search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

    வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.

    நாம் வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். சரியான ரத்த ஓட்டம் காரணமாக, ரத்த அழுத்த அளவு சாதாரணமாக இருக்கும்.

    ரத்த அழுத்தத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது நாம் அனைவருக்கு தெரியும். இதன் பொருள் ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் குறைகிறது.

    நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு கப் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி வெந்நீர் குடிப்பதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    உண்மையில், நீங்கள் சூடான தண்ணீரைக் குடிக்கும்போது, உடல் குளிர்ச்சியடையும் செயல்முறையைத் தொடங்குகிறது.

    இந்நிலையில், வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது, இது எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் பருமன் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மொத்தத்தில், சூடான நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால், எதையும் அதிகமாகச் செய்வது சரியல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    வெந்நீரிலும் இதே நிலைதான். வெந்நீரை அதிகமாக குடித்தால், உணவுக்குழாயில் உள்ள நல்ல திசுக்களை சேதப்படுத்தி, சுவை மொட்டுக்களை கெடுத்து, நாக்கில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் தொடர்ந்து சுடுநீரை குடிக்க விரும்பினால், அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்வது நல்லது.

    • ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும்.

    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது, குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிக்காமல் இருப்பது, தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவது, மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வது, மன அழுத்தம், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கோபமாக பேசுவது போன்றவற்றை குறைத்துக்கொள்ளும் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது யோகா செய்வதன் மூலமாகவும், உடல் எடையை குறைப்பதன் மூலமாகவும், உணவுப்பழக்க வழக்கம் மூலமாகவும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    எல்லோருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. எனவே ரத்த அழுத்தத்தை கவனிக்க ஒவ்வொருத்தரும் வீடுகளில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் கருவையை வைத்திருப்பது அவசியம். இப்பொழுதெல்லாம் ரத்த அழுத்தத்தை சோதிக்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும். காலையில் செய்யப்படும் பரிசோதனை தான் சரியான ரத்த அழுத்த பரிசோதனையாக இருக்கும்.

    மேலும், நாம் வருடா வருடம் பிறந்தாள் கொண்டாடுவது போன்று 30 வயதை கடந்தவுடன் ஒவ்வொரு வருடமும் உடல் முழுவதையும் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    • உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர்.
    • இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

    உலக அளவில் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு வெளிப்பட்டு சிகிச்சைக்கு சென்ற பிறகே நோய் பாதிப்பின் தீவிரத்தை அறிய முடியும். ஆகவே வேறு நோய் பாதிப்புக்கு சிகிச்சைக்கு செல்லும் போது டாக்டரிடம் ரத்த அழுத்த பரிசோதனையையும் மேற்கொள்வது அவசியம்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பது என்பதை நாம் கவனிக்காமல் விட்டால் முக்கியமான உறுப்புகளை பாதிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாது உயர்ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழப்பதற்கு கூட வித்திடலாம். கண்கள் பாதிக்கப்படலாம்.

    ஆனாலும் 50 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் இருப்பது வெளியே தெரிவது இல்லை. அதிலும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் தான் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இருப்பினும் இந்த 50 சதவீதம் பேர் கூட முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்வதில்லை.

    வேறு எந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் வந்தாலும் அது சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தத்தினை சரியாக கவனிக்கவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரகத்தின் வழியாக உடலில் உள்ள புரதச்சத்துக்குள் குறைய ஆரம்பிக்கும். சிறுநீரகம் சுருங்கத்தொடங்கும். பின்னர் நிரந்தரமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

    தற்போதுள்ள காலக்கட்டத்தில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமாக சிறுநீரக செயலிழப்பு என்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

    • இன்றைக்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
    • மருத்துவரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்லது.

    இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் கணினி முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் நிலை இருக்கிறது. நவீன வாழ்க்கைமுறையும் அதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது.

    அப்படி உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதே நிலை தொடரும்போது இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றன.

    உட்காருவதற்கும், நிற்பதற்கும், உடற்பயிற்சிக்கும், தூங்குவதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அதனை மையமாகக்கொண்டு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 40 முதல் 75 வயது வரை உள்ள 2 ஆயிரம் பேரின் தினசரி செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. உட்காருதல், நின்றல், உறங்குதல், உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் தினமும் எவ்வளவு நேரம் ஈடுபடுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

    அதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தினமும் எந்தெந்த செயல்களுக்கு எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். அதன்படி தினமும் 6 மணி நேரம் வரை உட்கார்ந்திருக்கலாம், 5 மணி 10 நிமிடங்கள் வரை நிற்கலாம். இரண்டு மணி நேரம் 10 நிமிடங்கள் வரை லேசானது முதல் மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

    அதேபோல் 2 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் வரை மிதமானது முதல் தீவிரமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். 8 மணி 20 நிமிடங்கள் வரை தூங்குவதற்கு ஒதுக்கலாம் என்று நேரத்தை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்காருவதற்கு அதிக நேரத்தை செலவிட்டதை மாற்றியமைத்து லேசான உடல் செயல்பாடுகளில் கூடுதல் நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். அவர்களின் சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

    வயது, ஒட்டுமொத்த உடல்நலம், உடல் திறன், வேலை மற்றும் தனிப்பட்ட விருப்பம் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்வாழ்வுக்கு வித்திடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    • டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன.
    • குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும்.

    பருவ காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கொசுக்கள், உற்பத்திக்கும், கொசுக்களால் பரவும் நோய்களுக்கும் வழிவகுத்துள்ளது. பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை குறித்தும், அதன் உண்மை தன்மை குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் பார்ப்போம்.

