search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • திருவண்ணாமலை விநாயகரை வழிபட துன்பங்கள் தீரும்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    தம்பியாகிய முருகப் பெருமானுக்கு இருப்பதுபோல, அவரது அண்ணன் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

    திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், மதுரை, பிள்ளையார்பட்டி மற்றும் திருநாரையூர் ஆகியவையே விநாயகருக்கான அறுபடை வீடுகள் ஆகும்.

    விநாயகரின் அறுபடை வீடுகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

    முதல் படைவீடு-திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

    இரண்டாம் படைவீடு-விருத்தாசலம்:

    இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

    மூன்றாம் படைவீடு-திருக்கடவூர்:

    எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

    நான்காம் படைவீடு-மதுரை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன் சித்தி விநாயகரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

    ஐந்தாம் படைவீடு-பிள்ளையார்பட்டி:

    அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    ஆறாம் படைவீடு-திருநாரையூர்:

    திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

    • தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.
    • இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.

    பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடும் வழக்கம் வர காரணமாக இருந்தவர் மகா விஷ்ணுவே.

    ஒருசமயம் விஷ்ணு அசந்து தூங்கிய போது அவரை எழுப்பி விட சக்கரத்தைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்.

    மருமகனான அவரிடம் சக்கரத்தை வாங்கிட அதட்டி, மிரட்டி கேட்க முடியாது.

    இதனால் அவரைச் சிரிக்க வைத்தால் சக்கரம் கீழே விழுந்துவிடும் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதிய விஷ்ணு இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு கீழும் மேலும் குதித்தார்.

    விநாயகர் சிரிக்க சக்கரம் கீழே விழுந்து விட்டது. விஷ்ணு அதை எடுத்துக் கொண்டு நகர்ந்தார்.

    தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை.

    இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும்.

    ஆணவமும் மாயையும் அகன்றிட அனைவரும் தோப்புக்கரணம் (தோர்பி கரணம்) போடலாம்.

    உண்ணி அப்பம் பிரசாதம்

    தமிழ்நாட்டில் மோதகமே விநாயகருக்கு முக்கிய பிரசாதம்.

    ஆனால் கேரளாவில் கொட்டாரக்கரா என்ற இடத்தில் சன்னதி முன்பாகவே உண்ணி அப்பம் தயார் செய்யப்பட்டு படைத்து வினியோகிக்கப்படுகிறது.

    ஈஸ்வர மங்கலம் விநாயகர் கோவிலும் உண்ணி அப்பமே முக்கிய நிவேதனப் பொருள்.

    • சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
    • விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.

    தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னையில் கோசை மாநகர் என்ற பெயரில் விளங்கிய கோயம்பேடும், அரும்பாக்கம் எனப்படும் நகருக்கும் நடுவில் ஒரு சுந்தர கணபதி கோவில் உள்ளது.

    சுற்றிலும் அருகம்புல்லால் சூழப்பட்ட காடாக ஒரு காலத்தில் இருந்ததால் அருகம்புல் பாக்கமாகி காலப்போக்கில் அரும்பாக்கமாக மருவியது.

    இத்தலம் சத்திய விரதச் சேத்திரம் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு சத்யம்-அறம், பாக்கமாகி அரும்பாக்கமாக ஆகிவிட்டது எனவும் கூறுவர்.

    பெண்கள் பலர் கூடி இங்கே ஒரு கணபதி உருவத்தை வழிபட்டு, காலப்போக்கில் பக்தர்கள் கூடி 1969 முதல் மிகச் சிறப்பான சக்தி உடைய, அழகு பொருந்திய விநாயகர் சிலையை ஸ்தாபித்து எல்லாவித விசேஷங்களையும் செய்து வருகின்றனர்.

    சிவ வைணவ ஆலய சர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    விநாயக நவராத்திரி என விநாயகர் சதுர்த்தி முதல் கொண்டாடப்பட்டு வரும் விசேஷ வழிபாடுகள் இந்த சன்னதியில் நடைபெறும்.

