search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது
    • அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்

    அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.

    அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

    அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.

    அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
    • இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நமது அண்டை நாடான மாலத்தீவில் புதிய அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பலை மாலத்தீவு கடற்பகுதியில் நிறுத்த அனுமதி வழங்கியது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டு இருந்த அந்த கப்பல் பின்னர் திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்-ஹாங்-3 என்ற சீன உளவு கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

    லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை வேவு பார்க்க முடியும்.

    இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது, எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர்.
    • அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.

    பஹ்ரைன்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைகன் கென்ன கம் ( வயது 31). மாடல் அழகியான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    பஹ்ரைனில் அவருக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக கைகன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இவர் சமூக வலை தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சமூகவலை தளங்களில் பதிவடுவதை நிறுத்தினார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் மாடல் அழகி கைகன் கென்னகம் பஹ்ரைனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. அவரது உடலில் எந்த காயமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அவரது கையில் டாட்டூ வரைந்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அது தங்களது மகள் தான் என கைகனின் பெற்றோர் ஒத்துக்கொண்டனர்.

    மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக தூதரகத்திலும் புகார் மனு கொடுத்து உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக வெளிநாடுகளில் மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் இளம் வயதில் மரணத்தை தழுவுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
    • மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது என்றார்.

    சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை கொண்டு ஒருவர் டி.வி. வாங்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

    ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 அமெரிக்க டாலர் முதல் 263 டாலர் வரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன். வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார். 

    • கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது.
    • விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

    அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி மாகாணத்தில் உள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், " வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது. மரத்தில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொருங்கியது.

    3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
    • உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    ஹனோய்:

    அண்டை நாடான வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார்.

    இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
    • பிளசன்டன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தருண்ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சென்றார். கலிபோர்னியாவில் பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது.

    இதில் அவர்களது கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி தருண் ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கார் முற்றிலுமாக நொறுங்கியிருப்பதால் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் பிளசன்டன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார்.
    • சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோ நகரில் வசித்து வந்த இந்தியர் சச்சின் குமார் சாஹூ (வயது 42). சம்பவத்தன்று சச்சின் தன்னுடன் அறையில் தங்கியிருந்த தோழியை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், 2 போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்தனர்.

    அப்போது சச்சின் ஒரு பெண் மீது வேண்டுமென்றே காரை மோதுவதை போலீஸ் அதிகாரிகள் பார்த்தனர். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் சச்சினை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் சிக்காமல் சச்சின் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அதனை தொடர்ந்து சச்சின் காரை மோதியதில் படுகாயம் அடைந்த 51 வயது பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சச்சினுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் சச்சின் மீண்டும் தனது அறைக்கு வந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் 2 போலீஸ் அதிகாரிகள் சச்சின் இருக்கும் இடத்துக்கு விரைந்தனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் சச்சின் தனது காரில் ஏறி தப்ப முயன்றார். ஆனால் போலீஸ் அதிகாரிகள் இருவரும் துப்பாக்கி முனையில் அவரது காரை வழிமறித்தனர்.

    தங்களிடம் சரணடைந்துவிடும்படி சச்சினை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதற்கு செவிசாய்க்க மறுத்த அவர் போலீஸ் அதிகாரிகள் மீது காரை ஏற்றினார். அதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் சச்சினை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

    காயம் அடைந்த 2 போலீஸ் அதிகாரிகளையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதனிடையே சச்சின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவருடைய முன்னாள் மனைவி லியா கோல்ட்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

    • தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சி.
    • படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து, மாநில ஆளுநர் எடுவார்டோ லைட், ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேயர் செபாஸ்டியாவோ மெலோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    • உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் 28 மற்றும் 29-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை மறுதினம் சவுதி புறப்படுகிறார்.

    உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் 28 மற்றும் 29-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஷெபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் செல்கிறார். சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொள்கிறார்.

    ரியாத்தில் இந்த உலக பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.

    சவுதி பட்டத்து இளவரசர் உடன் தனிப்பட்ட முறையில் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் சவுதி முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இரு நாடுகளும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
    • பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.

    உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்களின் கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் பலரும் வித்தியாசமான செயல்கள் மற்றும் சாகசங்களை செய்து வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சாலைகளில் விசித்திரமான வடிவமைப்புடன் சென்ற காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை டிரைவர் வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன. சக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உள்பட அனைத்துமே தலைகீழாக இருக்கும் நிலையில், பார்ப்பதற்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காரை எப்படி ஓட்டி செல்கிறார்? என்று பயனர்கள் திகைப்படையும் வகையில் வீடியோ உள்ளது.

    இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், வித்தியாசமான வடிவமைப்பிற்காக கார் உரிமையாளரை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.



    • எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர்.
    • 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியில் உள்ள பிரபல சுற்றுலா நகரமாக வெனிஸ் விளங்குகிறது. ஏரிகளால் சூழ்ந்த இந்த நகரம், அதன் இயற்கையான அமைப்புக்கும், கலை கட்டுமானத்திற்கும் பெயர் போனதாக விளங்குகிறது. பல்வேறு கால்வாய்களை உள்ளடக்கிய இந்த நகரில் படகு போக்குவரத்து சேவைவே முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது.

    எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.

    வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க ஒருநாள் கட்டணமாக 447 ரூபாய் (5 யூரோ) வசூலிக்கப்பட உள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×