என் மலர்
அமெரிக்கா
- மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடு செய்ததாக வழக்கு நடந்து வருகிறது.
- கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனவே இந்த மூன்று வழக்குகளையும், ஒரே அமர்வில் விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நியூயார்க் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணையின்போது, அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த உதவுமாறு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகளின் உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க பங்கு, பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.
மேலும் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நீதிமன்றத்தில் பங்கு பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.
- "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் வெள்ளை மாளிகை வீடியோ வெளியிட்டுள்ளது.
- எலான் மஸ்க் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் மூன்று கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் நாடு கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு சங்கிலி மற்றும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகை ASMR வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
"ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் 40 வினாடி வீடியோவை வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அறிக்கைப்படி சியாட்டில் நகரில் இருந்து புறப்படும் அந்த விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
வீடியோவில், அதிகாரிகள், நாடுகடத்தப்படுபவர்களை சங்கிலியால் பிணைப்பது, அவர்கள் (கைதிகள்) காலில் பிணைந்த சங்கிலிகளுடன் விமானத்தில் ஏறுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ASMR: Illegal Alien Deportation Flight ? pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025
அமெரிக்கா பிறநாட்டவரை கீழ்தரமாக நடத்தும் இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது. இதற்கிடையே உலக பணக்காரரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க், தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.
- உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
- இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்?
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி உதவியை நிறுத்தியது குறித்து டிரம்ப் கூறியதாவது:-
இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை.
எங்களைப் பொறுத்த வரை உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்ய முடியாது. இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்? அங்கு வாக்குப்பதிவுக்கு 21 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அமெரிக்கர்களின் வரி பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆட்டோ மொபைல், செமிகண்டக்டர், மருந்து இறக்குமதிகளுக்கு சுமார் 25 சதவீத வரி விதிக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையம் அருகே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் விமானம் வெடித்து சிதறி 67 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் சங்கம் கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கையால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் விபத்துகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- ‘அதிபர் நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
- கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம்
அமெரிக்காவின் அதிபாராக 2 ஆவது முறையாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தலில் அவருக்காக அதிக செலவுகளை செய்து ஆதரவு அளித்த உலக பணக்காரார் எலான் மஸ்க், அரசின் செயல்திறன் மேம்பாடு DODGE என்ற புதிய துறைக்கு தலைவரானார்.
இந்த துறைக்கு அமெரிக்க மக்களின் பாதுகாக்கப்பட்ட தகவல்களை அணுகுதல் உள்ளிட்ட ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டன.
அரசின் வீண் செலவை குறைக்க ஆயிரக்கணக்காக அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், மக்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துதல் என தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் ஆலோசனையில் பேரில் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவைடிகைகளை மேற்கொண்டு வருகிறதார்.
மேலும் பிறப்பால் குடியுரிமை பெறுவதை ரத்து செய்தது, திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் பிரசிடெண்ட்ஸ் டே கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை உண்டு. அமெரிக்க அதிபராக இருந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மக்கள் நன்றி செலுத்துவர். ஆனால் இந்த வருட பிரசிடெண்ட்ஸ் டேவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
‼️‼️ Thousands of Americans are rallying outside the Capitol to protest Elon Musk and Donald Trump's destruction of the US government.We need more of this.(video per @PenguinSix) pic.twitter.com/zHcvkcGbzY
— Morgan J. Freeman (@mjfree) February 17, 2025
50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'அதிபர் நாளில் அரசர் வேண்டாம்' என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.
டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளி எலான் மஸ்க் ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டில் கூட்டாட்சி அமைப்பையும் அரசாங்கத்தையும் அழிக்க முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் கூறினர்.