    கட்டுக்கதை 1: பப்பாளி இலைச் சாறு டெங்குவை குணப்படுத்தும். ஆட்டு பால், பப்பாளி இலைகள் மற்றும் கிலோய் சாறு உட்கொள்வதன் மூலம் ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

    உண்மை: இவற்றை உட்கொள்வது ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை சிறிதளவு உயர்வதற்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். அதற்காக பப்பாளி இலை சாறு உள்ளிட்ட வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பியிருப்பது சரியான சிகிச்சைமுறை ஆகாது.

    டெங்கு காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இவை ஓரளவுக்கு கைகொடுக்கும். ஆனால் டெங்கு நோயாளியின் பிளேட்லெட்டுகள் திடீரென வீழ்ச்சி அடைந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப் பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதே பலனளிக்கும்.

    கட்டுக்கதை 2: முதியவர்கள், குழந்தைகள், கருமை நிறம் கொண்டவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    உண்மை: இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் நம்பிக்கை இது. ஆனால் வயது, பாலினம், தோல் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படாது.

    அத்தகைய பாகுபாட்டை டெங்கு கொசு காண்பிக்காது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக முதியவர்கள், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கடுமையான பாதிப்பை உண்டாக்கலாம்.

    இதை தவிர வேறு காரணம் இல்லை. வயது, பாலினத்தை பொருட்படுத்தாமல் எவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகலாம். டெங்குவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது.

    கட்டுக்கதை 3: டெங்கு கொசுக்கள் கருமையான, அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிபவர்களையே கடிக்க விரும்புகின்றன.

    உண்மை: நிறங்களால் கொசுக்கள் ஈர்க்கப்படுவது உண்மைதான். கருப்பு, சியான், ஆரஞ்சு, சிவப்பு போன்ற அடர் நிறங்களை கொண்ட ஆடைகளுடன் சுவாசத்தின்போது வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடு வாயு, உடல் வெப்பம் போன்றவை டெங்குவை பரப்பும் கொசுக்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றன.

    அதற்காக வெளிர் நிற ஆடை அணிபவர்களை கொசுக்கள் கடிக்காது என்பதல்ல. கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருப்பதை தவிர்ப்பது, கொசு விரட்டிகளை பயன்படுத்துவது பயனுள்ள தற்காப்பு நடவடிக்கைகளாக அமையும்.

    கட்டுக்கதை 4: ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவார். அவருக்கு மீண்டும் டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இதில் துளியும் உண்மை இல்லை. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் டெங்கு பாதிப்புக்கு ஆளாகலாம்.

    டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்குவதால் எளிதில் டெங்கு பரவும் அபாயம் இருக்கிறது. எனவே கொசு கடிப்பதை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    கட்டுக்கதை 5: ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இவை இரண்டுமே வைரஸ் வகை நோய்கள். அதனால் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவரை தாக்காது என்று கூற முடியாது.

    கொரோனா காலகட்டத்தில் இரண்டு நோய்த்தொற்றுகளாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே டெங்கு, கொரோனா இரண்டையும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

    குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வைக்கும் உணவுகளை உட்கொள்ள செய்ய வேண்டும்.

    டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியோ, லேசான டெங்கு பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறையோ இல்லை. லேசான டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம்.

    கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, வேகமாக சுவாசிப்பது, ரத்தப்போக்கு ஏற்படுவது, சோர்வு, சருமம் வெளிர் நிறத்துக்கு மாறுவது, தூக்கமின்மை, வாய், நாக்கு உலர்வடைவது, நீரிழப்பு ஏற்படுவது, சிறுநீர் கழிப்பது குறைவது போன்ற அறிகுறிகள் நிலைமையை மோசமாக்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு அறிகுறி கடுமையாக வெளிப்பட்டாலே உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமானது.

    • வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும்.
    • மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்துக்கொண்டிருக்கிறது. வெயில் அதிகரித்த சமயத்தில் ஏற்பட்ட வெப்ப அலையால் உடல் உஷ்ண பிரச்சினையை எதிர்கொண்டவர்கள், கோடை மழையால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். என்னென்ன விஷயங்களை செய்யலாம்? செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

    உணவில் கவனம்

    உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அது நன்கு சமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நன்கு வேகவைக்கப்படாத உணவுகள் செரிமானமாவதற்கு கூடுதல் நேரமாகும். சிலருக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும். அதனால் துரித உணவுகளை தவிருங்கள். சாலையோர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் தரமானதா? என்பதை உறுதி செய்துவிட்டு உட்கொள்ளுங்கள். ஏனெனில் வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுத்துவிடும். இறுதியில் உணவு விஷத்தன்மைக்கு மாறிவிடக்கூடும்.

    வைட்டமின் சி உட்கொள்ளுங்கள்

    வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும். குறிப்பாக கோடை காலம் முடிந்து மாறும் பருவ நிலை மாற்றத்தையும், கோடை மழையையும் எதிர்கொள்ள உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்யும். நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.

    புரோபயாடிக் உணவுகளை உண்ணுங்கள்

    மழைக்காலத்தில் புரோபயாடிக் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பருவநிலை மாற்றம் காரணமாக குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். புரோபயாடிக் உணவுகளை உட்கொண்டால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். செரிமான பிரச்சினைகளைத் தடுக்கும்.

