என் மலர்
கார்
- யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
யூலர் (EULER) மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனையில் கால் பதிக்கவுள்ளது.
இதற்காக யூலர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.525 கோடி முதலீடு செய்துள்ளது.
இதன்மூலம் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது 32.5 சதவீத உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் 3 சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை மொத்த வாகன விற்பனையில் 35 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரம் குறைந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலில் AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரமும் AX7 L வேரியண்ட் கார்களின் விலை ரூ.75 ஆயிரமும் குறைந்துள்ளது.
ரூ.21.64 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.21.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ரூ.21.44 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.20.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ரூ.24.14 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.39 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ரூ.23.94 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
- மாருதி சுசுகி 4 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
- தற்போது டாடா மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு.
இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் மாருதி சுசுகி சில தினங்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வாகனங்கள் விலைகளை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது. மாடல்களுக்கு ஏற்ப அதை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவித்திருந்து. உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவினம் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வாகனங்கள் விலையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் 3 சதவீதம் வரை கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் மேலும் கணிசமாக உயர்த்த உள்ளது. 2 சதவீதம் விலை விலை உயர்வு இருக்கும். இது பயணிகள் முதல் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
- கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் பல்வேறு மாடல்களுக்கு 32500 ரூபாய் வலை உயர்த்தப்படும் எனத் தெரிவிந்தது.
- இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்ளில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் பல்வேறு நோக்கத்திற்காக வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.
தற்போது உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான 4 சதவீதம் வரை வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.
கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாடல்களுக்கு 32,500 ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் ஒரு பங்கு 11578.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று பங்கின் விலை 0.61 சதவீதம் உயர்ந்தது.
- கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன.
- மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஃபடா' (FADA) தெலுங்கானா தவிர்த்து நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 13 லட்சத்து 53 ஆயிரத்து 280 இருசக்கர வாகனங்கள், 94 ஆயிரத்து 181 ஆட்டோ, 3 லட்சத்து 3 ஆயிரத்து 398 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 65 ஆயிரத்து 574 டிராக்டர்கள், 82 ஆயிரத்து 763 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் என மொத்தம் 18 லட்சத்து 99 ஆயிரத்து 196 வாகனங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 22 லட்சத்து 91 ஆயிரத்து 621 வாகனங்கள் பதிவாகி இருந்தன. ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 17.12 சதவீதம் வாகனங்கள் குறைவாக பதிவாகி உள்ளன. இதேபோல கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதத்தில் 20 லட்சத்து 46 ஆயிரத்து 328 வாகனங்கள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 7.19 சதவீதம் சரிந்திருக்கிறது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நாடு முழுவதும் பதிவான வாகனங்களின் விவரத்தை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேசமயத்தில் மாநிலங்கள் வாரியாக பதிவான வாகனங்களின் விவரத்தை வெளியிடவில்லை.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரான சி.எஸ்.விக்னேஷ்வர் கூறுகையில், ''நாங்கள் நடத்திய முந்தைய ஆய்வின்படி பிப்ரவரி மாதம் வாகனங்களின் பதிவு குறைவாக இருக்கும் என்று கணித்திருந்தோம். அதன்படியே அனைத்து பிரிவுகளிலும் வாகனங்களின் பதிவு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தற்போதைய தேவையை சிறப்பாக சீரமைத்து, இலக்கை அடையும் வகையில் மார்ச் மாதத்தில் வாகனங்களின் பதிவு மேம்படும் என்று கருதுகிறோம்'' என்றார்.
- பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
- கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது.
சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. மேலும் குறைந்த பட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இந்தியாவில் முதலீடு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் மின்சார வாகன நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்திருந்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சாதிக்க முடியாது என்று ஜிண்டல் குழும நிர்வாக இயக்குநர் சாஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய சாஜ்ஜன் ஜிண்டால், "எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தால் இந்தியாவில் சாதிக்க முடியாது. ஏனெனில் இந்தியர்களான நாங்கள் இருக்கிறோம். இங்கு டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. அவைகளை பின்னுக்குத் தள்ளி டெஸ்லாவால் ஒருபோதும் சாதிக்க முடியாது.
எலான் மஸ்க் ஸ்மார்ட்டான நபராக இருக்கலாம். அவர் பல பிரமிக்கத்தக்கச் செயல்களைச் செய்யலாம். ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ராக்கெட் கூட செலுத்தலாம். ஆனால், இங்கு அவரால் சாதிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
- 2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.
- புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்களுக்கு பிரபலமானது வோல்வோ நிறுவனம். இந்நிறுவனம் ஃபிளாக்ஷிப் XC90 SUVயின் தற்போதைய மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் என (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2025 வால்வோ XC90 அதன் தோற்றத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதன் முன்புற கிரில் மற்றும் இருபுறமும் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்களுக்குள், ரீ-வொர்க் செய்யப்பட்ட T-வடிவ DRLகளுடன் முன்புக்கம் அதிகளவு புதுப்பிக்கப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. புதிய ஏர் டேம் அமைப்புடன் வரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் தற்போது 20-இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உள்புறத்தில் 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 11.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டம் மற்றும் மசாஜ் வசதிகளுடன் கூடிய பவர்-அட்ஜஸ்டபிள் இருக்கைகள், வண்ண ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், நான்கு-மண்டல காலநிலை கட்டுப்பாடு, போவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்கள், 360-டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பார்க்கிங் அசிஸ்டண்ட் மற்றும் கூடுதலா பாதுகாப்பு வசதிகளை விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்குகிறது.
