என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
- கலோரிகள் தான் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.
- மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது.
கலோரி... கலோரி... என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது.
வயது, பாலினம், எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் கலோரி அளவு மாறுபடும். ஒவ்வொரு உணவு வகைக்கும் கலோரி அளவு உண்டு. உதாரணத்துக்கு 100 கிராம் எடைகொண்ட ஆப்பிளில் 59 கலோரி இருக்கும். வாழைப்பழத்தில் 116 கலோரி, 300 கிராம் சாதத்தில் 346 கலோரிகள் கிடைக்கின்றன.
மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு குடும்பப் பெண் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என ஒரு மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்தால், 120 கலோரி செலவாகும். ஆனால், ஒரு ஆண் ஒரு மணி நேரம் ரன்னிங் செல்லும்போது, 470 கலோரிகள் செலவாகும். இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் கலோரிகளின் அளவு வித்தியாசப்படும்.
ஆண்களுக்கு
26-45 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 2,600 கலோரிகள் தேவைப்படுகிறது. சுறுசுறுப்பான ஆண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,800 முதல் 3,000 கலோரிகள் தேவை.
பெண்களுக்கு
26-50 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கலோரிகள் தேவைப்படுகின்றன.
சுறுசுறுப்பான பெண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் தேவைப்படும்.
20 வயதின் முற்பகுதியில் உள்ள பெண்களுக்கு தங்கள் எடையைக் கட்டுப்படுத்த அதிக கலோரிகள் தேவை, ஒரு நாளைக்கு சுமார் 2,200 கலோரிகள் அல்லது அதற்கும் அதிகமாக தேவைப்படலாம்.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,800 கலோரிகளுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது.
அதிக உடலுழைப்பைச் செலுத்தும், 55 கிலோ எடை கொண்ட ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2,210 கலோரிகள் தேவைப்படும் அதேநேரம் மிதமான உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களுக்கு 2,130 கலோரிகள் தேவைப்படும்.
உடல் உழைப்பு குறைவாக இருக்கும் பெண்களுக்கு 1,660 கலோரிகள் தேவைப்படும். இதுவே அந்த பெண் கருத்தரித்தால் 300-500 கலோரிகள் கூடுதலாகத் தேவைப்படும். பாலுாட்டும் பெண் என்றால் கூடுதலாக 500 - 600 கலோரிகள் தேவைப்படும்.
- ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.
- பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விடுவதால் மே மாதம் 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி உடலை துர்நாற்றம் வீச செய்கிறது.
வெயிலின் தாக்கத்தினால் வியர்வை வெளியேறுவது, நீர் இழப்பு, உடல் துர்நாற்றம், அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்சனை, சிறுநீரகத்தில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
குறிப்பாக கோடை காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வரை அதிகமாக வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதில் குறிப்பாக பலருக்கும் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து நம் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்
1. கோடை காலத்தில் எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் பலகாரங்கள், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
2. நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
3. உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் அதிகாலையில் அல்லது வெயில் அதிகமாகுவதற்கு முன்பாகவே செய்து முடித்து விட வேண்டும்.
4. அதிக வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.
5. காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.
6. அக்குள் மற்றும் தொடை இடுக்கு பகுதிகளில் டியோ ட்ரெண்ட், கிரீம்கள், லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். இது போன்ற ஒரு சில செயல்முறைகளின் மூலம் உடலில் அதிகப்படியான வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.
- ஆரோக்கியமான கொழுப்புகள் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
தொப்பை கொழுப்பைக் குறைப்பது ஒரு முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியது, இதில் சீரான உணவுப்பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை அடங்கும்.
நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அதிகப்படியான வயிற்று கொழுப்பைக் குறைக்க உதவும்.
கீரை மற்றும் காலே போன்ற இலை கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்சல்ஸ் முளைகள் போன்ற க்ரூசிஃபெரஸ் காய்கறிகளுடன் சேர்த்து உண்பது, மனநிறைவை மேம்படுத்தவும், எடை இழப்புக்கும் உதவும்.
கூடுதலாக, கோழியின் மார்பக இறைச்சி, மீன் மற்றும் டோஃபு போன்ற புரதத்தில் குறைவானகலோரிகள் உள்ளதால் இது தசை வளர்ச்சியை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும். வெண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகளில் காணப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு வகைகளை கொடுக்கின்றன.