    சுற்றுப்புற தூய்மை

    பருவ நிலை மாறுபாடும், மழை நீர் தேங்குவதும் கொசு உற்பத்திக்கு வித்திடும். டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை கொசுக்கள் பரவச் செய்துவிடும். கோடை மழையின்போது தாழ்வான பகுதியில்தான் மழைநீர் அதிகம் தேங்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியை தடுக்க கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். கைகள், உடலை முழுவதும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுங்கள்.

    தனிப்பட்ட சுகாதாரம்

    வெப்பநிலை குறைந்து ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பது பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உடலை எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக கால்கள் மற்றும் கை விரல்கள் உலர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் விரல்களுக்கு இடையே பூஞ்சை தொற்று ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும்.

    வடிகட்டிய நீரை பருகுங்கள்

    கோடை காலம் முடிவுக்கு வந்து பருவ நிலை மாறுவதற்கு ஏற்ப பருகும் தண்ணீரையும் மாற்ற வேண்டும். குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்த்து தண்ணீரை நன்கு காய்ச்சி ஆறவைத்து பருக வேண்டும். வடிகட்டிய தண்ணீரை பருகுவதும் நல்லது. மழை சமயங்களில் குடிநீரில் அசுத்த நீர் கலந்தால் காலரா, டைபாய்டு போன்ற நீரினால் பரவும் நோய்கள் அதிகரிக்கும். அதனை கருத்தில் கொண்டு தண்ணீர் பருக வேண்டும்.

    மழையில் நனையாதீர்கள்

    மழையில் நனைவதை முடிந்தவரை தவிருங்கள். எதிர்பாராதவிதமாக மழையில் நனைந்து உடல் ஈரமாகிவிட்டால் வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு ஆடையை மாற்றிவிடுங்கள். அது காய்ச்சல் உள்பட பிற நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.

    • ஊட்டச்சத்துள்ள உணவு ஊட்டச்சத்து இல்லாத துரித, பொருந்தா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    • இரவு தூக்கத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஒரு தம்ளர் பால் அருந்தலாம்.

    தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் முழுவதும் ஓடிய உடலுக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை. உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும்

    சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும்.

    சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவதெல்லாம் உண்மையில் வரம்தான். சிலர் நாள் முழுவதும் உழைத்துத் களைத்துத் வந்தாலும் தூக்கம் வராது. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

    இரவு தூக்கம் வராதவர்கள், மருத்துவ நிபுணர்கள் கூறும் கீழ்குறிப்பிட்ட சில வழிகளை முயற்சி செய்து பார்க்கலாம்.

    ஊட்டச்சத்துள்ள உணவு ஊட்டச்சத்து இல்லாத துரித, பொருந்தா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக செரிமானம் கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

    குறிப்பாக தூக்கத்திற்கான மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்தும் சிக்கன், முட்டை, கடல் உணவுகள் என புரதம் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

    பாஸ்தா, ரொட்டிட் , அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.

    சிலருக்கு இரவு சாப்பிடாவிட்டால் தூக்கம் வராது என்று கூறுவார்கள். இரவு சாப்பிடாமல் படுப்பது சரியல்லதான். குறைந்த அளவு உணவு எடுத்து கொள்ள வேண்டும். ஆனால், சிலர் பசி காரணமாக நள்ளிரவில் எழுந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறு. அதிலும் குறிப்பாக நொறுக்குத் தீனிகளை நள்ளிரவு சாப்பிடக்கூடாது. நள்ளிரவு பசியைக் கட்டுபடுத்த முடியவில்லை என்றால் ஒரு பழம் சாப்பிடலாம். மாறாக, அரிசி உணவுகள், ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உடல் இயக்கத்தை சீர்குர் லைக்கும். இது தூக்கத்தையும் கெடுக்கும்.

    சிலர் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர்தான் சாப்பிடுவார்கள். இது செரிமானத்தில் கோளாறை ஏற்படுத்துவதுடன் உடல் பிரச்னைகளை உண்டுபண்ணும். இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டு விட வேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுபோல இரவில் வயிற்றை முழுவதும் நிரப்பக்கூடாது.

    பகல் நேர உணவு அளவில் பாதி சாப்பிடலாம். எளிதாக செரிமானம் அடையும் உணவுகளை சாப்பிடுங்கள். நல்ல தூக்கம் கிடைக்கும்.


    டிரிப்டோபன், மெலடோனின் இந்த இரண்டும் பாலில் உள்ள மூலக்கூறுகள். மூளை வெளியிடும் மெ லடோனின், தூக்க ஹார்மோர் என்றும் அழைக்கப்படுகிறது. இது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது, உடலை தூக்கத்திற்கு தயார்படுத்துகிறது. டிரிப்டோபன், மெலடோனின் இரண்டும் நல்ல தூக்கத்திற்கு உதவும். இவை இரண்டும் பாலில் இருப்பதால் இரவு தூக்கத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஒரு தம்ளர் பால் அருந்தலாம்.

    பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி ஆகியவை தூக்கத்திற்கு உதவும் உணவுகள். இவற்றில் மெலடோனின், மெக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இரவு உணவிற்கு முன் இந்த உணவுகளை சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    • அடிப்படையில் அறிய வேண்டியவற்றை அறியாமல் உழன்று கொண்டிருக்கும் கோடிக்கணக்கானவர்கள் இன்று உள்ளனர்.
    • யற்கை தந்துகொண்டிருக்கும் கற்பகத்தரு என்ன? என்பதை தெரியாமலே பலர் வாழ்ந்தும் மடிந்தும் போய் விடுகின்றனர்.

    இன்றைக்கும் பாரம்பரிய நெல்ரகங்களை மட்டுமே பயிரிடும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    அப்படிப்பட்ட பாரம்பரிய அரிசிகளைத் தவிர மற்றவற்றை விரலாலும் தீண்டமறுக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் உள்ளன.