டிரம்பை அகற்று, மஸ்க்கை அகற்று போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். டிரம்பை ஒரு சர்வாதிகாரி என்றும் கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
- நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் தொலைபேசியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதனுடன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். அப்போது அவர்கள் உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து வருவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக ரஷிய அதிபர் புதினை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உக்ரைனில் சண்டையை நிறுத்த உண்மையிலேயே புதின் விரும்புகிறார் என நான் நம்புகிறேன். இதை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். புதினை விரைவில் சந்திக்க இருக்கிறேன். இதற்கான நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது விரைவில் நடக்கலாம்.
இது தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் அமெரிக்க குழுவினர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். இந்த சந்திப்பில் அவரும் கலந்து கொள்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இந்த சூழ்நிலையில் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இதனால் போர் விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காரை பின்னால் கொண்டு வருவதற்கு இடையூறாக கேட் இருக்கிறது.
- வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டி பதிவிட்டனர்.
அமெரிக்காவில் உள்ள உட்டா நகரில் ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் சாதாரணமாக சென்று வந்தன. சம்பவத்தன்று ரெயில் பாதையில் வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது ரெயில் வந்த நிலையில், அவ்வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என கேட் போடப்பட்டது.
இதை கவனிக்காமல் கார் டிரைவர் ஒருவர் ரெயில்வே கேட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால் அவரது கார் கேட்டுக்குள் சிக்கிய நிலையில், டிரைவர் அதில் இருந்து காரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். ஆனால் காரை பின்னால் கொண்டு வருவதற்கு இடையூறாக கேட் இருக்கிறது.
இந்நிலையில் ஹாரன் ஒலித்தபடியே ரெயில் வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த கார் டிரைவர் விரைவாக செயல்பட்டு காரில் இருந்து கீழே இறங்கி ஓடினார். பின்னர் அந்த தடத்தில் வேகமாக சென்ற ரெயில் கார் மீது மோதியது. இதில் கார் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. துரித நேரத்தில் இறங்கி ஓடியதால் டிரைவர் சாமர்த்தியமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவங்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டி பதிவிட்டனர்.
- வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை ஏற்று 75,000 அரசு ஊழியர்கள் வெளியேற சம்மதித்துள்ளனர்.
- அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அரசு நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார்.
அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டும் வேலையை DODGE செய்து வருகிறது. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் அதிரடியாக முடக்கினார் டிரம்ப்.
இந்த நிலையில்தான் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

அந்த வகையில் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாகவும், அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதுவரை, வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு Probation காலத்தில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கத்துக்கு இலக்காகி உள்ளனர். சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிநீக்கத்துக்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையங்களில் உள்ள Probation ஊழியர்களில் பாதி பேர் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தித் துறையில் சுமார் 1,200 முதல் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 325 ஊழியர்களும் அடங்குவர்.
அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில் தேசிய பூங்காக்கள் சேவை நிறுவனம், சுமார் 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

வரிகளை வசூலிக்கும் உள்நாட்டு வருவாய் சேவை நிறுவனம், அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பருவகால தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதையும், காடுகளில் இருந்து காய்ந்த மரம் போன்ற தீபற்றும் ஆபத்து கொண்டவற்றை அகற்றும் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை டிரம்ப் மற்றும் மஸ்க் அறிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு வெளியேற 75,000 அரசு ஊழியர்கள் சம்மதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பணிநீக்கத்துக்கு எதிராக பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் இறந்தார்.
- 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்
உலக பணக்காரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது 'வைட் அவேக் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்ற எரோல் மஸ்க் பேசியதாவது, ஒபாமா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் பெண்ணாக உடையணிந்த ஒரு ஆணை மணந்தார் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோசுவா ரூபின் உடனே, "மிஷெல் ஒபாமா ஒரு ஆண் தானா?" என்று கேட்டபோது, எரோல், "நிச்சயமாக, அது உங்களுக்குத் தெரியாதா?" என்று பதிலளித்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ், மிச்செல் ஒபாமாவை திருநங்கை என்றும், பராக் ஒபாமா 'ஒரு ஓரினச்சேர்க்கையாளர்' என்றும் பேசியிருந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் செப்டம்பர் 4, 2014 அன்று இறந்தார்.
இதை குறிப்பிட்டு பேசிய எரோல் மஸ்க், "ஜான் ரிவர்ஸ் அதைப் பற்றிப் பகிரங்கமாகக் பேசினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்துகிடந்தார். அவர்கள் அவரை வெட்டிக் கொன்றார்கள்" என்று கூறினார்.

மேலும் " நிச்சயமாக மிஷேல் ஒபாமா ஒரு ஆண்தான். 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்" என்று எரோல் மஸ்க் தெரிவித்தார்.
- ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
- ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்தது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் ப்ரொபசலை ஓபன்ஏஐ நிறுவனம் நிராகரித்துள்ளது. OpenAI விற்பனைக்கு இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே எலான் மஸ்க்கின் கோரிக்கை தொடர்பாக ஓபன்ஏஐ சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று கிண்டலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
- நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது.
தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை மீட்டுக் கொண்டு வருவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் ராக்கெட் அனுப்ப உள்ளது என நாசா அறிவித்திருந்தது.
இந்நிலையில், வெண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர். அதில், "நாசாவின் க்ரூ-10 விண்கலம் மார்ச் 12 ஆம் தேதி பூமியில் இருந்து ஏவப்படும் என்றும் மார்ச் 19 ஆம் தேதி நாங்கள் பூமிக்கு திரும்புவோம்" என்று தெரிவித்தனர்.
நான் அதிபர் ஆனால் சுனிதா வில்லியம்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
- லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரோம்:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு (வயது 88) திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வாடிகனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வாடிகன் கூறும்போது,
போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆனால், அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளது என்று தெரிவித்துள்ளது.