    அருகால் வழிபட்டு வர ஆனந்தம் அருளும் இவரை வழிபட்டு வரலாம். தொடர்புக்கு:- 044-24756514.

    • வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.
    • தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    கண் திருஷ்டி விநாயகர் யந்திர வடிவம்

    திருஷ்டிகளை விரட்டுகிற இந்த யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

    மூல மந்திரம்:

    ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம க்ரஹ திருஷ்டி தோனம் நிவர்ஜய நிவர்தய :

    முள்ளங்கி விரும்பி

    வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார்.

    தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    எத்தனை அவதாரம் எடுத்தாய்

    வக்ர துண்ட விநாயகர் - உலகின் பிரளயம் தொடங்கி முடியும் போது இவர் தோன்றி அரி, ஹரன், அயன் இவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று

    • அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.
    • அதனால் இவ்விநாயகருக்கு “கூப்பிடு விநாயகர்” என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    ஒருமுறை சுந்தர மூர்த்தி சுவாமிகள் தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் மிகுதியாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் ஈசன்.

    சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துச் மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார்.

    திருமுருகன் பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார்.

    அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார்.

    அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்" என்ற சிறப்புப் பெயர் உண்டானது.

    • கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
    • பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

    பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது.

    கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

    ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணைய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.

    புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும்.

    இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று வேடிக்கைப் பழமொழியாக சொல்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது. எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார்.
    • தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள்.

    ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.

    ஆகவே கணேசமூர்த்தி படைத்தல், அழித்தல், காத்தல் ஆகியவற்றை செய்யும் மும்மூர்த்தியாகிறார்.

    மோதகம் ஏந்திய கை அருளை குறிக்கிறது.

    எனவே இவர் பராசக்தியாகவும் இருக்கிறார். தும்பிக்கை மறைத்தலை குறிக்கிறது. எனவே இவர் எல்லாம் வல்ல பரமேஸ்வரராகவும் இருக்கிறார்.

    பிள்ளையார் சுழி

    உலகத்தில் முதன் முதலாக எழுத்தைக் கண்டு பிடித்து எழுதத் தொடங்கியவர் விநாயகர் தான் என்பது புராணம் கூறுவது.

    மகாபாரதத்தை வியாசர் எடுத்துரைத்த போது அதை அழியாமல் காக்கும் பொருட்டு விநாயகர் தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே எழுத்தாணியாக்கி எழுதினார்.

    எழுத்தைக் கண்டு பிடித்த கணபதிக்கு நம் நன்றியைச் சொல்லும் விதமாக எதை எழுதத் தொடங்கினாலும் (உ) பிள்ளையார் சுழியைப் போடுகிறோம்.

    அதன்படி இவர் முழு முதற்கடவுள் என்கிறோம். முதல் எழுத்தாளரும் விநாயகர் பெருமானே.

    • விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.

    வேலூர் அருகே உள்ள சேன்பாக்கம் என்ற ஊரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் 11 சுயம்பு விநாயகர்கள் உள்ளனர்.

    இத்தனை சுயம்பு விநாயகரை வேறு எங்கும் பார்க்க முடியாது.

    விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது ஏன்?

    விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும்.

    இந்த விழாவை 1895 ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார்.

    விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர்.

    விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும் அவருக்கு அன்னை.

    எனவே தாய் கங்கையுடன் விநாயகர் ஐக்கியமாகி விடுகிறார் என்பதை சுட்டிக் காட்டவே விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதாக ஐதீகம்.

    • சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.
    • அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகில் தீவனூர் என்ற கிராமம் உள்ளது.

    இங்குள்ள பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும் போது விநாயகர் சிவலிங்கம் போன்றும் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள்.

    பக்தர் ஒருவர் ஒரு காலத்தில் மாடுகள் மீது மிளகு மூட்டைகளை வைத்தபடி உளுந்தூர்பேட்டை சந்தைக்கு போகும் போது, இங்கு தங்கி சமையல் செய்து உணவு சாப்பிட்டார்.