    பாரம்பரிய நெல் என்பவை இந்த தமிழ்மண்நமக்குத் தந்த வரம்! அதற்கு தேவையில்லை ரசாயணஉரம்! அவை அத்தனையும் உன்னதத்தரம்! அரிசி என்றால் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி என்பதை க் கடந்து, வேறொன்றும் தெரியாத - தங்களை மெத்த படித்த அறிவாளிகளாக கருதிக்கொண்டிருக்கும் - ஆனால் அடிப்படையில் அறிய வேண்டியவற்றை அறியாமல் உழன்று கொண்டிருக்கும் - கோடிக்கணக்கானவர்கள் இன்று உள்ளனர்.

    இந்த தேசத்தின் உண்மையான சொத்துத் என்ன? சுகம் என்ன? இயற்கை தந்துகொண்டிருக்கும் கற்பகத்தரு என்ன? என்பதை தெரியாமலே பலர் வாழ்ந்தும் மடிந்தும் போய் விடுகின்றனர்! 

     50 வருஷத்திற்கு முன்பு வரை கூட நாம் பாரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே உண்டு வாழ்ந்தோம் என்பது பொய்யாய் பழங்கதையாய் போனதுவோ....?

    மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டிட் ... பாடலில்,

    "ஆத்தூத்ரு கிச்சிலிச்சம்பா பாத்துத் வாங்கி விதை விதைச்சுச் ..." என்ற வரி ஞாபகம் இருக்கிறதா?

    தைப்பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம், தங்கச்சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம் பாடல் ஞாபகம் இருக்கிறதா?

    இந்தத் தலைமுறையில் எத்தனைபேர் கிச்ச லிச்சம்பா, தங்கச்சம்பா சோறு சாப்பிடும் வாய்ப்பு பெற்றுள்ளனர்?

    அடடா, அந்தச்சுச்வையை எழுத்தில் சொல்லக் கை கூடுமா?

    அதை யெல்லாம் சாப்பிட்டுட் வந்தால் நமக்கு நோய்நொடி தான் வருமா? எப்போது நம் பாரம்பரிய நெல்ரகங்கள் முழுமையான பயன்பாட்டுட் க்கு வருகிறதோ?

    அன்றைக்கு தான் தமிழர்களின் ஆரோக்கியம் சிறக்கும்!

    அப்போது இங்கே மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைகளுக்குமான வேலை ரொம்ப குறைஞ்சி போயிடும்.

    நமது பாரம்பரிய நெல்ரகங்கள் பெரும்பாலானவை நீண்டநாள் பயிர்களாகும். அதில் தான் நீடித்த ஆயுளுக்கான வாய்ப்பையும் நாம் பெறலாம்!

    மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா, சம்பாமோசனம், சண்டிகார், கை வரச்சம்பா போன்றவை 160 முதல் 170 நாட்கள் பயிர்களாகும்.

    நெல்ரகங்கள் - நாட்கள்

    கருடன் சம்பா - (170 -180)

    குடவாழை - (140 -145)

    நீலச்சம்பா - (175 - 180)

    கிச்சிலிச்சம்பா - (140 - 145)

    கருப்புகவுணி - (140 - 150)

    காட்டுயாணம் - (180 - 185)

    ஓட்டையான் - 190 நாட்கள்

    கரைநெல் - 270 நாட்கட் ள் மூங்கிலரிசி - 12,24,30,40 என வருடக்கணக்காகும் பயிர்களாகும்!

    பாரம்பரிய அரிசிகள் பயன்கள்

    பிசினி அரிசி, வாலான் அரிசி - பருவ வயது பெண்ணுக்கு உகந்தது

    பூங்கார், வாலான், சிகப்புக்கவுணி - கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது

    கிச்சிலிச்சம்பா, நீலச்சம்பா, குழிவெடிச்சான் - தாய்பால் சுரப்புக்கு உகந்தது

    மாப்பிள்ளை சம்பா - நரம்புகளை பலப்படுத்த, உயிரணுக்களை அதிகரிக்க, நீரழிவைதடுக்க

    காட்டுயாணம் - இதயபாதுகாப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, மூட்டு வலிதீர்வு , நீரழிவு தடுப்பு

    நீலசம்பா - ரத்தசோகை விலக

    குள்ளக்கார், பெருங்கார், கருத்தகார் - மலச்சிக்கல்தீர, மூலம்விலக

    வாடான் சம்பா - அமைதியான தூக்கத்திற்கு

    கோரைச்சம்பா - பித்தசூடுவிலக, உடல்குளிரவிக்க

    கட்டச்சம்பா - கடும் உழைப்பாளிகளுக்கு

    மூங்கிலரிசி, மிளகி, கல்லுடைசம்பா, கவுணி ; எலும்பு பலப்பட

    கருங்குறுவை - இழந்த சக்தியை மீட்டெடுக்க, கொடிய நோய்களிலிருந்து மீள, புற்றுநோய், தோல்நோய் சீராக

    குடவாழை - குடலை வாழவைக்கும்

    இலுப்பை பூ சம்பா - பக்கவாதம் விலக, கால்வலி சரியாக தூயமல்லி - உடலின் உள் உறுப்புகளை வலுப்படுத்தும்

    சேலம் சன்னா - தசை , நரம்பு, எலும்பு பலப்பட...

    சூரக்குறுவை - உடலிலுள்ள கெட்ட கொழப்பை வெளியேற்ற...

