என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சீனா
- உக்கரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
- சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமுமின்றி தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனும், மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்திக்க சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அங்கு உரையாற்றுகையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் ரஷ்ய படை திட்டமிட்டபடி உக்ரைனுக்குள் தொடந்து முன்னேறி வருவதாகவும், கார்கிவை கைப்பற்றுவது தங்களின் நோக்கமில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை ( BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேற்கு நாடுகளின் ஒன்றிணைந்த நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேரும் பட்சத்தில் உக்ரைன் வழியாக எளிதில் ரஷ்யாவுக்குள் நேட்டோ படைகள் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த போர் நடந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளுக்குமாக BUFFER ZONE உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- ரஷியா, சீன அதிபர்கள் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர்.
- அப்போது, உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.
பீஜிங்:
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேசினர். இருதரப்பு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்நிலையில் அதிபர் புதின், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக பேட்டியளித்தனர். கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சீனா, ரஷியா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது.
எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம்.
உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என தெரிவித்துள்ளது.
- இந்த சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.
- எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் சௌ சௌ இன நாய்க்கு கருப்பு வேலை பெயிண்ட் அடித்து பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.
ஆனால் இதற்காக நாங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் எனவும், நாம் முடிக்கு டை அடிப்பதுபோல்தான் இதுவும். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை' என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில் ஏஞ்சலா என்ற பெயர்கொண்ட மலேசிய சூரிய கரடி பார்ப்பதற்கு மனிதனை போல தோற்றமளித்ததால் பார்வையாளர்கள் அதை கரடி வேஷம் போட்ட மனிதன் என்று தவறாக புரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி வரை ஈட்டியுள்ளார்.
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் நேரலை வீடியோக்களில் வியூஸ்களை அதிகப்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்தி நான்கே மாதங்களில் ரூ. 3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சீன செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 7 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 544 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை பயன்படுத்தி நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் நான்கே மாதங்களில் 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி வரை ஈட்டியுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வாங், தனது நண்பர் பரிந்துரைத்த "பிரஷிங்" எனும் வழிமுறையை பின்பற்ற துவங்கி இருக்கிறார். நேரலையில் வியூவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, லைக், கமென்ட் செய்ய வைத்து உண்மையான பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே பிரஷிங் ஆகும்.
இந்த வழிமுறையை சாத்தியப்படுத்த வாங் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை வாங்கியுள்ளார். இவற்றை கிளவுட் சார்ந்த மென்பொருள் மூலம் கட்டுப்படுத்திய வாங் இதற்காக வி.பி.என். மற்றும் நெட்வொர்க் உபகரணங்களையும் வாங்கியுள்ளார். இவற்றைக் கொண்டு சில க்ளிக்குகளில் வாங் தனது 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களையும் ஒரே சமயத்தில் இயக்க முடிந்தது.
பிரஷிங் வழிமுறை கொண்டு வாங் நேரலையில் ஸ்டிரீம் செய்து பிரபலம் ஆக விரும்புவோரை குறிவைத்து நான்கே மாதங்களில் 4 லட்சத்து 15 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 46 லட்சத்து 55 ஆயிரத்து 571 வரை ஈட்ட முடிந்தது.
- தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார்.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனாலும் தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார். மேலும் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்திய அவர் வீட்டில் கணவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதில், படுக்கையில் விழித்திருக்கும் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கும் காட்சிகளும் கடந்த சில வருடங்களாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறும் காட்சிகளும் உள்ளது.
அப்போது அவரது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை மாதத்தில் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
சீனாவின் யுனான் மாகாணம் ஜென்ஜியோங் கவுன்டியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர் உள்ளூர் வாலிபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
சீனாவில் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடமாக பொது இடங்களில் ஏராளமான கத்தி குத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
குவாங்டோங் மாகாணத்தில் ஜூலை மாதத்தில் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஜென்ஜியோங் கவுன்ட்டி 2020 வரைக்கும் வறுமை பிடியில் இருந்ததாக கூறப்படுகிறது.
- 2022 அக்டோபர் மாதத்தில் இருந்து சீன தூதர் நியமிக்கப்படாமல் இருந்தார்.
- தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் ஆப்கானிஸ்தான், ருமேனியா நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.
இந்தியாவுக்கான சீன தூதராக சுன் வெய்டெங் பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் 2022 அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதன்பின் சீனா தூதரை நியமிக்காமல் இருந்தது. இதற்கு இரு நாடுகள் இடையிலான எல்லைத் தொடர்பான பிரச்சனை ஆகும்.
இந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இந்தியாவுக்கான சீன தூதரை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தள்ளார்.
தற்போது இந்தியாவுக்கான சீன தூதராக அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரி பெயர் ஜு ஃபெய்ஹோங் ஆகும். 60 வயதாகும் இவர் விரைவில் இந்தியா வந்து பதவி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் ஆப்கானிஸ்தான், ருமேனியா போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றியுள்ளார்.
- தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது.
- வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது.
பீஜிங்:
நிலவை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போட்டு வருகின்றன. குறிப்பாக நிலவின் தென் துருவத்தில் முதன்முறையாக சந்திரயான்-3 செயற்கைக்கோளின் லேண்டரை தரையிறக்கி இந்தியா சாதனை படைத்தது.
இந்தநிலையில் தற்போது சாங்கே-6 என்ற செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது. இந்த செயற்கைக்கோள் நிலவில் 53 நாட்கள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். பின்னர் முதன்முறையாக நிலவில் இருந்து தூசி, பாறை உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வர உள்ளது.
இதற்காக சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-5 ஒய்-8 என்ற ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதேபோல் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீன கடலோர காவல்படை தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
- சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என மிரட்டி வருகிறது
தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதனால் அடிக்கடி தென் சீனக் கடலில் மோதல் நடக்கிறது.
பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியது. இதனால் தென் சீனக் கடலில் இன்று பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது :-
சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலை இன்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை சுட்டது. கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது.
சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது. சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்க தக்கது என தெரிவித்தார்.
#Philippines accuses #China's coast guard of damaging its vessel in #SouthChinaSea
— DD News (@DDNewslive) April 30, 2024
Two Chinese coast guard vessels used water cannons against the Philippine ship, which was patrolling together with a civilian fisheries vessel pic.twitter.com/Y95G3VNOCJ
- அதிர்ஷ்டவசமாக தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந்தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்த நிலையில், வீட்டில் அவர் செல்லமாக வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை 'ஆன்' செய்ததும், அதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததும் தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
- கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.
- சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்.
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் டெஸ்லா. இந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.
அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது தானியங்கி வாகனத்திற்கான மென்பொருளை அறிமுகம் செய்வது மற்றும் கடல்கடந்து தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. சந்திப்பு தொடர்பாக எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "பிரதமர் லி கியாங்கை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். ஷாங்காய் நாட்கள் தொடங்கி பல ஆண்டுகளாக நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணைத்துள்ளார்.
Honored to meet with Premier Li Qiang.
— Elon Musk (@elonmusk) April 28, 2024
We have known each other now for many years, since early Shanghai days. pic.twitter.com/JCnv6MbZ6W
- கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
- இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான மாலத்தீவில் புதிய அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பலை மாலத்தீவு கடற்பகுதியில் நிறுத்த அனுமதி வழங்கியது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டு இருந்த அந்த கப்பல் பின்னர் திரும்பி சென்றது.
இந்த நிலையில் 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்-ஹாங்-3 என்ற சீன உளவு கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை வேவு பார்க்க முடியும்.
இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது, எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்