என் மலர்
சமையல்
- தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
* வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.
* கடல் பாசி காய்ச்சும்போது இறுதியாக சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் கடல் பாசி கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.
* அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.
* ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.
* தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.
* பருப்புக் குழம்பில் இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.
* வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.
* சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
* மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
- உலக சுகாதர அமைப்பு (WHO) ஒரு வரையறையை வெளியிட்டுள்ளது.
- ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
முறையற்ற உணவுகள் ஆட்சி செலுத்தும் ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான ஒரு உணவு முறையோ எவ்வாறு இருக்க வேண்டும் என உலக சுகாதர அமைப்பு (WHO) ஒரு வரையறையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆரோக்கியமான உணவு முறையில் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் இருக்க வேண்டும்.
வயது வந்த நபர் ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து பகுதிகளாக பழங்கள் மற்றும் காய்கறிகளை (400 கிராம்) சாப்பிட வேண்டும்.
ஒரு நாளைக்கு சர்க்கரையை 50 கிராமுக்கும், கொழுப்புகளை 30%-க்கும் குறைவாகவும், அயோடின் கலந்த உப்பு தினமும் 5 கிராமுக்கு குறைவாகவும் உட்கொள்வதை உறுதி செய்தலே பல நன்மைகள் ஏற்படும். இந்த முறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றா நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
- சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய் சேர்க்கலாம்.
- அடைக்கு மாவு அரைக்கும்போது பரங்கிக்காய் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.
* பிரெட்டை முக்கோண வடிவில் டோஸ்ட் செய்து தாளித்த தயிரை அதன் மேல் ஊற்றினால் பிரெட் தயிர் வடை ரெடி.
* காலி பிளவர், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஏலக்காய், சோம்பு, கிராம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த கலவை உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இந்த காலிபிளவர் சட்னி, இட்லி, சப்பாத்திக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
* தோசை மாவு அரைக்கும்போது கொஞ்சம் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால், தோசை பளபளவென்று மெல்லியதாக வரும்.
* இட்லிக்கு சட்னி தயார் செய்யும்போது புளிக்கு பதில் தோல் சீவிய மாங்காய்த்துண்டை சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும்.
* ஒரு கரண்டி நெய்யை அடுப்பில் வைத்து காய்ச்சி அதை பஜ்ஜி மாவோடு கலந்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி வாசனையாக இருக்கும்.
* ஈரமான பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கினால் வெள்ளைக்கரு பாத்திரத்தில் ஒட்டி வீணாவதை தவிர்க்கலாம்.
* மீன்களை எண்ணெய்யில் பொரிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவும். இதை தவிர்க்க மீன்களைப் பொரிக்கும்போது அடுப்பின் அருகில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.
* மீன் பாத்திரத்தில் மீன் வாசம் இருந்தால் சீயக்காய்த்தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் மீன் வாசம் போய்விடும்.
* ரவா தோசை தயாரிக்கும்போது இரவே ரவையை தண்ணீரில் கரைத்து வைக்கவும். மறுநாள் காலை தோசை வார்ப்பதற்குமுன் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை சிவப்பாக மொறுமொறுவென இருக்கும்.
* பன்னீர் துண்டுகளை ஒரு டப்பாவில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து உடன் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி மூடி பிரிட்ஜில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
* வெள்ளை உளுந்தை வறுத்து விழுதாக அரைத்து தக்காளி சட்னியுடன் சேர்த்தால் சட்னி கம கம வாசனையாக இருக்கும்.
* முந்திரி, பாதாம், கசகசா போன்றவைகளை அரைப்பதற்கு முன்பு ஊற வைத்து பிரிட்ஜில் வைத்து அரைத்தால் விரைவில் அரைபடும்.
* அடைக்கு அரைக்கும்போது ஒரு கீற்று பரங்கிக்காயைச் சேர்த்து அரைத்தால் அடை பஞ்சு போல இருக்கும்.
* அரிசி கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவினால், உலை நீர் கொதித்து வெளியே வழியாது.
- உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
- வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகி விட்டால், அதனுடன் ஊற வைத்த ரவை சிறிது சேர்த்து விட்டால், இட்லி மிருதுவாகவும், ரவா இட்லி போலவும் இருக்கும்.
* சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
* கோதுமை அல்வா செய்யும் போது, வெந்நீர் தெளித்து, நெய் கலந்து கிளறினால், அல்வா சுவையும், மணமும் கூடும்.
* அதிரச மாவை கலந்த பின், வரும் கட்டியைத் தட்டை முறுக்கு, தேன்குழல் மாவில் கலந்தால் கர கர, மொறு மொறுவென்று இருக்கும்.
* பால் காய்ச்சும்போது சில ஏலக்காய்களைப் போட்டால், பால் நீண்ட நேரம் புளிக்காலும், மணமாகவும் இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
* உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களைக்கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
* வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயைக்காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
* வர மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கவும்.
- பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
- கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* முட்டையை வேக வைத்த பிறகு அதன் ஓடு லேசாக வெடிக்கும் வரை அடித்து சிறிது நேரம் குளிர்ந்த நீரில் மூழ்கடிக்க வேண்டும். அதன் பிறகு, முட்டையை எளிதில் உடைக்க இயலும். முட்டை கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் சேர்த்தால் ஓடு எளிதில் வெளியேற உதவும்.
* கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, சிறிது எண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். பின்னர், மாவில் மிளகாயை முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். இவ்வாறு செய்தால் பஜ்ஜி மொறுமொறுப்பாக இருக்கும்.
* வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின், தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும். பஜ்ஜி செய்யும் போது மாவுடன் மைதா சேர்த்தால் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
* பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
* மிளகாய்த்தூள் கெட்டுப்போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காய கட்டியை போட்டு வைத்தால் போதும். நீண்ட நாள் காரம் மணம் மாறாமல் இருக்கும்.
* வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க முறுமுறுப்பாக இருக்கும். எண்ணெய் தேவை குறைவாகும்.
* கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
* மீன் குழம்பு தயாரிக்கும் போது வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து குழம்பில் சிறிது போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
* உள்ளங்கையில் சமையல் எண்ணெய் சில சொட்டு ஊற்றி தேய்த்து மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் வாடை பிடிக்காது.
* மிளகு ரசத்திற்கு குழைய வைத்து வேக வைத்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
- ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
- நெய் மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.
* தேங்காய் மூடியை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
*கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
* பயிறு வகைகளை புழு, பூச்சி சேதப்படுத்தாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.
* எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.
* ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
* தோசை சுடும்போது வாசனையால் ஊரையே ஈர்க்க வேண்டுமா? தோசை வார்க்கும் முன் தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் தேய்க்கவும்.
* நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.
* முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.
* வாடிய கொத்தமல்லித் தழையை வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் புதிது போல் மாறிவிடும்.
* வாணலியை சூடாக்கி பின்பு அதில் சாம்பார் வெங்காயத்தை போட்டு சூடு வர புரட்டினால் அதன் தோலினை சுலபமாக உரிக்க இயலும்.
* தோசை தயாரிக்கும்போது உளுத்தம் பருப்புடன் ஒரு கப் ஜவ்வரிசியையும் கலந்து அரைத்தால் தோசை நன்கு வார்க்க வருவதுடன் மெல்லியதாகவும், ருசியாகவும் இருக்கும்.
* தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* குழம்புக்கோ, கூட்டிற்கோ துருவிய தேங்காயில் ஒரு ஸ்பூன் தேங்காய் பால் எடுத்து அடுப்பில் இருந்து இறக்கும்போது அதில் விடுங்கள். ருசியோ ருசி தான்.
* அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதை தயிரில் கலக்காமல் வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து பிறகு தயிர் சேர்க்க வேண்டும். இதனால் அவியல் நீர்த்துப் போவதை தவிர்க்கலாம்.
* தயிரில் தக்காளி துண்டுகள், சர்க்கரை ஏலத்தூள், சிறிது உப்பு சேர்த்து ஸ்வீட் பச்சடி செய்யலாம். விருப்பமானால் வாழைப்பழம், ஆப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்.