    தங்கச்சச் ம்பா - இதயம் வலுப்படும், கால்சியம் அதிகமுள்ளது

    நீலச்சம்பா - ரத்தசோகை விலகும்

    இனிவரும் காலங்களில் பாரம்பரிய அரிசி வகைகளை நமது சந்ததியினருக்கு கொடுத்து பிற்காலத்தில் வரவிருக்கும் நோய்களில் இருந்து விடை பெறுவோம்.

    • ஒரு தீவிரமான அடிப்படை நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
    • வலது பக்க மார்பு வலி பெரும்பாலும் 'குறிப்பிடப்பட்ட வலி' என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    உங்கள் மார்பின் வலது பக்கத்தில் உள்ள வலியை அலட்சியப்படுத்தக்கூடாது, ஏனெனில் இது சில இதய மற்றும் நுரையீரல் சிக்கல்களின் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான மக்கள் இதய அவசரநிலையை இடது மார்பில் உள்ள வலியுடன் மட்டுமே தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் பல நிலைகள் மார்பின் வலது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும். ஒரு மருத்துவ நிபுணரால் நிராகரிக்கப்படாவிட்டால், இது ஒரு தீவிரமான அடிப்படை நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    "மார்பின் எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தக் கூடாது. இடது பக்கத்தில் உள்ள மார்பு வலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆபத்தானதாகவும் இருக்கலாம், ஆனால் வலது பக்க மார்பு வலியை நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது, "என்கிறனர் டாக்டர்கள். இதயக் கோளாறு உள்ளதா என்பதை நிராகரிக்க ECG போன்ற எளிய சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

    மார்பின் வலது பக்கத்தில் வலிக்கு என்ன காரணம்?

    வலது மார்பில் வலிக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சல் மற்றும் இதய வீக்கம். வலது பக்க மார்பு வலி பெரும்பாலும் 'குறிப்பிடப்பட்ட வலி' என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், வலியின் உண்மையான ஆதாரம் நுரையீரல் அல்லது வயிற்று உறுப்புகளில் இருக்கும்.

    "மார்புச் சுவர், நுரையீரல், உதரவிதானம் மற்றும் அடிவயிற்றின் புறணி ஆகியவற்றில் உள்ள திசுக்களில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நரம்புகள் இயங்குகின்றன."


    1. நெஞ்செரிச்சல்

    நெஞ்செரிச்சல் மற்றும் மாரடைப்பு இரண்டின் பொதுவான அறிகுறி மார்பு வலி. ஆனால் பிந்தையதைப் போலல்லாமல், நெஞ்செரிச்சல் ஒப்பீட்டளவில் ஆபத்தானது அல்ல. வயிற்று அமிலம் உணவுக்குழாயில் மீண்டும் பாயும் போது இது ஏற்படுகிறது, இது எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. "அசிட் ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படும் வலி பொதுவாக வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இருப்பினும், இது மார்பின் வலது பக்கத்தில் கதிர்வீச்சு செய்ய முடியும்.

    2. தசை திரிபு

    "நெருப்பு தசைகள் வலுவிழந்து வலது பக்க மார்பு வலிக்கு வழிவகுக்கும்"

    "இன்டர்கோஸ்டல் தசைகள் (இரண்டு விலா எலும்புகளுக்கு இடையே உள்ள தசைகள்) வீக்கமடைகின்றன, இதனால் இயக்கத்தின் போது அதிக வலி ஏற்படுகிறது." விளையாட்டு வீரர்கள், குறிப்பாக பளு தூக்குபவர்களுக்கு தசை தொடர்பான மார்பு வலி ஏற்படும் அபாயம் அதிகம்.

    3. இதய வீக்கம்

    இதய அழற்சியின் இரண்டு மாறுபாடுகள், பெரிகார்டிடிஸ் மற்றும் மயோர்கார்டியம் (மயோர்கார்டிடிஸ்) உங்கள் வலது மார்பில் வலிக்கு வழிவகுக்கும்.

    "மயோர்கார்டிடிஸ் மாரடைப்பின் அறிகுறிகளைப் பிரதிபலிக்கிறது," இது நடுத்தர இதய தசை அடுக்கின் அழற்சியின் காரணமாக ஏற்படுகிறது மற்றும் மார்பு வலி அல்லது மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது. மயோர்கார்டிடிஸ் பொதுவாக வைரஸ் அல்லது பூஞ்சை தொற்று, போதைப்பொருள் துஷ்பிரயோகம் அல்லது ஆட்டோ இம்யூன் நிலைமைகள் காரணமாக உங்கள் முழு மார்பிலும் வலது பக்கம் உட்பட வலி ஏற்படுகிறது.

    4. மாரடைப்பு

    மாரடைப்புக்கான பெரும்பாலான அறிகுறிகள் இடது பக்கத்தில் நிகழ்கின்றன மற்றும் அவை நடைபயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது அதிகரிக்கும்; ஓய்வு நேரத்தில் அவை குறையும். மாரடைப்பு தொடர்பான வலி பெரும்பாலும் இடது பக்கத்தில் இருக்கும், ஆனால் அது வலது பக்கமாக பரவும்.

    5. கோஸ்டோகாண்ட்ரிடிஸ்

    வலது பக்க மார்பு வலிக்கான மற்றொரு பொதுவான காரணம் கோஸ்டோகாண்ட்ரிடிஸ் ஆகும். விலா எலும்பை மார்பகத்துடன் இணைக்கும் குருத்தெலும்பு வீக்கத்தால் கோஸ்டோகாண்ட்ரிடிஸ் ஏற்படுகிறது. இயக்கம் மற்றும் ஆழ்ந்த சுவாசத்தால் வலி மோசமடையும்.

