search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    • 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
    • இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 263 ரன்களை எடுத்தது.

    பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

    இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் களமிறங்கிய திமுத் கருணரத்னே 8 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 39 ரன்களையும் எடுத்தனர். மறுபுறம் நிசங்கா சதம் அடிக்க, ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களை எடுத்த நிலையில், இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    போட்டி முடிவில் பதும் நிசங்கா 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சார்பில் க்ரிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

    • ஜாக் காலிஸ் கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணிக்காக விளையாடியுள்ளார்.
    • 2015-ல் பொறுப்பு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அடித்தப்படியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகமுறை (3) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சுமார் 10 வருடத்திற்குப் பிறகு 2024 சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த இரண்டு முறை வென்ற நிலையில், அவர் ஆலோசகராக இருக்கும்போது 3-வது முறையாக வென்றுள்ளது.

    தற்போது கவுதம் கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சென்றுள்ளார். அத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சப்போர்ட் ஸ்டாஃப் ஆக பணிபுரிந்து வந்த அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டஸ்கொதே ஆகியோரும் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் கொல்கத்தா அணி ஆலோசகர் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரை நியமிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் கிரிக்கெட்டி தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜாக் காலிஸை தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜாக் காலிஸ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச்சிங் ஸ்டாஃப் ஆக இருந்துள்ளார். 2015-ல் பொறுப்பு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேவருடத்தில் பேட்டிங் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

    கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் ஜாக் காலிஸ் 2012 மற்றும் 2014 சீசன்களில் விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா ஆகியோரை நியமிக்க அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ரிக்கி பாண்டிங் டெல்லி அணியில் இருந்து வெளியேறியுள்ளார். சங்கக்காரா இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில்தான் நீடிக்கிறார்.

    • 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
    • இரண்டு சீசன்களில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிரவிட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டதால் ஐ.பி.எல். அணியில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவியும் முடிவடைந்தது.

    இதனைத்தொடர்ந்து ஐ.பி.எல். அணிகள் அவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தது. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராகுல் டிராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதற்கிடையே ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத செக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராகுல் டிராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் டிராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் ஆஃபரை நிராகரித்துள்ளார்.

    ராகுல் டிராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3 சீசனில் விளையாடியுள்ளார். வார்னே ஓய்வுக்குப்பின் இரண்டு சீசன்களில் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார்.

    ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

    • லஹிரு குமாரா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • நிசாங்கா 42 பந்தில் அரைசதம் விளாசி 53 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 263 ரன்கள் சேர்த்தது.

    62 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டதில் இலங்கை பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து 67 ரன்கள் அடித்தார் மற்ற வீரர்கள் சொதப்ப இங்கிலாந்து 156 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இங்கிலாந்து 156 ரன்னில் சுருண்டதால் இலங்கை அணிக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் கருணாரத்னே 8 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்து பதுன் நிசாங்கா உடன் குசால் மெண்டில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பதுன் நிசாங்கா அதிரடியாக விளையாடி 42 பந்தில் அரைசதம் அடித்தார். இலங்கை அணி 15 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பதுன் நிசாங்கா 53 ரன்னுடனும், குசால் மெண்டிஸ் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 125 தேவை. கைவசம் 9 விக்கெட் இருப்பதால் இலங்கை இந்த டெஸ்டில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
    • இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வரால், சுப்மன் கில் இடம் பெற்றுள்ளனர்.

    சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேலுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டெஸ்ட்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் போப் பொறுப்புடன் ஆடி சதமடித்து, 154 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் பென் டெக்க்ட் 86 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதம் கடந்து 64 ரன்கள் எடுத்தார்.

    கருணரத்னே 9 ரன்னும், குசால் மெண்டிஸ் 14 ரன்னும், மேத்யூஸ் 3 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். சண்டிமால் டக் அவுட்டானார்.

    93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது. 6வது விக்கெட்டுக்கு இணைந்த தனஞ்செய டி சில்வா-கமிந்து மெண்டிஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் போட்டி இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.

    6வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 69 ரன்னில் வெளியேறினார். கமிந்து மெண்டிஸ் 64 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் ஹல், ஒல்லி ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • இந்தியா ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பெங்களூரு:

    துலீப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி 321 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்து 181 ரன்னும், நவ்தீப் சைனி 56 ரன்னும் எடுத்தஉள்ளனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா பி அணி சார்பில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    90 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பி அணி இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்து 61 ரன்னும், சர்ப்ராஸ் கான் 46 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா பி அணி சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 275 ரன்களை இலக்காகக் கொண்டு இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணி 198 ரன்களில் ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 57 ரன்னும், ஆகாஷ் தீப் 43 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கு அளிக்கப்பட்டது.

    • இந்தியா சி அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணி 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து வென்றது.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி விளையாடியது.

    முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அக்சர் படேல் 86 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா சி அணி 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித் 72 ரன்கள் அடித்தார்.

    4 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா டி அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னும், ஷ்ரேயாஸ் 54 ரன்னும் சேர்த்தனர்.

    இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதார் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியா சி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா சி அணி 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் அடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆர்யன் ஜுயல் 47 ரன்களும், கெய்க்வாட் 46 ரன்களும் அடித்தனர்.

    ஆட்ட நாயகன் விருது மனவ் சுதாருக்கு அளிக்கப்பட்டது.

    • டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை மொயீன் அலி வீழ்த்தியுள்ளார்.
    • மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி அறிவித்துள்ளார்.

    2014 முதல் அவர் இங்கிலாந்துக்காக 68 டெஸ்ட், 138 ஒரு நாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார்.

    மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் 5 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் மொத்தமாக 366 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

    2019ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும், 2022ல் டி20 உலகக் கோப்பையையும் வென்ற இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம் பெற்றிருந்தார்.

    2022 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 16 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    ஓய்வு பெறுவது தொடர்பாக பேசிய மொயீன் அலி, "எனக்கு 37 வயதாகிறது, இந்த மாத ஆஸ்திரேலிய தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இது அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்கான நேரம். தொடர்ந்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடுவேன். எதிர்காலத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றவும் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
    • 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் 2 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து. அதிகபட்சமாக ப்ரெண்டன் மெக்முல்லன் 56 ரன்கள் அடித்தார்.

    இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி 62 ரன்கள் குவித்த கேமரூன் கிரீன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

    • முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வருகிற 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (செப்டம்பர் 9) துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டிக்கெட் கட்டணம் ரூ. 1000-இல் துவங்குகிறது. அதிகபட்ச விலை ரூ. 15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் காலை 9.45 மணி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. 

    • இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
    • ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.

    இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும்.

    இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார். 

    ×