* மஞ்சள் பூசணி வாங்கினால் அதை சமைத்து விட்டு நடுவில் உள்ள குடல் போன்ற பாகத்தை வீணாக்காமல் அதை எண்ணெய் விட்டு வதக்கி அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையல் அரைத்து சாப்பிடலாம். மிகவும் ருசியாவும் மணமாகவும் இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் சரியாகப் பொரியாது, அவ்வாறு நமத்து விட்டால் பொரிப்பதற்கு முன் வாணலியை சூடாக்கி அதில் வடகத்தை போட்டு சற்று புரட்டி எடுத்துக் கொண்டு பிறகு எண்ணெய்யில் பொரித்தால் நன்கு பொரியும்.
* பச்சரிசி தோசை அரைக்கும் போது கூடவே நாலைந்து ஓம இலைகளையும் சேர்த்து அரைத்தால் தோசை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். ஓமம் குளிர் காலத்தில் நல்ல மருந்தும் கூட.
* தேங்காய் துவையலுக்கு தேவையான பொருட்களை தாளித்து எடுக்கும் போது சிறிது தனியாவையும் சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
* கடலைப்பருப்பை போளி பூரணம் செய்யும்போது அதற்கு தேவையான பூரணத்திற்கு வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால் போளி சுவையாக இருக்கும். போளி மெல்லியதாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.
* சாம்பார், மோர், குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் பொழுது ஒரு டீஸ்பூன் அரிசி மாவை உருண்டைக் கலவைடன் கலந்து உருட்டி செய்தால் அவை கரைந்து போகாமல் முழுசாக இருக்கும்.
- மீந்து போன சப்பாத்தியை மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள்.
- சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
பெரும்பாலானோர் வீட்டில் தினமும் சப்பாத்தி செய்து சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். அப்படி சப்பாத்தி செய்யும் போது பல நேரங்களில் சப்பாத்தி மீந்து போயிடும். அப்படி மீந்து போன சப்பாத்தியை நிறைய பேர் பாதுகாப்பாக எடுத்து வைத்து, மறுநாள் காலையில் மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட பலருக்கு பிடிக்காது. அப்படி போன சப்பாத்தியை வைத்து நூடுல்ஸ் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி
முட்டை-4
பெரிய வெங்காயம்-3
தக்காளி-3
இஞ்சி- சிறிது
பூண்டு- சிறிது
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை பொரித்து எடுத்துவைக்கவும். பிறகு சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
கடாயை சூடுசெய்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து குறைவான தணலில் மூடிவைக்கவும். பச்சை வாடை போனவுடன், வெட்டி வைத்த சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள், உப்பு இட்டு, கிளறி எடுத்து சுடச்சுட பரிமாறவும்.
- தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.
- புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும்.
வேர்க்கடலை வெண்ணெயில் வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை காலை உணவு முறையில் சேர்ப்பதால், வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். இதனால், தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.
வேர்க்கடலை வெண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளது. அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திட உதவக்கூடும். இதில் நார்ச்சத்து உள்ளடக்கம் அதிகமாகவே உள்ளது. அவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமின்றி குடல் இயக்கத்தையும் மேம்படுத்தக்கூடும். இதனால், மலச்சிக்கல் அபாயம் முற்றிலும் குறையக்கூடும். புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும். இதனால், பிற பணிகளில் எவ்வித சோர்வும் இன்றி கவனத்தை செலுத்த முடியும்
இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய பீனட் பட்டரை (வேர்க்கடலை வெண்ணெய்) 2 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம். வாங்க பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை- 1 கப்
சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு
2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை (உங்கள் சுவை விருப்பத்திற்கு ஏற்ப)
முதலில் மிக்சியில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். மென்மையான, கிரீமி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும். கட்டியாக இருந்தால் எண்ணெயை சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் அரைத்தால் பீனட் பட்டர் ரெடி. இதனை ஒரு ஜாரில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.
- உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
- பன்னீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும் கலப்படம் செய்யப்பட்ட மளிகைப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுவது பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். பருப்பு வகைகள் முதல் மசாலாப் பொருட்கள் வரை எதுவும் பாதுகாப்பானது அல்ல, அவற்றை வாங்குவதற்கு முன் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அதேபோல தான் பனீர். இந்திய உணவு வகைகளில் பிரதானமான பனீர் அதன் மென்மையான மற்றும் கிரீமி சுவைக்காக விரும்பப்படுகிறது. இருப்பினும், உணவு கலப்படத்தின் ஆபத்து அதிகரித்து வருவதால், நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
நீங்கள் அடிக்கடி பேக் செய்யப்பட்ட அல்லது கடையில் விற்கப்படும் பனீர் வாங்குபவராக இருந்தால், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க சில எளிய டிபஸ் இதோ...

