search icon
என் மலர்tooltip icon

    டெல்லி

    • நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?.

    அதானி, அம்பானி டெம்போ மூலம் எதிர்க்கட்சிக்கு பணம் கொடுத்ததாக பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதானி, அம்பானி குற்ச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடியை தடுப்பது எது? என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி டெம்போ மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அதானி மற்றும் அம்பானி பணம் சப்ளை செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?. அவரிடம் அத்தகைய விரிவான மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்கள் இருந்தால் விசாரணை அமைப்புகளை (சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை) பயன்படுத்த தடுத்தது என்ன?

    கடந்த ஆண்டு ஹம் அதானி கே ஹைன் கவுன் (HAHK) சீரிஸ் கீழ் பிரதமரிடம் 100 கேள்விகளைக் கேட்டோம். தற்போது, டெம்போக்களில் பணப் பைகளைப் பெறுவது குறித்து நாட்டு மக்களுக்கு வாக்குமூலத்தோடு தனது நீண்ட மௌனத்தைக் கலைக்கிறாரா பிரதமர்?

    அதானியை சட்டத்திற்குப் புறம்பாக பாதுகாக்க பிரதமர் எவ்வளவு தூரம் சென்றார் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.
    • ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    அமலாக்கத்துறையின் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் மானைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. " என பேசினார்.

    • தேர்தல் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கார்கே கடிதம்.
    • வாக்குப்பதிவு குறித்த தரவுகள் முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. வாக்குப்பதிவு காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். சில காரணங்களுக்கான ஒன்றிரண்டு இடங்களில் நேரம் மாற்றப்படலாம்.

    வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் சரியான வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடப்படும். ஆனால் முதற்கட்டம் மற்றும் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகும் வாக்குப்பதிவு தரவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது. ஐந்து முதல் ஆறு சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்திருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் குறித்த முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜூன கார்கேவை கடுமையாக எச்சரித்துள்ளது.

    தேர்தல் ஆணையம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள சுமத்தியுள்ளார். தேர்தல் சுமூகமாகவும் நியாயமான முறையிலும் நடந்து வருவதில் குழப்பத்தையும் தவறான கருத்தை பரப்பி இடையூறுகளை உருவாக்கும் நோக்கில் கடிதம் இருப்பதாக கண்டித்துள்ளது.

    சந்தேகங்கள் மற்றும் நல்லிணக்கமின்மை தவிர, அசாதாரண சூழ்நிலையை உருவாக்கலாம். நேரடி தேர்தல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தின் மீதான ஆக்கிரமிப்பு எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக பாதிக்கும் எந்தவொரு செயலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது.
    • இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

    அதன்படி, இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக் கூடாது.

    தேவைப்படும் பட்சத்தில் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுடன் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திடலாம்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரது பங்கு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கக்கூடாது.

    இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

    • மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
    • ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இன்று உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு அமலாக்கத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், இன்று மாலைக்குள் திகார் ஜெயிலில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

    விசாரணை நடைபெற்று நீண்ட நாட்கள் கழித்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட 21 நாட்கள் மாறுபாட்டை உருவாக்கிவிடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அமலாக்க வழக்கின் தகவல் அறிக்கை 2022 ஆகஸ்ட் மாதம் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம்தான் கைது செய்யப்பட்டார் என நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.

    • பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது.
    • பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

    மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் (அம்பானி மற்றும் அதானி) டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

    சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது

    கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் (சிபிஐ அமைச்சர்) அமைதி காத்தது ஏன்?

    விசாரணைக்கான கோரிக்கைக்கு நிதி அமைச்சர் (ED அமைச்சர்) ஏன் பதிலளிக்கவில்லை? அவர்களின் மௌனம் அபத்தமானது.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவில் அனைத்து வித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது.
    • எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.

    உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் புரோட்டீன் சப்ளிமெண்ட் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    இவற்றை உட்கொள்வதால் உடலின் செயல்பாடுகளில் பலவித மாற்றங்களும், உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கிறது.




