என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது.

    இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.

    வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

    அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸில் பாடல்களை வைக்கும் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

    • டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று எலான் மஸ்க் மாற்றினார்.
    • X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.

    உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.

    டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

    இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

    அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.

    முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்கும்.
    • மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.

    எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிக்கை மூலம் அறிவித்தது.

    "இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது. ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்வோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஏர்டெல்லை தொடர்ந்து அதன் போட்டியாளரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஷடார்லிங்க் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களை ஸ்பேஸ்எக்ஸ் பெறுவதற்கு உட்பட்டது இந்த ஒப்பந்தம்.

    ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், ஜியோவின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங்க் எவ்வாறு உதவ முடியும் என்பதையும், ஸ்டார்லிங்க் சேவைகளை நேரடியாக நுகர்வோர் மற்றும் வணிகங்களின் பயன்பாட்டுக்கு கொண்டுசேர்க்க முடியும் என்பதையும் ஆராய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

    ஜியோ தனது சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு சேவையை நிறுவித் தந்து அதனை செயல்படுத்துவதை உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு நிறுவப்படும்.

    இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு நம்பகமான இணையம் முழுமையாக அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஜியோவின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் உடனான ஒப்பந்தம் உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.

    இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல், ஜியோ உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  

    • ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.

    எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் இன்று (செய்வ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் ஏர்டெல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

    முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.

    இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 

    • X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் பலர் புகாரளித்தனர்.
    • சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளம் Downdetector

    முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் X தளம் உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10) திங்கட்கிழமை, பிற்பகல் 3:15 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.

    X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector இன் கூற்றுப்படி, பிற்பகல் 3:30 மணியளவில் சுமார் 2,500 பயனர்கள் X இல் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

    இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பின்னர் பிற்பகல் 3:45 மணியளவில் எக்ஸ் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

    அதன்பின் செயலி மற்றும் வலைத்தளத்தில் மீண்டும் உள்நுழைய முடிந்தது. X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.  

    • ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை புடைத்திருந்தது.
    • ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் வீடியோ, ஆடியோ அழைப்புகள் மேற்கொள்வதற்காக 2003-ம் ஆண்டு ஸ்கைப் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை படைத்திருந்தது.

    இந்நிலையில், ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஸ்கைப் செயலுக்கு பதிலாக மைக்ரோசாப்ட் டீம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஸ்கைப் பயனாளர்கள் தங்கள் விவரங்களை Microsoft Teams-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
    • "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்"

    உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு இந்தியா முக்கியமான சந்தையாக உள்ளது. அந்த வகையில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் கூகிள் நிறுவனம் இந்தியாவில் பெரும் தொகையை முதலீடு செய்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 19 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய இந்திய அலுவலகத்தை கூகிள் நிறுவனம் திறந்து வைத்தது.

    பெங்களூரின் மகாதேவபுரா பகுதியில் அனந்தா என்ற பெயரில் இந்த புதிய கூகுள் அலுவலகம் அமைத்துள்ளது. 10 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த அலுவலகம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

    கூகிளின் ஆண்ட்ராய்டு, தேடல், பணம் செலுத்துதல், கிளவுட், மேப்ஸ், ப்ளே மற்றும் டீப் மைண்ட் உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக பணி புரியும் ஊழியர்களுக்காக தனித்தனி பிரிவுகள் இந்த புதிய அலுவலகத்திலிருந்து வேலை செய்ய உள்ளது.

    இந்த அலுவலகத்தில் 'சபா' என்று அழைக்கப்படும் மைய இடம் உள்ளது. இது கூட்டங்கள் மற்றும் பட்டறைகளுக்குப் பயன்படுத்தப்படும். பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக நடக்க சிறப்பு தொட்டுணரக்கூடிய தரை அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவும் வகையில் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த அலுவலகம் குறித்து பேசியுள்ள கூகிள் இந்தியாவின் துணைத் தலைவரும் நாட்டு மேலாளருமான பிரீத்தி லோபனா, "பெங்களூரில் உள்ள புதிய அனந்தா வளாகம் எங்கள் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்" என்று தெரிவித்துள்ளார்.

    கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது ஸ்மார்ட் போன்களின் உற்பத்தியைத் தொடங்கியது. மும்பை, ஐதராபாத், புனே, குர்கான் ஆகிய நகரங்களிலும் கூகுள் அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • டவுன்லோட் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

    சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

    எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

    டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

    தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், "உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது," என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது "தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்" என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.

    டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

    • ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
    • ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது. சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

    இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்தது.

    இந்நிலையில், எலான் மஸ்க்கின் ப்ரொபசலை ஓபன்ஏஐ நிறுவனம் நிராகரித்துள்ளது. OpenAI விற்பனைக்கு இல்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார். 

    இதனிடையே எலான் மஸ்க்கின் கோரிக்கை தொடர்பாக ஓபன்ஏஐ சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று கிண்டலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும்
    • ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம்

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் SE 4 சீரிஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் "குடும்பத்தின் புதிய உறுப்பினரைச் சந்திக்கத் தயாராகுங்கள். புதன்கிழமை, பிப்ரவரி 19. #AppleLaunch" என்று பதிவிட்டுள்ளார்.

    ஐபோன் SE 4 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் போன்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அதன் அம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதுதொடர்பாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

    சிப்செட்:

     ஐபோன் SE 4 , ஐபோன் 16 இல் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த 3nm ப்ராசசர் A18 சிப்செட்டைக் கொண்டிருக்கும். இதன்மூலம், தேவைப்படும் பயன்பாடுகள் மற்றும் கேம்களை எளிதாகக் கையாள முடியும். கூடுதலாக, SE சீரிஸில் முதல் முறையாக மேம்பட்ட AI அம்சங்களுடன் ஆப்பிள் நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    டிஸ்ப்ளே

    ஐபோன் SE 4, ஐபோன் 14 போன்ற முந்தைய மாடல்களைப் போலவே, 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம்.

    டைனமிக் ஐலேண்ட் க்கு பதிலாக நாட்ச் - முறை இதில் இருக்கலாம். மேம்பட்ட பாதுகாப்பிற்காக முந்தைய டச் ஐடி மாற்றியமைக்கப்பட்டு, இதில் ஃபேஸ் ஐடி முறை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    பில்ட் டிசைன்:

    ஐபோன் SE 4, ஐபோன் 14 ஐப் போலவே தட்டையான பக்கவாட்டு அலுமினியம் மற்றும் கண்ணாடி கட்டுமானத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    கேமரா:

    ஐபோன் SE 4, ஃபியூஷன் கேமரா தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கலாம். இதில் அல்ட்ரா வைடு லென்ஸ் இல்லாவிட்டாலும், மேம்பட்ட புகைப்படம் எடுப்பதற்கு 2x ஆப்டிகல் ஜூம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பேட்டரி:

    A18 சிப்செட் மூலம், ஐபோன் SE 4 இல் சிறந்த பேட்டரி ஆயுளை எதிர்பார்க்கலாம்.   

    • இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
    • 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.

    அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.

    பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.

    இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

    • சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
    • ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.

    அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. பிந்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் யுஸ் - எய்ட் அமைப்பின் நிதியை DODGE ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.

    இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது.  சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

    இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     

    ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்று அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.

    ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். 

     

    ×