1. பாலை திரைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை பன்னீர் உறுதியான அமைப்பையும், பால் வாசனையையும் கொண்டிருக்கும். ஒரு பனீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
2. பேக் செய்யப்பட்ட பனீர்களுக்கு, லேபிள் அதன் நம்பகத்தன்மைக்கு ஒரு பெரிய அடையாளமாக இருக்கலாம். FSSAI குறி போன்ற தரச் சான்றிதழ்களை எப்போதும் சரிபார்க்கவும். தயாரிப்பு தூய பாலில் இருந்து தயாரிக்கப்படவில்லை என்றால் உற்பத்தியாளர்கள் காட்ட வேண்டிய "சாயல்" (imitation) அல்லது "அனலாக்" (analogue) போன்ற குறிப்பிட்ட சொற்களை இருக்கிறதா என்பதை பாருங்கள்.
3. ஒரு சிறிய துண்டு பனீர் உலர்ந்த பாத்திரத்தில் சூடாக்கவும். உண்மையான பனீர் சிறிது பழுப்பு நிறமாகி, பாத்திரத்தில் நொறுங்கலாம், அதே நேரத்தில் போலி பனீர் சீரற்ற முறையில் உருகலாம், அதிகப்படியான தண்ணீரை வெளியிடலாம் அல்லது எண்ணெயாகவும் தோன்றலாம். இந்த எளிய சோதனை பனீரின் தரத்தை உறுதிப்படுத்த உதவும்.

4. பனீரின் நம்பகத்தன்மையை சோதிக்க மற்றொரு வழி, அதில் ஸ்டார்ச் உள்ளதா இல்லையா என்பதை அறிய அயோடின் சோதனையைச் செய்வதாகும். ஒரு துண்டு பனீரை வேகவைத்து, அதை ஆறவிடுங்கள், பின்னர் தண்ணீரில் சில துளிகள் அயோடின் டிஞ்சரைச் சேர்க்கவும். கரைசல் நீல நிறமாக மாறுவதை நீங்கள் கண்டால், அது உங்கள் கடையில் வாங்கிய பனீரில் ஸ்டார்ச் இருப்பதைக் காட்டுகிறது.
5. இந்த சோதனைக்கு, பனீரை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்வித்து, பின்னர் சிறிது துவரம் பருப்பு பொடியை பனீரின் மீது தெளிக்க வேண்டும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பனீரின் நிறம் வெளிர் சிவப்பாக மாறினால், அது பெரும்பாலும் சோப்பு அல்லது யூரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.
- எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
- கீரை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.
* தினமும் குடிக்கும் டீயில் இஞ்சி, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்தால் ருசியாக இருக்கும். உடலுக்கும் நன்மை பயக்கும்.
* ஆம்லெட் செய்யும் போது கொஞ்சம் வெங்காயத்துடன் தக்காளி சேர்த்தால் முட்டை வாசனை வராது. ருசியும் கூடும்.
* புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. நன்கு கழுவி மின் விசிறியில் காயவைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் போதும். ஒரு வாரம் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
* பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசிறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.
* கூட்டு, பொரியலுக்கு தேங்காய் துருவலுக்கு மாற்றாக புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால் போதும். தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.
* கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கெட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.
* எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
* ரவா தோசை செய்யும் போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
* கீரை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.
* பருப்பு வேகவைக்கும் போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.
* வீட்டில் எறும்பு நடமாட்டம் இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.
* சாதம் வடிக்கும்போது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் அதிகம் குழையாமல் இருக்கும்.
* கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
- 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..
- தண்ணீர் சேர்க்காமல் செய்வதால் இது விரைவில் கெட்டுப்போகாது.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பலரால் அதிகம் தேடியது 'கேரளா சம்மந்தி'. 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -6
இஞ்சி - 1 துண்டு
தேங்காய் - 1
சின்ன வெங்காயம் - 10
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அம்மி அல்லது மிக்சி ஜாரில், காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும். அடுத்து இதை நன்கு கலந்து உருட்டி வைத்தால் ருசியான கேரளா சம்மந்தி தயார்.