    6. நுரையீரல் தக்கையடைப்பு

    நுரையீரலுக்கு இரத்தத்தை வழங்கும் நுரையீரல் தமனியில் ஒரு உறைவு காரணமாக நுரையீரல் தக்கையடைப்பு பொதுவாக ஏற்படுகிறது. "நுரையீரல் தமனியில் இரத்த உறைவு தடைபடும் போது, அது நுரையீரலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை ஓரளவு அல்லது முழுமையாக நிறுத்தலாம். இது சுற்றியுள்ள நுரையீரல் திசுக்களில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும், இதனால் மார்பு பகுதியில் வலி ஏற்படும்."


    7. நுரையீரல் சரிவு அல்லது நியூமோதோராக்ஸ்

    நுரையீரல் மற்றும் மார்புச் சுவருக்கு இடையே உள்ள இடைவெளியில் காற்று நுழையும் போது, நுரையீரல் சரிவு அல்லது நியூமோதோராக்ஸுக்கு வழிவகுக்கும் ஒரு நிலை இது. காற்றின் குவிப்பு மார்பில் வலியை ஏற்படுத்தும் பிளேராவை (நுரையீரலைச் சுற்றியுள்ள புறணி) எரிச்சலடையச் செய்யலாம். மார்பின் இடது அல்லது வலது பக்கமாக சுவாசிக்கும்போது நெஞ்சு வலியை உணர முடியும்.

    8. ப்ளூரிசி அல்லது ப்ளூரிடிஸ்

    நுரையீரல் திசுக்களின் மெல்லிய அடுக்குடன் மூடப்பட்டிருக்கும் (ப்ளூரா என்று அழைக்கப்படுகிறது). "நுரையீரலில் தொற்று ஏற்பட்டால், ப்ளூரா பாதிக்கப்பட்டு மார்பு வலியை உண்டாக்குகிறது."

    9. கோலிசிஸ்டிடிஸ்

    பித்தப்பை பிரச்சினைகள் மார்பின் வலது பக்கத்தில் வலிக்கு வழிவகுக்கும். பித்தப்பை அழற்சியால் ஏற்படும் அழற்சி (பித்தப்பையில் பித்தத்தை உருவாக்கும் பித்தப்பையை தடுக்கிறது) மார்பின் வலது பக்கத்திற்கு பரவக்கூடிய மேல் வலது வயிற்றில் மார்பு வலியை ஏற்படுத்தும்.

    10. சிங்கிள்ஸ்

    "சிங்கிள்ஸ் போன்ற வைரஸ் தொற்று வலது பக்கத்தில் மார்பு வலியை ஏற்படுத்தும்." சிங்கிள்ஸ் மார்பில் உள்ள நரம்புகளை பாதித்தால், அது மார்பு வலியை ஏற்படுத்தும்.

    சிங்கிள்ஸ் உள்ளவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

    11. பீதி தாக்குதல்

    மக்கள் கவலை அல்லது பீதி தாக்குதல்களால் நெஞ்சு வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம். இந்த வலி இடது அல்லது வலது பக்கமாக இருக்கலாம்.

    • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
    • நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

    • நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.

    • நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.

    • பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.

    • பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.

    • உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.

    • கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


    • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

    • நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.

    • பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

    • நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.

    • கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.

    • பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.

    நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

    • அவசரமோ, திடீரெனவோ, தேவையோ அல்லது தூரமோ எதுவாக இருந்தாலும் - சர்க்கரை நோயாளிக்கு வெறுங்காலுடன் நடப்பது கண்டிப்பாக கூடாது.
    • நீரிழிவு நோயாளிக்கு, உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம் ஆனால் கால்களில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க எந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

    நீரிழிவு என்பது மிகவும் பொதுவான நோயாகும், இது உடலின் இரத்த குளுக்கோஸ் அளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைத் தாண்டி உயரும் போது ஏற்படுகிறது. நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும், இது இன்சுலின் உற்பத்தி செய்யும் உடலின் திறனைத் தடுக்கிறது அல்லது இன்சுலினை திறம்பட பயன்படுத்துகிறது. இன்சுலின் - சர்க்கரையை இரத்தத்திலிருந்து உயிரணுக்களுக்கு ஆற்றலாக மாற்றுவதற்கு பொறுப்பான ஹார்மோன் ஆகும். நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும். நீண்ட கால நீரிழிவு நோய் நரம்புகள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளை சேதப்படுத்தும்.

    இது பாதங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது பாதங்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. மேலும், நீரிழிவு நோயானது பாதங்களில் ஒருபோதும் சேதமடையாமல் (பெரிஃபெரல் நியூரோபதி என அறியப்படுகிறது) இது உணர்வின்மையை ஏற்படுத்தும். நீரிழிவு நோயால் புண்கள், காயங்கள், கொப்புளங்கள் மற்றும் வெட்டுக்கள் மிக மெதுவாக குணமடைகின்றன, இது நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் துண்டிக்கப்படுகிறது. நீரிழிவு நரம்பியல் கால்களில் கூர்மையான வலியை ஏற்படுத்தும், இது அனைத்து தொடுதல்களிலும் தீவிரமடையும். எனவே, முன்னெச்சரிக்கையாக நீரிழிவு பாத பராமரிப்பு மிகவும் முக்கியமானது.