மேலும், குயினோவா, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை உட்கொள்வது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுப்பத்தினால் ஒல்லியான இடுப்பை அடைவதற்கும், அவற்றை பராமரிப்பதற்கும் உதவும்.
வழக்கமான உடல் செயல்பாடு, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான உணவு ஆகியவை எடை மேலாண்மையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கின்றன.
- கர்ப்பிணிகள் சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் கற்றுக் கொள்ளும் முதல் விஷயங்களில் ஒன்று என்ன சாப்பிடக்கூடாது என்பதுதான். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
காபி
மருத்துவர்களின் அறிவுரைப் படி, கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 200 மில்லிகிராம் (மி.கி.) குறைவான காஃபின் மட்டும் எடுத்துகொள்ளுமாறு கூறுகின்றனர். அதற்கு மேல் எடுப்பதை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். காஃபின் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு நஞ்சுக்கொடியை எளிதில் கடக்கிறது. குழந்தைகள் மற்றும் அவர்களின் நஞ்சுக்கொடிகளில் காஃபின் வளர்சிதை ஏற்படுத்தும் என்பதால் இது அதிக அளவு ஆபத்திற்கு வழிவகுக்கும். பிரசவத்தின்போது குறைந்த எடையுடன் பிறக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெர்குரி மீன்
பெரிய கடல் மீன்கள் அதிக அளவு பாதரசத்தை கொண்டது. அதனால் வாரத்திற்கு 180 கிராமிற்கு குறைவாக எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால் தவிர்த்துவிடலாம். சூரை மீன், சுறா மீன், புள்ளி களவா மீன், சங்கரா மீன்கர்ப்பம் போன்ற மீன்களை பாலூட்டும் போது இதுபோன்ற பாதரசம் நிறைந்த மீன்களைத் தவிர்ப்பது நல்லது.
நன்கு சமைக்காத இறைச்சி
பச்சை மீன், குறிப்பாக மட்டி, பல்வேறு நோய்த்தொற்றுகளை சுமந்து செல்லும். இதில் நோரோவைரஸ், விப்ரியோ, சால்மோனெல்லா மற்றும் லிஸ்டீரியா போன்ற வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி போன்ற நோய்த்தொற்றுகளை வர வைக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக பட்டியலிடப்பட்ட நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, பொது மக்களை விட கர்ப்பிணி பெண்கள் லிஸ்டீரியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம்.
அதிக கொழுப்பு உணவுகள்
பன்றிக்கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுப்பு, கோழி கொழுப்பு, வெண்ணெய், கிரீம், சீஸ் இந்த கெட்ட கொழுப்புகள் சில பல இனிப்புகள் மற்றும் பிற பால் பொருட்களிலும் மறைந்துள்ளன. அதாவது பொரித்த கோழி, ஐஸ்கிரீம், பீட்ஸா, குக்கீகள், டோனட்ஸ், பேஸ்ட்ரிகள் ஆகியவை கர்ப்பம் தரிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகும்.
பதப்படுத்தப்படாத பால்
கொழுப்பு நீக்கப்பட்ட பால், மொஸரெல்லா மற்றும் பாலாடைக்கட்டி போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம். இருப்பினும், பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் பொருட்களின் உணவு விஷத்தை ஏற்படுத்தும்.
மது
கர்ப்ப காலத்தில் மது அருந்துவதது கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் மது அருந்த கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சிறிய அளவு கூட குழந்தையின் மூளை வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.
கர்ப்ப காலத்தில் மது அருந்துவது, முக குறைபாடுகள், இதய குறைபாடுகள் மற்றும் மனநல குறைபாடு உள்ளிட்ட கருவின் ஆல்கஹால் நோய்க்குறியையும் ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் மதுவை முற்றிலும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
சோடா போன்ற குளிர் பானங்கள்
சோடா போன்ற குளிர் பானங்களில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பல காஃபின் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. கர்ப்ப காலத்தில் இது அருந்த பரிந்துரைக்கப்படுவதில்லை.
முட்டை
பச்சை முட்டைகள் சால்மோனெல்லாவால் மாசுபட்டிருக்கலாம். சால்மோனெல்லா நோய்த்தொற்றின் அறிகுறிகளில் காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.