இதை சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு சுவைக்கலாம். தண்ணீர் சேர்க்காமல் செய்வதால் இது விரைவில் கெட்டுப்போகாது.
- தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
- கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
சமையல் பணியை விரைவாகவும், ருசியாகவும் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி அதையே வாடிக்கையாக பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
அவை சமைக்கும் நேரத்தையும், சமைக்கும் பொருட்களையும் விரயமாக்கும் என்பதை அறியாமல் அந்த கட்டுக்கதைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படிப்பட்ட கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

கட்டுக்கதை:
மைக்ரோ ஓவனில் சமைப்பது உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள் இழப்புக்கு வழிவகுக்கும்.
உண்மை:
சமைக்கும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகளை மைக்ரோ ஓவன் அழித்துவிடும் என்பது பொதுவான கட்டுக்கதையாகும். உண்மையில் மைக்ரோ ஓவன் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான சி, ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை அதன் தன்மை மாறாமல் தக்கவைத்துக்கொள்ள உதவும். அத்துடன் விரைவாக சமைப்பதற்கு உதவிடும். ஊட்டச்சத்துகள் இழப்பையும் குறைக்கும்.

கட்டுக்கதை:
சமைக்கும்போது எப்போது வேண்டுமானாலும் மசாலாப்பொருட்களை சேர்க்கலாம்.
உண்மை:
இந்த கட்டுக்கதையும் ஏற்புடையதல்ல. அதற்கு மாறாக சமைக்கத் தொடங்கும்போதே மசாலா பொருட்களை சேர்ப்பது சுவையை கூட்டி, சிறந்த பலனை தரும் என்பது சமையல் நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
அதாவது உப்பு, மஞ்சள், சமையல் பொடி வகைகள் உள்ளிட்ட மசாலா பொருட்களை ஆரம்பத்திலேயே சேர்க்கும்போது அவை சமைக்கும் பொருட்களில் ஆழமாக ஊடுருவும். அதனால் சுவையும், ருசியும் அதிகரிக்கும்.

கட்டுக்கதை:
கியாஸ் அடுப்பில் நெருப்பின் அளவை அதிகரிப்பது வேகமாக சமைத்து முடிப்பதற்கு உதவும்.
உண்மை:
அடுப்பில் இருந்து நெருப்பு அதிகம் வெளிப்படுவது சீரற்ற சமையலுக்குத்தான் வித்திடும். சமைக்கும் பொருள் தீயில் கருகக்கூடும். பாத்திரமும் கடினமாக மாறக்கூடும்.
மிதமான தீயில் சமைப்பது உணவுப்பொருட்களை சமமாக வேகவைக்க உதவும். அவை மென்மையாகவும் இருக்கும். பாத்திரங்களில் ஒட்டுவதும் தவிர்க்கப்படும்.

கட்டுக்கதை:
வேக வைக்கும் பொருட்களை ஒருமுறை புரட்டிப்போட்டாலே போதுமானது.
உண்மை:
இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அடிக்கடி திருப்பி போடுவது இருபுறமும் சமமாக வேகுவதற்கு உதவும். அவை ஒரே பக்கத்தில் வெந்து கொண்டிருந்தால் அந்த பகுதி கருகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.
அடிக்கடி திருப்பி போடுவதுதான் சரியானது. குறிப்பாக ஒவ்வொரு 30 விநாடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் திருப்பி போடுவது இறைச்சி மென்மையான பதத்தில் வேகுவதற்கும், சுவையாக இருப்பதற்கும் உதவிடும்.

கட்டுக்கதை:
தண்ணீரில் உப்பு சேர்ப்பது வேகமாக நீர் கொதிப்பதற்கு உதவிடும்.
உண்மை:
சமைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்துவதற்கு முன்பு உப்பு சேர்ப்பது விரைவாக நீர் கொதிப்பதற்கு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் ஒரு கட்டுக்கதைதான்.
உண்மையில் நீர் கொதிக்கும்போது உப்பு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். உண்மையில் உப்பு நீரின் கொதிநிலை நன்னீரை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் சமையல் விஷயத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் இருக்காது. அதனால் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.