    உங்கள் பாதங்களை தினமும் பகுப்பாய்வு செய்யுங்கள்: நீரிழிவு நோயாளிகள் எடுக்க வேண்டிய முதன்மையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வெட்டுக்கள், புண்கள், கொப்புளங்கள், சிவத்தல், கால்சஸ், தடிப்புகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளைக் கண்டறிய தினமும் பாதங்களைச் சரிபார்ப்பது. உங்கள் கால்விரல்களுக்கு இடையில் சரியாகச் சரிபார்க்க நினைவில் கொள்ளுங்கள். தீவிர நரம்பு சேதம் அல்லது மோசமான இரத்த ஓட்டம் ஏற்பட்டால், இது உயிரைக் காப்பாற்றும், ஏனெனில் இது போன்ற சந்தர்ப்பங்களில், காயம் அல்லது ஊசிகள் தொற்று அல்லது கடுமையான எரிச்சல் ஏற்படும் வரை கண்டறியப்படாது. நோயாளி சுய பரிசோதனை செய்ய முடியாவிட்டால், வேறு யாராவது உதவலாம்.

    உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை அன்றாட பழக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் சூடான (சூடான) நீரில் கால்களை ஊறவைப்பது அவற்றை சுத்தமாக வைத்திருக்கவும், சிக்கியுள்ள பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகிறது. வெப்பநிலையை மந்தமாக வைத்திருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும், கால்களில் ஊறவைக்கும் முன் கையை முதலில் நனைத்து அதை உறுதிப்படுத்தவும். மேலும், கால்களை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருக்க வேண்டாம், உடனடியாக அவற்றை முழுமையாக உலர வைக்கவும், தொற்று மற்றும் நீர் தேங்கிய புண்களைத் தவிர்க்கவும்.

    உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின், குறிப்பாக கால்விரல்களுக்கு இடையில் அவற்றை முழுமையாக உலர வைக்கவும். பல சந்தர்ப்பங்களில், நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் குளுக்கோஸின் அதிக அளவு காரணமாக விரிசல் மற்றும் வறண்ட சருமத்தால் பாதிக்கப்படலாம். வெடிப்பு தோல் பாக்டீரியா தொற்றுகள் தோலை பாதிக்க எளிதாக்குகிறது மற்றும் நோய்த்தொற்றுகளின் குணப்படுத்தும் செயல்முறையை மெதுவாக்குகிறது. எனவே, கால்களை உலர்த்திய பின், வறட்சியைத் தடுக்க போதுமான அளவு தோல் லோஷனைப் பயன்படுத்துங்கள், ஆனால் அதை ஒட்டும் அல்லது ஈரமாக்குவதைத் தவிர்க்கவும். மேலும், கால் நகங்களுக்கு இடையில் லோஷனைப் போடுவதைத் தவிர்க்கவும்.

    நீரிழிவு பாதங்களைப் பராமரிக்கும் போது மிகவும் அவசியமான குறிப்புகளில் ஒன்று, கொப்புளங்கள், புண்கள் அல்லது வேறு ஏதேனும் சிக்கல்களைத் தடுக்கும் மிகவும் வசதியான மற்றும் நன்கு பொருத்தப்பட்ட காலணிகளை எப்போதும் அணிவது. சிறிதளவு தேய்த்தல் அல்லது பொருத்தமற்றது கூட கொப்புளங்களை ஏற்படுத்தும், இது குணப்படுத்த மிகவும் கடினமாக இருக்கும். கொப்புளம் புண் இருந்தால், அது தொற்று ஏற்படலாம். பாதங்கள் மிக உயர்ந்த அளவில் இருக்கும் போது நாள் முடிவில் காலணிகளை வாங்குவது சிறந்தது. மேலும், வாங்கும் ஆரம்ப வாரத்தில் 1-2 மணிநேரம் மட்டுமே புதிய காலணிகளை அணிவதன் மூலம் மெதுவாக அவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் காலணிகளை அணிவதற்கு முன், கூர்மையான பொருள்கள், சறுக்கும் மூலைகள் அல்லது உங்கள் கால்களைப் புண்படுத்தும் எதையும் சரிபார்க்கவும். மேலும், கொப்புளங்களைத் தவிர்க்க எப்போதும் எளிதான சாக்ஸ் அல்லது முழங்கால் வரையிலான காலுறைகளை அணிவது சிறந்தது.

    எவ்வளவு அவசரமோ, திடீரெனவோ, தேவையோ அல்லது தூரமோ எதுவாக இருந்தாலும் - சர்க்கரை நோயாளிக்கு வெறுங்காலுடன் நடப்பது கண்டிப்பாக கூடாது. முக்கியமாக, வெறுங்காலுடன் ஒருவர் நடந்தால் காயம் மற்றும் வெட்டுக்களுக்கு ஆளாக நேரிடுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் கடினமாகவும் மெதுவாகவும் குணமாகும். எனவே, நடக்கும்போது எப்போதும் காலணிகள் அல்லது செருப்புகளை அணியுங்கள்; காலணிகளின் இயற்கையான துணியான தோல், ரப்பர் போன்றவை கால்களை எரிச்சலடையச் செய்து கொப்புளங்களை உண்டாக்கும் என்பதால் எப்போதும் சாக்ஸ் அணிவது சிறந்தது. தடிமனான, மெத்தையான காலுறைகளை அணிய மறக்காதீர்கள்.

    உங்கள் நகங்களை ஒழுங்கமைத்து பராமரிக்கவும். இந்த அற்பமான முன்னெச்சரிக்கையை நீங்கள் புறக்கணித்தாலும், நீண்ட காலமாக கால் விரல் நகங்கள் வீக்கம் மற்றும் பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் என்பதால், அது மோசமாகிவிட்டால் அது பாதங்களை கடுமையாக பாதிக்கும். எனவே, கால் நகங்களை ஒழுங்கமைத்து, வளர்ச்சியைத் தடுப்பது எப்போதும் சிறந்தது. நகங்களை ட்ரிம் செய்வதற்கு முன் லோஷனைப் பயன்படுத்தி க்யூட்டிகல்ஸை மென்மையாக்கவும்.