    இந்த நிலையில் தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR ) இந்திய மக்களுக்கான புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் மற்றும் செயற்கை உணவு பொருட்களில் சர்க்கரை, கலோரி அல்லாத இனிப்புகள் மற்றும் செயற்கை சுவைகள் இருக்கலாம்.இதை சாப்பிடுவதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. 

    எனவே உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் சப்ளிமெண்ட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.




    முட்டை, பால் பால், மோர் மற்றும் சோயா பீன்ஸ், பட்டாணி மற்றும் அரிசி போன்ற பல்வேறு தாவர அடிப்படையிலான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த புரத பவுடர்கள் சப்ளிமெண்ட்ஸ், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் தசை வளர்ச்சிக்காக அதிகமாக பயன்படுத்துவதால் பலவித எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    புரோட்டீன் பவுடர்களை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொள்வதால் எலும்பு தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உருவாகும். ஒவ்வொருவரும் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை அளவு 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.




    நாம் சாப்பிடும் உணவில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்தல் மிகவும் அவசியமாகும்.பெரும்பாலான கலோரிகள், கொட்டைகள், காய்கறிகள், பழங்கள், பால் போன்ற இயற்கை பொருட்களில் நமது உடலுக்கு கிடைக்க வேண்டும்.

    இந்தியாவில் அனைத்துவித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது. எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.




    மேலும், உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் கரோனரி இதய நோய் (CHD)மற்றும் உயர் இரத்த அழுத்தம் (HTN) ஆகியவற்றின் கணிசமான விகிதத்தைக் குறைப்பதுடன், டைப் 2 நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    • விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
    • 5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

    டெல்லியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறையில் வைத்து இன்று 3-வது நாளாக வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று வாக்குமூலம் வாங்கிய போது ஜாபர்சாதிக் தாக்கப்பட்டு மிரட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஜாபர்சாதிக் தரப்பில் அவரது வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அமலாக்கத்துறை விசாரணையின் போது ஜாபர் சாதிக் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அடித்து உள்ளனர்.

    5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறையினருக்கு பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
    • சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் புதிய குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது.

    ஊழல் வழக்கில் ஒரு விசாரணை அமைப்பு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில், ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றவாளியாக குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை முக்கிய சதிகாரர் என்று அமலாக்கத்துறை குறிப்பிடும் என்று கூறப்படுகிறது.

    கெஜ்ரிவாலுக்கு இடைக் கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    நாள் முழுவதும் விசாரணை நடந்தால் குற்றப் பத்திரிகை, நாளை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது.
    • அதேவேளையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்தியாவில் இந்து மக்கள் சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியதாவது:-

    இந்து மக்கள் தொகை குறைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரசின் திருப்திப்படுத்தும் அரசியலே காரணம். இந்தியாவில் 1950 முதல் 2015 காலகட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது.

    ஆனால் முஸ்லிம் மக்கள் தொகை 14.09 சதவீதம் அதிகரித்துள்ளது. 1950-ல் 9.84 சதவீதமாக இருந்தது. தற்போது 17.09 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இது அனைத்தும் காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதால் நடந்துள்ளது. காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்களின் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற விரும்புகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1950-ல் கிறிஸ்தவ மக்கள் தொகை 2.24 சதவீதமாக இருந்த நிலையில், 2015-ல் 2.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 5.38 சதவீதம் உயர்வாகும். ஜெயின் சமூகத்தினர் தொகை 1950-ல் 0.45 சதவீதமாக இருந்தது. 2015-ல் 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    சீக்கிய சமூகத்தினர் 1950-ல் 1.24 சதவீதம் இருந்தனர். 2015-ல் 1.85 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது 6.58 சதவீதம் உயர்வாகும். பார்சி சமூகத்தினர் 1950-ல் 0.03 சதவீதம் இருந்தனர். 2015-ல் 85 சதவீதம் குறைந்து 0.004 சதவீதமாக குறைந்துள்ளனர்.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஒருவரான ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் "ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    மோடியின் பொய் பிரச்சாரத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம். வேலையை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல. பதவி கைவிட்டுப் கோகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார்" இளைஞர்கள் உத்தரவாதம் குறித்து பேசியுள்ளார்.

    ×