உள்ளூர் செய்திகள் (District)

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு இன்று மாலை கூடுகிறது

Published On 2024-10-03 07:58 GMT   |   Update On 2024-10-03 07:58 GMT
  • அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது.
  • 2026 சட்டசபை தேர்தல் குறித்து வியூகம்.

சென்னை:

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு ஏற்கனவே இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி, விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்தியது.

அப்போது கட்சிப் பணிகளை வேகப்படுத்துவது பற்றி உதயநிதி ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது.

இந்த கூட்டம் முடிந்ததும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

Tags:    

Similar News