    சோளம், சுத்தியல், பனியன், கால்சஸ் போன்றவற்றை நீங்களே சிகிச்சை செய்ய வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் சோளம், சுத்தியல், பனியன், கால்சஸ் போன்றவற்றை அனுபவிப்பதில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர். இருப்பினும், இவற்றில் சிலவற்றை வீட்டிலேயே எளிதாகக் குணப்படுத்தலாம், இது முக்கியம். எந்தவொரு தவறும் சிக்கலை தீவிரமாக்கும் மற்றும் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்க. எனவே, இந்த விஷயங்களில் ஏதேனும் தோன்றினால், எப்போதும் மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும், சிக்கலைப் பரிசோதிப்பதற்கு கூட, பாதங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் மென்மையாக இருக்கும்போது குளித்த பிறகு இதைச் செய்வது நல்லது.

    நரம்பு வலி அல்லது பலவீனமான கால் தசைகள் பாதிக்கப்படாத நீரிழிவு நோயாளிகள், பாதங்களைத் தாங்குவதற்கு ஆர்த்தோடிக்ஸ் அணிய உங்களுக்கு வழிகாட்டும் பாதநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மேலும், நடைபயிற்சி மிகவும் வலி அல்லது சாத்தியமற்ற சந்தர்ப்பங்களில், ஒரு கால் பிரேஸ் அல்லது எலும்பியல் காலணிகள் மிகவும் கைக்கு வரும்.


    நீரிழிவு நோயாளிக்கு, உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம் ஆனால் கால்களில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க எந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்ற பாதிப்பில்லாத பயிற்சிகள் பாதங்களில் மிகவும் இலகுவாக இருப்பதால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் எளிதாகப் பயிற்சி செய்யலாம். அதிகப்படியான வியர்வையைத் தவிர்க்க எப்போதும் உள்ளங்கால்களில் ஆன்டிபெர்ஸ்பிரண்டைப் பயன்படுத்துங்கள்.

    அனைத்து நீரிழிவு நோயாளிகளும் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான உதவிக்குறிப்பு, பாதங்களில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை குறைக்க அவர்களின் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க வேண்டும். இரத்த குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, அவ்வப்போது கால் பரிசோதனைகள் செய்வது மற்றும் சிக்கல்களைத் தவிர்க்க பாதங்களை சூடாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது நல்லது. உங்கள் பிரச்சனைகளை மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேசுவது மிகவும் அவசியம்.

    நீரிழிவு பாத பராமரிப்புக்கான முன்னெச்சரிக்கை குறிப்புகள் சிக்கல்களைத் தவிர்ப்பதில் கணிசமாக உதவும்.

    • ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.
    • உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும்.

    வெள்ளை பூசணிக்காய் போன்ற முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிப்பாக சில குழந்தைகள் இதை பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது.

    பூசணி ஜூஸில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

    பெரும்பாலான நாகரிகம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைக் கடைப்பிடிக்கின்றனர். பூசணி ஜூஸ் இவர்களுக்கு ஒரு மந்திர மருந்து போல் செயல்படுகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

    தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.

    இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகவும் பூசணி பயன்படுத்தப்படுகிறது.


    மிசோரமில், லுஷே போன்ற பழங்குடியினர் கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய பூசணி ஜூஸ், சூப்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.

    பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது.

    இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை. அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.

    நிறைய பேருக்கு குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் உடலில் உண்டாகும் அதிகப்படியான சூட்டின் காரணமாக நிறைய உடலியல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

    இந்த உடல் சூட்டை அதிகரிப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் கூட மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பூசணி ஜூஸ் சிறந்த காய்கறியாகும். ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

    இது நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

    பூசணிக்காய் ஜூஸில் கால்சியம், துத்தநாகம் (ஜிங்க்), பாஸ்பரஸ் போன்ற அனைத்து வகையாக முக்கிய ஊட்டச்சத்துக்களும், தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ள பூசணி ஜூஸ் ஆற்றல் மட்டங்களை பெரிதும் அதிகரிக்கிறது. இது உடல் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

    அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இந்த பூசணிக்காய் ஜூஸ் இருக்கிறது. வயிற்றுப் பகுதியில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பிற நோய்களைத் தாக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் ஊக்குவித்து, குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

    உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் இந்த பூசணிக்காய். மன அழுத்தம், மனப் பதட்டம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

    இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது.

    அதோடு இன்சோம்னியா (insomnia) என்னும் தூக்கமின்மை மற்றும் மனப் பதட்டம் போன்ற பிரச்சினைகளைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.


    தேவையான பொருள்கள்:

    வெள்ளை பூசணி - 1 கப்

    இஞ்சி - ஒரு இன்ச் அளவு

    பூண்டு - 2 பல்

    உப்பு - சிறிதளவு

    எலுமிச்சை பழம் - 1

    தேன் - 1 ஸ்பூன்

    புதினா இலைகள் - 5

    செய்முறை:

    முதலில் பூசணிக்காயை தோல் சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பூசணி உடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து பிளண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு கிளாஸில் வடிகட்டி ஊற்றி கொள்ளவும்.

    எலுமிச்சை ஜூஸ், உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் உட்பட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலக்கவும். பூசணி ஜூஸ் தயார். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய பலன்களைப் பெற முடியும்.

    ×