2025 வோல்வோ XC90 48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. மைல்ட்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் 250 hp மற்றும் 360 Nm டார்க்கை உருவாக்குகிறது, மேலும் AWD அமைப்புடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
- ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
- வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அதன் தயாரிப்பில் வெளிவந்துள்ள பல மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது i20 N லைன் இணைந்துள்ளது. ஹூண்டாய் பிராண்டின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் குறிப்பிட்ட மாடல்கள் விலை முன்பை விட அதிகரித்துள்ளது.
i20 N லைன் காரின் விலை குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ. 4,000 அதிகரித்துள்ளது. என்ட்ரி லெவல் N6 MT மற்றும் N6 MT டூயல்-டோன் வேரியண்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ.4,000 அதிகரித்துள்ளது.

ஹூண்டாய் i20 N லைனின் விலை இப்போது ரூ. 9.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.56 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் கொண்ட 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஏழு வண்ணங்கள் மற்றும் இரண்டு வேரியண்ட்களில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.
- XEV9e மற்றும் BE6 மின்சார கார்கள் 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன.
- மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.
மஹிந்திராவின் புதிய EV மாடல்களான XEV9e மற்றும் BE6, விற்பனைக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் நாளே 30,179 புக்கிங்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளன. இதன் முன்பதிவு மதிப்பு மட்டும் ரூ.8,472 கோடி (Ex-Showroom) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார கார்கள் விற்பனையில் இது ஒரு மைல்கல் என மஹிந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e மின்சார கார்கள் 170kW மோட்டார் 59kWh பேட்டரி மற்றும் 210kW மோட்டார் 79kWh பேட்டரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொட்டரின் டார்க்விசை 380Nm ஆகும்.
மஹிந்திரா BE 6 காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):
பேக் ஒன்று 59kWh - ரூ. 18.90 லட்சம்
பேக் ஒன்றுக்கு மேல் 59kWh - ரூ. 20.50 லட்சம்
பேக் 2 59kWh - ரூ. 21.90 லட்சம்
பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 24.50 லட்சம்
பேக் 3 79kWh - ரூ. 26.90 லட்சம்
மஹிந்திரா XEV 9e காரின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்):
பேக் 1 59kWh - ரூ. 21.90 லட்சம்
பேக் 2 59kWh - ரூ. 24.90 லட்சம்
பேக் 3 செலக்ட் 59kWh - ரூ. 27.90 லட்சம்
பேக் 3 79kWh - ரூ. 30.50 லட்சம்
மஹிந்திரா BE 6 மற்றும் மஹிந்திரா XEV 9e மின்சார கார்களின் பேக் 3 மாடல் இந்தாண்டு மார்ச் மாதத்திலும் பேக் 3 செலக்ட் மாடல் ஜூன் மாதத்திலும் பேக் 2 மாடல் ஜூலையிலும் பேக் 1 மற்றும் பேக் ஒன்றுக்கு மேல் மாடல் ஆகஸ்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகியுடன் கியா மோட்டார்ஸ் போட்டியிட்டு வருகிறது.
- கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் 155 மில்லியன் டாலர் (ரூ.1,354 கோடி) அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா சொகுசு கார்னிவல் மினிவேனின் அசெம்பிளிக்கான உதிரிப்பாகங்களின் இறக்குமதியில் தவறான தகவல்களை தெரிவித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது .
கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அதிகமான இறக்குமதி வரி விதிப்பதாக டெஸ்லா நிறுவனம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்தியாவின் வாகன சந்தையில் ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகியுடன் கியா மோட்டார்ஸ் போட்டியிட்டு வருகிறது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- நிசான், ஹோண்டா ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
- நிசானின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விரைவில் கூடி பேசவுள்ளனர்.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது .
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஹோண்டா உடனான இணைப்பு பேச்சுவார்த்தையை கைவிட நிசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நிசானின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விரைவில் கூடி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியில் பரவியவுடன் ஹோண்டா மற்றும் நிஸானின் பங்குகள் கணிசமான உயர்வை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை கடந்த மாதம் வெளியிட்டது.
- மின்சார எஸ்யூவியின் உற்பத்தி அடுத்த மாதம் முதல் Suzuki Motor Gujarat Private Limited ஆலையில் தொடங்கும்.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை கடந்த மாதம் வெளியிட்டது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாருதி சுசுதி நிறுவனம் தனது முதல் மின்சார காரன இ-விட்டாராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ.17 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களுக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் HEARTECT e-platform என்ற பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார எஸ்யூவியின் உற்பத்தி அடுத்த மாதம் முதல் Suzuki Motor Gujarat Private Limited ஆலையில் தொடங்கும். இது ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.