search icon
என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது.
    • நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார்.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா இன்று அரியானா மாநிலம் ஜாஜ்ஜரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அமித் ஷா பேசும்போது கூறியதாவது:-

    பா.ஜனதா மெஜாரிட்டி பெற்றுவிட்டால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள் என காங்கிரஸ் பொய்யை பரப்பி வருகிறது. இந்த நேரம் வரை பா.ஜனதா பாராளுமன்றத்தில் இருக்கும்வரை யாரும் இடஒதுக்கீட்டை தொட முடியாது. ராகுல் காந்தி தேர்தல் தொடங்குவதற்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். தேர்தல் முடிந்த பிறகு அது காங்கிரஸ் துண்டோ யாத்திரையாகும். தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரரை பார்க்க முடியாது.

    நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில், மோடி ஜி 270 இடங்களை தாண்டிவிட்டார். 400-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ராகுல் பாபா 40 இடங்களை கூட தாண்டாது. ஒரு பக்கம் பிரதமர் மோடி இடஒதுக்கீடடை பாதுக்கும் வேலையில், மறுபக்கம் காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுக்கிறது.

    வாக்கு வங்கிக்காக சட்டப்பிரிவு 370-ஐ காங்கிரஸ் நீண்ட காலமாக அப்படியே வைத்திருந்தது. மோடி ஜி 370-ஐ நீக்கி பயங்கரவாதத்தில் இருந்து காஷ்மீரை விடுவிக்க வேலை செய்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. நம்முடையதாக இருக்கும். அதை திரும்பவும் எடுத்துக் கொள்வோம்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • மம்தா சகோதரர் ஹவுரா எம்.பி. மீது அதிருப்தியில் இருந்தார்.
    • பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.

    மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று மேற்கு வங்காள மாநிலம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ளது.

    இதில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவும் ஒன்று. இந்த தொகுதியில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் சகோதரர் ஸ்வாபன் பானர்ஜிக்கு (பாபுன்) வாக்கு உள்ளது.

    இன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக பாபுன் வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

    இது தொடர்பாக பாபுன் கூறுகையில் "நான் என்னுடைய வாக்கை செலுத்துவதற்காக சென்றேன். அப்போது என்னுடைய வாக்கு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. நான் பல ஆண்டுகளாக வாக்கு செலுத்தியிருக்கிறேன். இந்த வருடம் வாக்களிக்க முடியாததால் ஏமாற்றம் அடைகிறேன். ஜனநாயக நாட்டின் குடிமகனாக எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது" என்றார்.

    "தேர்தல் ஆணையம் முழு விவரத்தையும் கவனித்து வருகிறது. இது ஏன் நடந்தது என்பது குறித்து விளக்கம் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும்" என திரிணாமுல் காங்கிரஸ் செய்து தொடர்பாளர் ஷாந்தனு சென் தெரிவித்துள்ளார்.

    ஹவுரா எம்.பி.யாக இருக்கும் பிரசுன் பானர்ஜி மீது தனது அதிருப்தியை பாபுன் தெரிவித்திருந்தார். இதனால் சுயேசட்சையாக போட்டியிடுவார் என செய்தி வெளியானது. மேலும், பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் வதந்தி பரவியது.

    பாபுன் மேற்கு வங்காள மாநில ஒலிம்பிக் சங்க தலைவர், பெங்கால் ஹாக்கி சங்க தலைவர், பெங்கால் குத்துச்சண்டை சங்க செயலாளராக உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுப் பிரவு பொறுப்பாளராகவும் உள்ளார்.

    • பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது.
    • அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 6 மணி முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா் - ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 தொகுதி இதில் அடக்கம். அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சுனில் செட்டி, பார்ஹான் அக்தர், பரேஷ் ராவல், தர்மேந்திரா நடிகை ஜான்வி கபூர், ஹேம மாலினி உள்ளிட்டோர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

    மேலும் மும்பை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக காலம் காணும்மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் களம் காணும் ஸ்மிரிதி இரானி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி ஆகியோர் அவரவர் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர். 

    • காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும்.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள்.

    பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் சோனிபட் கோஹனாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    2024 மக்களவை தேர்தல் ஒரு போர் போன்றது. ஒரு மக்கள் வளர்ச்சி, மறுபக்கம் வாக்கு ஜிஹாத். யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை அரியானா மக்களிடம் கேட்க விரும்புகிறேன். (சிறிது நேரம் காத்திருந்த மோடி, மோடி ஆட்சி என்று மக்கள் முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி) உங்கள் பதில் முடிவு செய்துள்ளது.

    காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும் என தைரியத்திற்கு பெயர்போன அரியானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சொல்ல விரும்புகிறேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தடையாக விளங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் மயானத்தில் புதைத்துவிட்டோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.

    • நரேந்திர மோடி ஜி உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன்.
    • இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது பிரதமர் மோடியை என்ன வேண்டுமென்றாலும் என்னால் சொல்ல வைக்க முடியும் எனக் கூறினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி ஜி, உங்களால் அதானி, அம்பானி பெயரை உச்சரிக்க முடியாது என நான் சொன்னேன். இரண்டு நாள் கழித்து நரேந்திர மோடி அதானி, அம்பானி குறித்து சொன்னார்.

    வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும் taka-tak taka-tak taka-tak... என நான் சொன்னேன். பின்னர் பிரதமர் மோடி அவரது பேச்சில் taka-tak பயன்படுத்தினார்.

    மக்களாகிய நீங்கள் பிரதமர் மோடியிடம் கேட்க விரும்புவதை, அதை மோடியால் என்னால் சொல்ல வைக்க முடியும். அதேபோல் பிரதமர் மோடியிடம் ஏதாவது சொல்ல விரும்பவில்லை என்றாலும், நீங்கள் என்னிடம் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    ராகுல் காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கே வருகிற 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.
    • எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உங்களை எச்சரிக்க இன்று நான் இங்கே வந்துள்ளேன். அவர்கள் உங்களுடைய வாக்கை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்களுக்காக வாக்கு ஜிஹாத் செய்பவர்களுக்கு பரிசுகளை பகிர்ந்து அளிப்பார்கள்.

    இந்தமுறை தேர்தலுக்கு முன்னதாகவே சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கதம் தெரிந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொருவரின் சொத்துகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக சொல்லிக்கொண்டு வருகிறது. பின்னர் அவர்கள் உங்களுடைய சொத்துகளின் ஒரு பகுதியை, அவர்களுடைய வாக்கு வங்கியான, அவர்களுக்காக "வாக்கு ஜிஹாத்" செய்தவர்களுக்கு கொடுப்பார்கள்.

    காங்கிரஸ் கட்சி சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் அணுஆயுத குண்டு வைத்திருப்பாக சொல்கிறார்கள். ஆனால், குண்டுகளை பராமரிக்க பாகிஸ்தானிடம் போதுமான பணம் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ஹமிர்பூரில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆனால், பா.ஜனதாவின் கன்வார் புஷ்வேந்த்ரா சிங் சண்டல்- சமாஜ்வாடியின் அஜேந்திரா சிங் லோதி ஆகியோருக்கு இடையில்தான் போட்டி நிலவுகிறது.

    • கடந்த முறையை விட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம்- அமித் ஷா
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது- டி.கே. சிவகுமார்

    மக்களவை தேர்தலில் 400 இடங்கள் இலக்கு நிர்ணயித்து பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பா.ஜனதாவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    கள நிலவரம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இல்லை. இதனால்தான் பிரதமர் மோடி விரக்தியில் இந்து-முஸ்லிம் குறித்து பேசுகிறார் என விமர்சிக்கின்றனர்.

    அதேவேளையில் 3-வது முறையாக பிரதமராக தேர்ந்ததெடுக்கப்பட்ட பின், முதல் 100 நாள் திட்டத்திற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்து வருகிறார்.

    கடந்தமுறை உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 65 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா உறுதியாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நாங்கள் (இந்தியா கூட்டணி) 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவகுமார் கூறுகையில் "உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. நாங்கள் 40 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தேன். அப்போது எங்கள் கட்சியின் வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட்டேன்

    ஏழை மக்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக 10 கிலோ இலவச ரேசன் வழங்கப்படும் என கார்கே மேலும் அறிவித்துள்ளார். ஆகவே, முடிவுகள் எங்களுக்கு சாதமாக இருக்கும்.

    இவ்வாறு டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
    • அமேதி தொகுதியில் இந்த முறை சர்மா என்பவர் போட்டியிடுகிறார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் காந்தி குடும்பத்தை (ராகுல் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) சேர்ந்தவர்கள் காலங்காலமாக போட்டியிட்டு வந்தனர்.

    கடந்த மக்களவை தேர்தலின்போது அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிட்டனர். ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.

    தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இதனால் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் இருந்து ரேபரேலி தொகுதிக்கு மாறியுள்ளார். அமேதி தொகுதியில் சர்மா போட்டியிடுகிறார்.

    ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி தனது சகோதரருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறார். ரேபரேலி தொகுதி குடும்ப தொகுதி என பிரியங்கா காந்தி அடிக்கடி கூறி வருகிறார்.

    இந்த நிலையில் அமித் ஷா அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "ரேபரேலி எந்த குடும்பத்தின் தொகுதியும் கிடையாது. அது மக்களுடைய தொகுதி" என்றார்.

    மேலும், இயற்கை பேரழிவுகள் அல்லது விபத்துகளின் போது காந்தி குடும்பம் ரேபரேலிக்கு சென்றதில்லை என்று பாண்டே கூறியது சரிதான் என்றார்.

    சமாஜ்வாடி எம்.எல்.ஏ. பாண்டே இன்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் காங்கிரஸ் அதை நிராகரித்தது. காங்கிரஸ் ஆட்சியை வந்தால் அயோத்திக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் என்றார்.

    • பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது.
    • பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

    பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சிம்லாவில் உள்ள குலுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது கங்கனா ரனாவத் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு ஆட்டா (மாவு), மின்சாரம் தேவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வளையல்கள் கூட இல்லை என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் (பரூக் அப்துல்லா மற்றும் மணி சங்கர் அய்யர் பாகிஸ்தான் அணுஆயுதத்தை பயன்படுத்தும் எனக் கூறியதை சுட்டிக்காட்டி) பாகிஸ்தான் வளையல் அணியவில்லை என்கிறர்கள். பாகிஸ்தான் வளையம் அணியவில்லை என்றால், இந்தியா அணிய வைக்கும்.

    பயந்துபோன பிரதமர் தலைமையில் ஸ்திரமற்ற மற்றும் பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை இந்தியா விரும்பவில்லை. மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள். அதை தவிர்த்து மற்ற பட்டன்களை அழுத்தினால், உங்களுடைய வாக்கு வீண் என்பதாகிவிடும்

    இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைப்பது குறித்து மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.

    அது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா பதில் அளிக்கையில் "பாதுகாப்பு மந்திரி அதைச் சொன்னால், மேலே செல்லுங்கள். நாங்கள் யார் நிறுத்துவது? ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் (பாகிஸ்தான்) வளையல் அணியவில்லை. அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அந்த அணுகுண்டு நம் மீது விழும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. உள்ளது மற்றும் இருக்கும். இந்தியாவின் வளர்ந்து வரும் சக்தி, கௌரவம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை இந்தியாவில் சேர விரும்புவதற்கு வழிவகுக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    மணி சங்கர் அய்யர் "பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. எனவே, அந்நாட்டுக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானிடமும் அணுகுண்டு இருக்கிறது. அப்படி மரியாதை அளிக்காவிட்டால், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டை பயன்படுத்துவது பற்றி பரிசீலிப்பார்கள். பாகிஸ்தானில் யாராவது பைத்தியக்கார மனிதர் பதவிக்கு வந்து, அணுகுண்டை பயன்படுத்தினால், அது நல்லதல்ல. அது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

    • மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது.
    • அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை தோற்கடிக்க நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்த சிக்கலால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டி என அறிவித்தார். இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ்- பா.ஜனதா இடையே முத்தரப்பு போட்டி நிலவுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து ஏறக்குறைய மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக தீர்த்துக் கொண்டது.

    தற்போது நான்கு கட்ட வாக்குப்பதிகள் முடிவடைந்து விட்டனர். இந்தியா கூட்டணி தங்களுக்குதான் வாய்ப்பு என கூறி வருகிறது. அதேவேளையில் 3-வது முறையாக பிரதமாக பதவி ஏற்பது உறுதி என மோடி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன், மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும். இந்தியா கூட்டணி பெங்கால் காங்கிரசை கணக்கில் கொள்ளாது என்கிறார். இந்தியா கூட்டணி பற்றி அவர் புகார் கூற இருந்தால், அது உருவானபோது எழுப்பியிருக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவதாகவும், காங்கிரஸ் 40 தொகுதிகளை தாண்டாவது எனவும் பா.ஜனதா கூறியது. தற்போது மம்தா சொல்வதின் அர்த்தம் காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதுதான்.

    • மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன.
    • ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன. மக்களவை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி உடைந்துவிடும். தோல்விக்கு பிறகு பலிகடாவை தேடுவார்கள்.

    அமேதியில் (ராகுல் காந்தி கடந்த வருடம் தோல்வியடைந்ததை மனதில் வைத்து கூறினார்) இருந்து காங்கிரஸ் சென்று விட்டது. ரேபரேலியில் (தற்போது ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார்) இருந்தும் செல்வார்கள். ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக பதோஹியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியால் டெபாசிட்டை பாதுகாப்பதே கடினம்தான். ஆகவே, அவர்கள் பதோஹியில் பரிசோதனை அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது இந்துக்கள் கொலை, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான துன்புறுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை. அங்கு பல பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்துக்களை கங்கை நதியில் மூழ்கடித்து கொன்று விடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் இந்த வகையிலான அரசியலைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் செய்கிறது. சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் திரிணாமுல் அரசியலை முயற்சிக்க விரும்பின. அது அரசியல் திருப்திபடுத்துதல், தலித்துகள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் அரசியலாகும்" என்றார்.

    • நாஷிக் மாவட்டத்திற்கு ஏக்நாத் ஷிண்டே ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார்.
    • அவர் கொண்டு வந்த லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    மகாராஷ்டிர மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். இவர் இன்று நாஷிக் மாவட்டம் பஞ்சாவதிக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டரில் அவருடைய இரண்டு லக்கேஜ் பேக் (சூட்கேஸ், பேக்) இருந்தன.

    சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் ஏக்நாத் ஷிண்டேயின் லக்கேஜ்களை பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். இதற்கு ஏக்நாத் ஷிண்டே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அதிகாரிகள் சென்றதும் ஏக் நாத் ஷிண்டே புறப்பட்டுச் சென்றார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றன. 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 5-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற 20-ந்தேதி நடைபெற இருக்கிறது. 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    ×