முளைகட்டிய பயிர்கள்
முளை கட்டிய பயிரில் சால்மோனெல்லா என்ற நோய்கிருமி இருக்கும். விதை முளைப்பதற்குத் தேவையான ஈரப்பதமான சூழல் இந்த வகை பாக்டீரியாக்களுக்கு ஏற்றது மற்றும் முளை கட்டிய பயிரினை கழுவுவது கடினம். இந்த காரணத்திற்காக, முளை கட்டிய பயிர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
துரித உணவுகள்
கர்ப்ப காலத்தில் ஹோட்டல்களில் விற்கப்படும் துரித உணவுகளை தவிர்த்து புரதம், காய்கறிகள் மற்றும் பழங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளை மையமாகக் கொண்ட உணவு மற்றும் சிற்றுண்டிகளை எடுத்துகொள்ளுங்கள். சுவையை இழக்காமல் உங்கள் உணவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்து உணவுகள்.
- ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு உடலுக்கு சமநிலையை வழங்குகிறது. இது கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தாதுக்கள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மிகவும் பரிந்துரைக்கப்பட்ட உணவுகளாக உள்ளன.
கர்ப்ப காலத்தில் குறிப்பாக பரிந்துரைக்கப்படும் சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் ஒமேகா-3 கொண்ட உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த முடியும். இது கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துவற்கு உதவும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவற்கும் உதவுகிறது.
பேரீச்சை
பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி மற்றும் கே, இரும்புச்சத்து, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய தாதுப்பொருட்கள் உள்ளது.
கருத்தரித்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள். பேரீச்சம்பழங்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் கர்ப்ப காலத்திற்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த உணவாகும்.
மாதுளை
மாதுளையில் வைட்டமின் சி மற்றும் கே, அத்துடன் பல ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க மாதுளை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவை பெண் கருவுறுதலை அதிகரிக்கச் செய்வதாகவும், கருப்பை சுவரை தடிமனாக்க உதவுவதாகவும், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மக்கா வேர்
மக்கா ரூட் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் குறைந்த கருவுறுதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படலாம். இது சத்தானது மற்றும் வைட்டமின்கள் பி, சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இந்த வேர் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தவும், விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்துகிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலில் அரை டீஸ்பூன் மக்கா ரூட் தூள் சேர்க்கவும். நீங்கள் பல மாதங்களுக்கு மக்கா ரூட் தூள் எடுக்கலாம், ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அதை தவிர்க்கவும்.
வைட்டமின் டி
உடலில் வைட்டமின் டி இல்லாதது கருவுறாமைக்கு வழிவகுக்கும் மற்றும் முந்தைய கர்ப்பத்தை இழந்த பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம். வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.
எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. பல அறிவியல் ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டால் பெண் கருவுறுதலில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் காட்டுகின்றன.
லவங்கப்பட்டை
இந்த அற்புதமான மருந்து பெண்களின் கருப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் மலட்டுத்தன்மையை தடுக்கிறது. பெண் மலட்டுத்தன்மையின் முக்கிய காரணங்களில் ஒன்றான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது பிசிஓஎஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் சேர்த்து இந்த தேநீரை பல மாதங்களுக்கு குடிக்கலாம்.
ஆலமரத்தின் வேர்கள்
ஆலமரத்தின் வேர் கருத்தரிப்பிற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். உங்கள் மாதவிடாய் முடிந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களுக்கு வெதுவெதுப்பான பாலுடன் ஆலமரத்தின் வேரின் பொடியை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் பல மாதங்கள் கூட இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். நல்ல ரிசல்ட் இருக்கும்.
பூண்டு
கர்ப்பம் தரிக்க ஒரு சிறந்த இயற்கை தீர்வு உண்டு என்றால் அது பூண்டு சாப்பிடுவது. பூண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருவுறுதலை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. பூண்டு விந்தணு மற்றும் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்துகிறது. 1 முதல் 5 பல் பூண்டுகளை மென்று சாப்பிடலாம்.
பூண்டை மென்று சாப்பிட்ட பிறகு, ஒரு கிளாஸ் சூடான பால் குடிக்கவும். அல்லது பாலில் பூண்டு பற்களை வேகவைத்தும் சாப்பிட்டு வரலாம். கருவுறுதலை மேம்படுத்த குளிர்காலங்களில் இந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்றவும்.
- குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும்.
- அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன.
குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். உண்மையில், கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி-1, பி-2, பி-6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ சத்தாக மாறி, உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.
உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுக்கின்றன. குடல் இயக்க மாறுபாட்டை தடுப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
உணவு பழக்க வழக்க மாறுபாட்டால், இதய பிரச்சினைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
கீரைகள் சாப்பிடும்போது இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. கீரைகளில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்துக்கு சீரான அளவில் ரத்தத்தை அனுப்புகிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை அகலப்படுத்தி தமனிகளில் அடைப்பை தடுக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரை பாதிப்பு அபாயத்தையும் குறைக்கின்றன.
மேலும், கண்புரை உருவாகுவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும்போது, அவற்றை தவிர்க்காமல் அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.
- கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
- தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.
இன்றைய சூழலில் இளநரையால் ஆண்கள், பெண்கள், ஐந்து வயது குழந்தைகூட பாதிப்புக்குள்ளாகிறது. இளநரைக்கு மரபைவிட பிற காரணிகளே முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. உதாரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுமுறை காரணங்களாகும். இதில் மரபு சார்ந்து இளநரை ஏற்பட்டால், அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது.
* தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைத்து பராமரித்தால், இளநரையை எளிதில் தடுக்கலாம். தலை வழுக்கையாவதையும் தடுக்கலாம். தலைமுடியும் அடர்த்தியாகும்.
* உணவில் கடுக்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
* தினம் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு பருகுவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது.
* சீரகம், வெந்தயம், மிளகை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை குறையும்.
* கருவேப்பிலை, மருதாணி இலைகளை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்த்து தினமும் தடவி வருவது நல்ல பலனை தரும்.
* நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை தலையில் தடவி வர இளநரை குறையும்.
* கரிசலாங்கண்ணி சாறு, கடுக்காய் தண்ணீரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
* கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயம் உணவில் சேர்த்துக் கொள்வது இளநரை ஏற்படாமல் காக்கும்.
* தலைமுடி கருமையாக இருக்க ஷாம்பூவுக்கு பதிலாக இயற்கையான சீயக்காய் பயன்படுத்தலாம்.
* மிளகு தூளை தயிரில் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்து வரலாம்.
* அவுரிப் பொடியை மருதாணியுடன் சேர்த்து தலைக்கு தடவி குளிப்பதால் இளநரை நிறம் மாறத்தொடங்கும்.
- செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது.
- செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.
குளிர்பானம் என்பது அதிக அளவில் சர்க்கரை கலக்கப்பட்ட பானம். இதில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. உடல் நலத்துக்கும் கெடுதல். சிலர் உடலுக்கு புத்துணர்வு அளித்து ஆரோக்கியம் அளிக்கிறது என்று நினைத்துக்கொண்டு எனர்ஜி டிரிங்ஸ் குடிக்கின்றனர். இதுவும்கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கோடை வெயில் நேரத்தில் குளிர்பானங்கள் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்றாலும் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு, எலும்பு அடர்த்திக் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை, கார்பன் டைஆக்ஸைடு, பாஸ்பாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம், காஃபின், செயற்கை சுவையூட்டிகள், செயற்கை நிறங்கள் உள்ளிட்டவை உள்ளன.
செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது பற்களில் பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். இந்த பாக்டீரியாக்கள் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இது பற்சிதைவுக்கு வழிவகுக்கும்.
குளிர்பானம் குடிப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குளிர்பானம் அருந்தும் பழக்கம் மேலும் அதிகரிக்கிறது.
செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
மேலும் சில ஆய்வுகள் செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது சில வகையான புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீர், பழச்சாறு, லஸ்ஸி, மோர் போன்ற பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
- நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
- அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.
வாய் சிவப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெற்றிலை கொடி வகையை சேர்ந்தது. வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.
* 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.
* உடலுக்கு வெப்பம் தரும் வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.
* வெற்றிலையை போடுவதால் ஈறுகளில் இருக்கின்ற வலி, ரத்த கசிவை நீக்கி, பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.
* வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.
* வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.
* நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* அளவோடு வெற்றிலை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும்.
* வெற்றிலை வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.
* கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.
* 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.
- முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள்.
- தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும்.
தலைமுடியை தினமும் முறையாக வாருவது பல நன்மைகளை அளிக்கிறது. ஆரோக்கியமான முடியை பெற தினமும் தலைமுடியை வாருவது அவசியமாகும்.
