு நாளைக்கு 5 லட்சம் மெட்ரோ பயணிகள் பயணிக்க வேண்டும்.

    பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது.

    தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும்.

    • வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

    ஹைதராபாத் தொகுதியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அவர்களை மிரட்டி முகத்தைப் பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் நடவடிக்கை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அவர், "நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை, ஆனால் பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

    மாதவி லதா தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலில் இன்று 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பா.ஜ.க. வேட்பாளர் சோதனை செய்தார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அவர்களை மிரட்டி முகத்தைப் பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

    இவர் தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிய வேண்டாம் என்றும், ஃபார்மல் உடைகளை மட்டுமே ஊழியர்கள் அணிய வேண்டும்.
    • போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காக்கி சீருடை அணிந்த நிலையில் மற்ற ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் டெப்போக்களுக்கு சாதாரணமாக வருகின்றனர்.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக எம்.டி.வி.சி.சஜ்ஜனார் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிய வேண்டாம் என்றும், ஃபார்மல் உடைகளை மட்டுமே ஊழியர்கள் அணிய வேண்டும். மேலும், போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் காக்கி சீருடை அணிந்த நிலையில் மற்ற ஊழியர்கள் மாநகராட்சி மற்றும் டெப்போக்களுக்கு சாதாரணமாக வருகின்றனர்.

    இது ஒரு நிறுவனம். பணியிடத்தில் கண்ணியத்தைக் காக்க பணியாளர்கள் முறைப்படி சீருடையில் வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    • நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது.
    • தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள்.

    தெலுங்கான மாநில முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.

    அப்போது சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. தற்போது அனைத்து பிராந்திய கட்சிகளும் பலமாக உள்ளன. அவர்கள் ஒரு சக்தியாக வெளிப்படுவார்கள். இது என்டிஏ அல்லது இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் பிராந்திய கட்சிகள் அல்ல. அது போன்று நடக்காது. பா.ஜனதா தலைமையிலான என்டிஏ அல்லது காங்கிரஸ் தலைமையலான இந்தியா கூட்டணி பிராந்தியக் கட்சிகளின் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இது ஒரு தலைகீழ் விஷயமாக இருக்கும். நீங்கள் அதை பார்ப்பீர்கள்.

    தெலுங்கானாவில் கடந்த முறை 17 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரண்டு இலக்க எண் இடங்களில் வெற்றி பெறுவோம்.

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் மட்டுமே காங்கிரஸ் அளித்த வாக்குறுதியில் நிறைவேற்றியுள்ளது. அதுவும் பெரிய நகைச்சுவையாகிவிட்டது. பெண்கள் பேருந்துகளிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளிலும் (போராட்டம்) போராடுகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். எனது ஆட்சியில் மிகுந்த நம்பிக்கையைப் பெற்ற விவசாய சமூகமும் கடும் கோபத்தில் உள்ளது. இது மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என நினைக்கிறேன்.

    கடந்த முறை 4 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மக்களவை தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ.,வுக்கு ஒன்று அல்லது எதுவுமே கிடைக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • மோடி தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்.
    • டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடியும் அமித்ஷாவும் குஜராத் மட்டுமே இந்தியா என்று நினைக்கிறார்கள். அது தவறு இந்தியாவில் மற்ற மாநிலங்களும் உள்ளன. அவர்களுக்கும் உரிமைகள் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர்.

    மத்திய மந்திரி சபையில் தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. 42 தெலுங்கு பேசும் எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் ஒரே ஒரு மத்திய மந்திரி மட்டுமே உள்ளார்.

    குஜராத்தில் உள்ள 26 எம்.பி.க்களில் 7 பேர் மத்திய மந்திரிகளாகவும், உத்தரபிரதேசத்தில் 12 பேர் மத்திய மந்திரிகளாகவும் உள்ளனர்.

    அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியின் பார்வையில் தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்கள். இதை நான் தெளிவாக கூறுகிறேன்.

    அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.

    ஆனால் அந்த நிறுவனத்தை குஜராத்திற்கு வர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நான் முதல் மந்திரி நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். இந்த விவகாரத்தில் எப்படி செயல்படுவது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன்.
    • அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இளவரசர் (ராகுல் காந்தி), நீங்கள் சாம் பிட்ரோடா கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும். நமது நாட்டு மக்களவை நிறம் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு ஏற்றுக் கொள்ளாது. மோடி இதை உண்மையிலேயே பொறுத்துக் கொள்ளமாட்டார்.

    ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன். அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் உள்ளார். அவர்தான் இளவரசருக்கு வழிகாட்டி. கருப்பாக உள்ளவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறார். தற்போது, அவர்கள் திரவுபதி முர்முவை ஆப்பிரிக்கர் என நினைத்தார்கள் என்பது தற்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய தோல் கருமையாக இருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ×