என் மலர்
விளையாட்டு
- இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
- பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.
பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.
போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
பிரேசில் லெஜெண்ட்ஸ் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டியை நடிகை ஷாலினி அஜித்குமார் பார்த்து ரசித்தார். பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ நடிகர் அஜித்-ன் மகன் ஆத்விக்கை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.
- 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
கடந்த போட்டியில் 197 ரன்கள் இலக்கை எட்டமுடியாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இந்த போட்டியில் 183 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாத 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ந்து 2 போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு பின்பு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட சென்னை அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
- எம்.எஸ்.தோனி சிறப்பான ஸ்டம்பிங் செய்து நிதிஷ் ராணா விக்கெட்டை தூக்கினார்.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா அரைசதத்தை கடந்து சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.
அஸ்வின் வீசிய 12 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு போர் என அதிரடியாக ஆரம்பித்தார் நிதிஷ் ரானா. அந்த ஓவரின் 3 ஆவது பந்தை வீசும்போது நிதிஷ் ரானா இறங்கி வந்து அடிக்க முயன்றதை முன்பே கணித்த அஸ்வின் பந்தை வைடாக வீசினார். அப்போது எம்.எஸ்.தோனி சிறப்பான ஸ்டம்பிங் செய்து நிதிஷ் ராணா விக்கெட்டை தூக்கினார்.
200 ரன்களுக்கு மேல் விளாசும் வாய்ப்பிருந்த ராஜஸ்தான் அணி 181 ரன்கள் அடித்ததற்கு அஸ்வின் எடுத்த இந்த விக்கெட் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
- இந்திய அணி அக்டோபர், நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
- அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் ஆடுகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 19-ம் தேதி பெர்த்தில் நடக்கிறது. எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகள் அடிலெய்டு (அக்டோபர் 23), சிட்னியில் (அக்டோபர் 25) நடைபெறுகிறது.
டி20 ஆட்டங்கள் கான்பெர்ரா (அக்டோபர் 29), மெல்போர்ன் (அக்டோபர் 31), ஹோபர்ட் (நவம்பர் 2), கோல்டுகோஸ்ட் (நவம்பர் 6), பிரிஸ்பேன் (நவம்பர் 8) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா செல்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்டில் விளையாடுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பெர்த்தில் மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது.
- ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் நினைவு பரிசு வழங்கினார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக நிதிச்ஷ் ரானா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, எம்.எஸ்.தோனிக்கு பி.சி.சி.ஐ. நினைவு பரிசு வழங்கி கவுரவித்தது.
ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார்.
- சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் நேற்று நடந்த 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா 81 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், தோல்வி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:
நாங்கள் நல்ல தொடக்கங்களைப் பெறவில்லை. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றவுடன், விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும்.
நாங்கள் தவறான களங்கள் மூலம் 8-10 கூடுதல் ரன்களை விட்டுக்கொடுத்தோம். அதை நாங்கள் மேம்படுத்த வேண்டும்.
பல ஆண்டுகளாக அஜிங்க்யா 3வது இடத்தில் பேட்டிங் செய்தார், ராயுடு மிடில் ஓவர்களைக் கையாண்டார். நான் பின்னர் வந்தால் நிலைமையை சீராக்க முடியும் என நாங்கள் நினைத்தோம். அதே நேரத்தில் திரிபாதி முன்கூட்டியே அடிக முடியும்.
இது ஏலத்தில் முடிவு செய்யப்பட்டது. அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்படியிருந்தாலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் ஆரம்பத்தில் பேட்டிங் செய்யத் தொடங்குகிறேன் என தெரிவித்தார்.
- ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
- ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸ் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்ஸ் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், கெய்க்வாட் என 4 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார்.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 182 ரன்களைக் குவித்தது.
- அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்களை மட்டுமே எடுத்தது.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
சி.எஸ்.கே. சார்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் ஆடி 63 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார். எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயன் கேப்டனாக இருந்தார்.
- பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோ கேப்டனாக இருந்தார்.
சென்னை:
பிரேசில் லெஜண்ட்ஸ், இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் இடையேயான நட்சத்திர கால்பந்து போட்டி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் ஐ.எம்.விஜயனும், பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கு ரொனால்டினோவும் கேப்டன்களாக இருந்தனர்.
போட்டியின் முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியைக் காண திரண்டு வந்த கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
பிபா கால்பந்து உலகக் கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் அனிகேத் வர்மா அதிரடியாக ஆடி 74 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 18.4 ஓவரில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிரடியாக ஆடிய அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.
டெல்லி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 16 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டு பிளெஸ்சிஸ் 50 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்குக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்.
அனிகேத் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். அனிகேத் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார். அவர் எங்களுக்கு வெற்றி பெற பாதி வாய்ப்பைக் கொடுத்தார்.
மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை.
கடந்த போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என நினைக்கவில்லை. கடந்த இரண்டு ஆட்டங்களில் எல்லாம் நம் வழியில் செல்லவில்லை. மிக விரைவில் நாங்கள் மீண்டும் முன்னேறுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
- 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
- போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு 11-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் மோதியுள்ளன.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே பந்து வீச்சில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா-81, ரியான் பரக்-37, சஞ்சு சாம்சன்-20 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
- 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
- போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.