    கோவில் பூசாரி, விநாயகர் படையலுக்காக கொஞ்சம் மிளகு தரக் கேட்டார்.

    இவை மிளகல்ல உளுந்து என்றார்.

    சந்தைக்குப் போன அவர் மூட்டையைப் பிரித்த போது உளுந்தாக மாறி இருக்க இங்கு வந்து பிள்ளையாரிடம் மன்னிப்பு கேட்டார்.

    அன்று முதல் பொய்யாமொழி விநாயகர் ஆனார்.

    இத்தலத்தில் விழுது விடாத ஆலமரம் ஒன்று இருப்பது அதிசயமாகும்.

    சுயம்பு மூர்த்தியான இவரை தரிசிக்க, நினைத்தது நடக்கும் என்பது அங்குள்ள பக்தர்களின் கருத்து.

    • விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.
    • அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    ஓம் என்ற பிரணவத்தில் இருந்து வேதங்கள் தோன்றின.

    அப்பிரணவமே எல்லாத் தேவதைகளுக்கும் பிறப்பிடம்.

    உலகத்தின் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் பிரணவ மந்திரமே காரணமாகும்.

    பிரணவ சொரூபமாகத் திகழ்பவர் விநாயகர்.

    விநாயகரின் பெருமை எழுத்துக்கும் சொல்லுக்கும் அடங்காதது.

    நினைத்ததை எல்லாம் தரவல்லது.

    ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து நான்காம் நாள் அன்று வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்று நாம் கொண்டாடி வருகிறோம்.

    விநாயகர் எப்போதும் ஆதிமூலப் பொருள் ஆவார்.

    அவரே ப்ரணவத்தின் (ஓங்காரத்தின்) வரிவடிவம் ஆவார்.

    சிவபெருமானிடத்தில் இருந்து முதன் முதலாகத் (ஆதி மூலமாக) தோன்றிய ஒலியே ஓங்காரமாகும்.

    ஆகையால் யாவரும் அவரை வழிபாடு செய்து இடர் களைந்து இன்புற்று வாழ்கின்றனர்.

    சிவபெருமானை வழிபடுவோரின் துன்பம் களையவே விநாயகரை சிவன் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.
    • பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.

    பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மெழுகி கோலமிட்டு அழகுப்படுத்த வேண்டும்.

    கோலம் போடும் போது புள்ளிக் கோலம், பின்னல் கோலம் இன்றி பூக்கோலம் போடுவது நல்லது.

    மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.

    பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.

    அருகில் 5 முக குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

    5 வகை பூக்கள், 5 வகை நறுமணப் பொருட்கள், 5 வகை பழங்கள் படைக்க வேண்டும்.

    அத்துடன் அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல், தாம்பூலம் ஆகியவற்றை வைத்து தீபம் காட்டி வழிபட வேண்டும்.

    இவ்வாறு வழிபட வரமும் கிடைக்கும். வளமும் பெருகும்.

    • நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்
    • வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

    சந்தன தைலம்- சுகம் தரும்

    திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

    பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

    அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

    நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

    வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

    பால் - மனக்கவலை தீரும்

    தயிர் - மனநோய் அகலும்

    தண்ணீர்- சாந்தி உண்டாகும்

    நெய் - தொழில் சிறக்கும்

    தேன் - குரல் இனிமை பெறும்

    வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

    கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

    இளநீர் - பக்தி பெருகும்

    எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

    சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

    திருநீறு - துன்பம் நீங்கும்

    சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

    நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

    பழவகை - திருவருள் பெறலாம்

    வாழைப்பழம் - வறுமை ஒழியும்

    கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

    எள் - சனி பயம் நீங்கும்

    மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

    பூ மாலை- உடல் பிணி தீரும்

    பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

    பச்சரிசி- தீராக்கடன் தீரும்

    மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

    தேங்காய்- பொன்பொருள் சேரும்

    பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

    கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

    முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

    ஏலம்- தீமைகள் நீங்கும்

    உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

    எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

    எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

    எள்ளு சாதம் - பகை நீங்கும்

    பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

    கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்

    ×