முடி உதிர்தல் பிரச்சனை இருப்பர்கள் தலையில் சீப்பை பயன்படுத்த மாட்டார்கள். தலைமுடியை வாருவதற்கு சீப்பு பயன்படுத்துவது பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல அறிவியல் ரீதியான நன்மைகளையும் கொண்டுள்ளது. தலைமுடியை வாருவதால் கிடைக்கும் நன்மைகள்:
* தலைமுடியை வாரும்போது சீப்பு மண்டை ஓட்டுப்பகுதியில் உராய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
* தலையில் இயற்கையான எண்ணெய் உற்பத்தியாகவும் அது அனைத்து பகுதியில் சீராக பரவவும் உதவும்.
* தலைப்பகுதியில் உள்ள இறந்த செல்களை நீக்க இது உதவும். இதனால் புது செல்கள் உற்பத்தியாகி தலைமுடி நன்கு வளரும்.
* சிலர் விடுமுறை நாள்களில் போட்ட பின்னலை (அ) கொண்டையை அவிழ்க்கவே மாட்டார்கள். தலைமுடியை வாராமல் விடும்போது முடி சிக்கலாகும். மேலும் வியர்வை தேங்கி, பிசுபிசுப்பு உண்டாகும்.
* தலைமுடியை வாராமல் இருப்பதால் பொடுகுத்தொல்லை, பேன் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
- உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம்.
- ஆளி விதையில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து உள்ளது.
ஆளி விதைகளை பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவது நல்லது. ஆளி விதைகளை வறுப்பதால் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பைடிக் அமிலம் நீக்கப்படுகிறது. முளைக்க வைத்து சாப்பிடுவதும் நல்லது. ஆளி விதைகளை சாப்பிட்ட பின்னர் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் மலச்சிக்கல் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
* ஆளி விதைகளை ஓட்ஸ், சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது விரும்பும் பிற உணவுகளில் சேர்த்து உண்ணலாம்.
* ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை நமது பெரிய குடலை சேதப்படுத்தாமல் பாதுகாக்கின்றன. கொழுப்பை கரைக்கிறது. சர்க்கரையை குறைக்கிறது.
* ஆளி விதை ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
* உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதைகளை சாப்பிடலாம்.
* ஆளி விதையில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து உள்ளது. அவை நீண்ட நேரம் பசி உணராமல் தடுக்கின்றன.
* உடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஆளி விதைகளை உண்பதால் உள் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது.
* தோல் வெடிப்பு, அரிப்பு, வீக்கம், வலி மற்றும் எரியும் தன்மையைப் போக்க ஆளி விதைகளை உண்ண வேண்டும். ஆளிவிதைகள் இந்த பிரச்சனைகளை விரைவில் நீக்கும்.
* ஆளி விதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆல்பா-லினோலெனிக் அமிலம் என்று அழைக்கப்படுகின்றன. இவை மூளையை ஆரோக்கியமாக்கும்.
* ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து, பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா-3 இதயத்தை பலப்படுத்துகிறது. இதயத்தை ஆரோக்கியமாக்கும்.
* தலைமுடி நீளமாக வளர, வலுவாக இருக்க ஆளி விதைகளை சாப்பிடலாம்.
- செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும்.
- செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட செவ்வாழை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இந்த பழத்தை சாப்பிட உகந்த நேரம் காலை 6 மணி. அது சாத்தியமில்லை என்றால் காலை 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதேவேளையில் உணவு சாப்பிட்ட உடன் செவ்வாழை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சோம்பல் உணர்வை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் சிக்கல் நேரும்.
செவ்வாழையில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் கருவுறுதல் மற்றும் ஆண்மை தன்மைக்கு நலம் சேர்க்கும். இதில் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. துத்தநாகம் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவும். உடல் ஆற்றலையும் வலுப்படுத்தும்.
லுடீன் மற்றும் பீட்டா கரோட்டினாய்டுகள் நிறைந்திருப்பதால் வயது தொடர்பான மாகுலர் சிதைவு, இரவு பார்வை இழப்பை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தையும், பார்வை திறனையும் மேம்படுத்த செவ்வாழை உதவும்.
செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும், தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். போதுமான அளவு கொலாஜன் இருப்பது தசைகளை பலப்படுத்தும். கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தும்.
செவ்வாழையில் வைட்டமின் பி6 இருப்பது, ரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்த சோகைக்கு தீர்வு காணவும் துணை புரியும்.
செவ்வாழையை சரியான நேரத்தில் சாப்பிடுவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்யும். கூடுதல் நன்மைகளை வழங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்