search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • கனடாவில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பிரதமர் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    கனடா நாட்டில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார்.

    அப்போது, காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான கனடா துணை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு, கனடா மீண்டும் இடமளித்துள்ளதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியது இரு நாடுகள் இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 47 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் நீடிக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று 3, 4, 5, 6-வது இடங்களில் உள்ளன.

    குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணிகள் தலா 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 8, 9, 10-வது இடங்களில் உள்ளன.

    • 2018-2019-ல் 70 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 101 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
    • சீனா எட்டு துறைகளில் ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கிறது.

    இந்தியா தொழில்துறை பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. 2023-24-ல் மட்டும் 101 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக ஜிடிஆர்ஐ ( Global Trade Research Initiative) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    2018-2019-ல் 70 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 101 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    இந்திய தொழில்துறைக்கு தேவைப்படும் சீன பொருட்களின் இறக்குமதியின் பங்கு கடந்த 15 ஆண்டுகளில் 21 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இயந்திரம், கெமிக்கல், மருந்து, டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் சீனா ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கிறது. எலக்ட்ரானிக் துறையில் மட்டுமே சீனா அதிக அளவில் இறக்கமதி செய்கிறது.

    2018-2019- 2023-2024-க்கு இடையில் இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்த அளவு வருடத்திற்கு 16 பில்லியன் என்ற அளவில் மந்தமாக இருந்ததாகவும், அதேவேளையில் சீனாவில் இருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்தது. இதனால் ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை 387 பில்லியன் டாலர் உயர்ந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    எல்க்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரிக்கல் தயாரிப்புக்கான பொருட்கள் 43.9 சதவீதம், இயந்திரம் தயாரிப்பு துறையில் 39.7 சதவீதம், டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறையில் 38.2 சதவீதம், கெமிக்கல் மற்றும் மருந்து துறையில் 26.8 சதவீதம், ஆட்டோமொபைல் துறையில் 26 சதவீதம் வரை இறக்குமதி செய்துள்ளது.

    ஆனால், வர்த்தக அமைச்சகம், மொத்தம் 161 பொருட்களில் குறிப்பிட்ட 90 பொருட்கள் சீனாவிற்கு கடந்த வருடம் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    • அமித்ஷா எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது
    • அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாஜக இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனையடுத்து, அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

    மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • செந்தில் பாலாஜி ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்.
    • கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்.

    புதுடெல்லி:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுக்கள் மீது பதில் அளிக்க ஏற்கெனவே அமலாக்கத்துறைக்கு நோட்டீசு அனுப்பி இருந்தது.

    இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இரவு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் அமலாக்கத்துறை கூறி இருப்பதாவது:-

    சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஏற்கெனவே விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார். அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. வழக்கின் விசாரணையிலும் அவர் முட்டுக்கட்டை போட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

    எனவே செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்கக் கூடாது. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதை எதிர்த்து போடப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும், அவரது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

    இவ்வாறு பதில் மனுவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதில், 'இந்த வழக்கில் ஆஜராக வேண்டிய சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருக்கிறார். எனவே சற்று நேரம் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.

    அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், 'இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு தான் பதில் மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இப்படி காலதாமதம் செய்வதன் மூலமாக இந்த வழக்கு விசாரணையை அவர்கள் தாமதப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். நாங்கள் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம்' என்றனர்.

    இதையடுத்து நீதிபதிகள், 'பதில் மனுவை காலதாமதமாக தாக்கல் செய்திருப்பதால் எந்தவித பலனும் இல்லை' என்றனர்.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், 'கடைசி நேரத்தில் மிக தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்' என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், 'அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவை நாங்கள் இன்னும் படித்து பார்க்கவில்லை. எனவே எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது' என்றனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை மே 6-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது சட்ட விரோதம். இதனால் ஜாமின் கேட்டு அந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை- கெஜ்ரிவால் வழக்கறிஞர்.
    • சிபிஐ-யின் வழக்கு அல்லது அமலாக்கத்துறையின் ஈசிஐஆர்-ல் கெஜ்ரிவால் பெயர் உள்ளதா?- உச்சநீதிமன்றம்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அவரிடம் "விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஏன் ஜாமின் மனு தாக்கல் செய்யவில்லை" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    அதற்கு அபிஷேச் சிங்வி, "அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்தது சட்ட விரோதம். இதனால் ஜாமின் கேட்டு அந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை" என்றார்.

    அதன்பின் "சிபிஐ-யின் வழக்கு அல்லது அமலாக்கத்துறையின் ஈசிஐஆர்-ல் கெஜ்ரிவால் பெயர் உள்ளதா?" என நீதிமன்றம் கேட்டது.

    அதற்கு கெஜ்ரிவால் வழக்கறிஞர் "அவருடைய பெயர் இல்லை" எனத் தெரிவித்தார்.

    தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

    • வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன. ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகி விட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி. யாக முடிந்தது. இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.

    இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ராகுல் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது தொடர்பாக அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் அமேதி தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் இன்று பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ருமிதி இரானி மனுதாக்கல் செய்து உள்ளார். அவரை எதிர்த்து ராகுல் களத்தில் இறங்குவாரா? என்பதில் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது. ஸ்ருமிதிஇரானியை எதிர்த்து போட்டியிட ராகுல் மிகவும் தயங்குவதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை ராகுலை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதனால் அமேதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியை தழுவ நேரிடுமோ? என்று ராகுல்காந்தி தயங்குவதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை அமேதியில் காங்கிரஸ் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வரும் ராபர்ட் வதேரா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது.
    • இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலம் வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை பிரதமர் மோடி வெளிப்படுத்தி உள்ளார்.

    அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுவரை நான் நாடு முழுவதும் 70 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தி பிரசாரம் செய்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் என் மீது அளவு கடந்த அன்பையும் ஆதரவையும், பாசத்தையும் காட்டியதை காண முடிந்தது. மக்களின் இந்த அபரிமிதமான அன்பை பார்க்கும் போது 400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற எங்களது இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால் அது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து புரிந்து இருக்கிறார்கள். தற்போது 2 கட்ட தேர்தல் முடிந்து இருக்கிறது. இந்த 2 கட்டங்களிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தோல்வியை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதற்கு முக்கிய காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் இன மக்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டங்களை திருத்தி விடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.

    அப்படிப்பட்டவர்கள் நான் முதல்-மந்திரி ஆனதில் இருந்து தற்போது வரை என்னென்ன செய்து வருகிறேன் என்று சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது. மக்கள் இன்னமும் மாற்றங்கள் வேண்டும் என்கிறார்கள். அதை நிச்சயம் செய்வோம். பாரதிய ஜனதா தோற்கும் என்று காங்கிரசின் இளவரசர் சொல்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நழுவி சென்று விட்டனர். அப்போதே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர். இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது. நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.


    தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தென் இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் அபரிமிதமான ஆதரவை கொடுத்தனர். அன்பு மழையை பொழிந்தனர். தென் இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஆட்சியைதான் மக்கள் பார்த்து வருகிறார்கள். அந்த கட்சிகளின் ஆட்சிகள் அரசை தவறாக வழிநடத்துவதையும், பிரிவினைவாத செயல்களை செய்வதையும் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதையும் தான் பார்த்து வருகிறார்கள். மொத்தத்தில் தென் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டு இருப்பதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் மீதும், மாநில கட்சிகள் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தென் மாநில மக்கள் மத்தியில் பா.ஜ.க. தலைமையில் நடைபெறும் சிறப்பான ஆட்சியையும் பார்க்கிறார்கள்.

    மக்கள் நல திட்டங்களில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள முக்கிய திருத்தங்களையும் தென் மாநில மக்கள் பார்க்கிறார்கள். நாங்கள் கொண்டு வந்துள்ள முக்கிய நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பாரதிய ஜனதாவிடம் அவர்கள் நம்பிக்கை ஒளியை பார்க்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவை மக்கள் நம்ப தகுந்த மாற்று சக்தியாக ஏற்க தொடங்கி இருக்கிறார்கள். தென் இந்தியாவில் பாரதிய ஜனதாதான் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக கடந்த தேர்தலில் திகழ்ந்தது. இந்த தடவை தென் இந்தியாவில் அதிக வெற்றி பெறும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தமிழகம் உள்பட தென் இந்தியாவில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறும். இந்த தடவை தென் இந்திய தேர்தல் முடிவுகள் பல பாரம்பரிய கதைகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும். தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரிக்கும். தேர்தல் முடிவு வெளியாகும் போது அதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
    • மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது.
    • சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

    டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டம், இருக்கைகளுக்கு சண்டை போட்ட பயணிகள், இளம் ஜோடிகளின் அத்துமீறல் என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குழு ஒன்று பாரம்பரிய பாடல்களை பாடி நடனமாடும் காட்சிகள் உள்ளது. அந்த குழுவில் 5-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். அனைவருமே பாரம்பரிய பாடல்களை பாடிய நிலையில், சிறிது நேரத்தில் அனைவரும் குழுவாக சேர்ந்து நடனமாடுகின்றனர்.

    இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்களின் பாரம்பரிய நடனத்தை பாராட்டினாலும், பொது இடங்களில் இதுபோன்ற நடனமாடுவது சரியல்ல என பதிவிட்டனர்.

    சில பயனர்கள், மெட்ரோ நிர்வாகம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.



    • டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்.
    • பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். டெல்லி காங்கிரஸ் உள் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா தலையிடுவதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க. பக்கம் தாவலாம் என தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை
    • பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது

    ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு நிமிட தேர்தல் பிரச்சாரப் பாடலை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 25-ம் தேதி கட்சி தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த பாடல் ஆளும் கட்சியையும் விசாரணை நிறுவனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் கட்சியின் பிரசார பாடலில் பாஜகவை குறிப்பிடவில்லை மற்றும் தேர்தல் நடத்தை நடத்தை விதிகளை மீறவில்லை. இதில் உண்மை வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் உள்ளன.

    பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

    பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நிறுத்த வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மின் குற்றசாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "விதிகளை மீறி இருந்ததால் பரப்புரை பாடலில் சில வரிகளை மட்டுமே மாற்ற பரிந்துரைத்தோம். கெஜ்ரிவால் சிறையில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ள வரிகள் நீதித்துறையை அவதூறு செய்வதாக உள்ளது. விதிகளுக்கு முரணான இந்த சொற்கள் விளம்பரத்தில் பலமுறை வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    ×