என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.
    • ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.

    ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவில் முதல் நாள் மாலை சுவாமி வீதி உலா, வெள்ளை சாத்துப்படி நடைபெறும்.

    ஈசான மூலையில் சுவாமி அம்பாளை நிற்க வைத்து வெள்ளை துணியை மேலே சாத்தி தீபாராதனை காட்டப்படும்.

    மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அன்று மாலை சிறப்பு நடன தரிசனம் முடிந்து நடராஜர் அம்பாள் ஊடல் நிகழ்ச்சி நடைபெறும்.

    பெருமாள், நடராஜரின் ருத்ரதாண்டவத்தை சமாதானப்படுத்துவது ஐதீகம்.

    பெருமாள், நடராஜர் இருக்கிற இடத்திற்கு எழுந்தருளி சென்று மரியாதை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

    அப்போது ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வஸ்திரங்கள் சாத்தப்பட்டு தீபாராதனை நடத்தப்படுவது சிறப்பு ஆகும்.

    மாலையில் தயிர் பாலாடை உற்சவம் நடைபெறும். நடராஜர் முன்பு தயிர் சாதம் படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

    3 நாட்கள் இந்த உற்சவம் நடைபெறும்.

    இந்த விழாவில் புதுவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    • ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.
    • சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.

    ஸ்ரீகாளதீஸ்வரர் கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.

    சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.

    இந்த மரம் எந்த வித இடையூறும் இல்லாமல் மேலோங்கி வளர்ந்து செல்லும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

    வன்னி இலைகள் விநாய கருக்கும், முருகனுக்கும், சிவபூஜைக்கும், சனீஸ்வரருக்கும் உகந்த பச்சிலைகள் ஆகும்.

    வன்னி மருத்துவ பயன்மிக்க ஒரு சிறந்த மூலிகையும் ஆகும்.

    பொதுவாக சிவன் கோவில்களில் வில்வமரம் இருப்பதைத்தான் பார்க்க முடியும்.

    இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.

    வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும். நினைத்தாலும், கைகூப்பி தொழுதாலும், வலம் வந்தாலும் நம் பாவங்கள் விலகும் என விநாயகர் புராணம் சொல்கிறது.

    வன்னி மரத்தின் அடியில் ஒரு முனிவர் தவம் இருந்து வந்தார் என்றும், அந்த மரத்தில் முனீஸ்வரர் குடி கொண்டுள்ளார் எனவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.

    வன்னி மரத்தை வாரம்தோறும் சுற்றி வந்தால் பிரச்சி னைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

    எல்லா பிணிகளையும் போக் கவல்ல மூலிகையாக திகழும் வன்னியை வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா துயரங்களும் விலகி நன்மை கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

    • பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.
    • சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.

    கிருத்திகை நட்சத்திரமும் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்த நாளில் அக்னியை நினைத்து தவமிருந்தால் குண்டலினி சக்தி ஏறும்.

    இது புலிப்பாணி, அகத்தியர் சொன்ன நல்லநாள். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரா இவை பல அபூர்வ சக்திகளை எழுப்பி தர வல்லவை.

    பல அற்புதங்களை செய்பவர்கள் உடலில் இந்த குறிப்பிட்ட சக்கரங்களில் ஒன்று வேலை செய்வதால் தான் சாதிக்க முடிகிறது.

    சாதாரண மனிதனுக்கு இவை உறங்கி கொண்டிருக்கும். இந்த சக்கரங்கள் சுழல ஆரம்பித்துவிட்டால் ஒருவனுக்கு எல்லா சித்துகளும் கைவரும் என்பார்கள்.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், வேல் ஞான சக்தியாகவும், மயில் ஆணவம் என்றும், சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது.

    ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடிக்கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    • கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
    • இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.

    கோவிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கித்தான் இருக்கிறது.

    இது எப்போதும் அடைத்துக் கிடக்கும். எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான்கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

    உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.

    தெற்கு வளாகத்தில் விசாலாட்சி விஸ்வநாதர் இருக்கிறார்கள். இவர்களை பாலசித்தரை ஐக்கியப்படுத்திய கோலத்தில் காணலாம்.

    கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.

    இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.

    இங்கு உற்சவ மூர்த்திகள் மூன்று உண்டு. வெளியே தென் பக்கத்தில் ஒரு மடம் இருக்கிறது.

    அதில் பால சித்தர் சிலையை காணலாம்.

    இங்கு பிரம்மமோற்சவக் காலம் பங்குனி மாதம். தைப்பூசப் பெருவிழாவும் உண்டு.

    பிரம்மோற்சவம் 5ஆம் நாளும் தைப்பூசத்திலும் முருகன், பெரிய தங்க மயில் வாகனத்தில் வீதி வலம் வருவார்.

    இவை இரண்டும் பக்தர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    • மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.
    • அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.

    மயிலம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பலமடங்கு அதிகரித்து விட்டது.

    அதற்கு காரணம் மயிலம் தலத்துக்கு சென்று வந்தால் உடனே திருமணம் கைகூடும், மற்றும் எடுத்தக்காரியம் உடனே வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.

    சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் திண்டிவனத்தை கடந்ததும் மயிலம் ஊரை அடையலாம்.

    மயிலம் மெயின் பஜாரில் இருந்து பார்த்தாலே மயிலம் மலை முருகன் கோவில் தெரியும்.

    திண்டிவனம் நெடுஞ்சாலையில் இருந்து திருப்பாதிரிபுலியூர் செல்லும் வழியில் சென்றால் மிக எளிதாக மயிலம் தலத்துக்கு செல்ல முடியும்.

    மயிலம் அடிவாரத்தில் இருந்து குன்று நோக்கி வரும் சாலையில் வந்தால் கோவிலின் தெற்கு வாசல் வந்து சேருவோம்.

    • அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.
    • அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.

    ஆதியில் சமயபுரத்தாள், ஸ்ரீரங்கத்தில் இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

    விஜயநகரப் பேரரசின் வலிமை குன்றியபோது பகைவரின் அத்துமீறிய தாக்குதலால் அம்பாளை இடமாற்றம் செய்ய நினைத்துள்ளனர் அன்றிருந்த அன்பர்கள்.

    அதற்காக தேவியின் சிலையை பல்லக்கில் ஏற்றி மாற்று இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.

    அப்படி சென்றவர்கள், ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அந்த பல்லக்கை இறக்கி வைத்தனர்.

    அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.

    ஸ்ரீபாதம் தாங்கிகள் மீண்டும் பல்லக்கை அங்கிருந்து தூக்க முற்பட்டபோது அம்பாளின் திருமேனியை அசைக்கக்கூட இயலாமல் போனதாம்.

    அதனால் அம்பாளை வணங்கி அங்கேயே குடியமர்த்தியதாகச் சொல்கின்றனர்.

    • தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர்.
    • அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    சமயபுரம் அம்பாளின் தோற்றம் குறித்து பல்வேறு புராதனக் குறிப்புகளும், செவிவழிச் செய்திகளும் நிலவிக் கொண்டிருக்கின்றன.

    அவற்றுள் முக்கியமானவற்றை இங்கு காண்போம்.

    தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் த்வாபர யுகத்தில் அவதரித்தனர்.

    அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    தேவகிக்கு பிறக்கும் குழந்தைகளைக் கொல்லும் வழக்கமுடைய கம்சன், கடைசியாக அங்கு வந்த (யசோதையின் குழந்தை) பராசக்தியான இளம் குழந்தையைக் கொல்ல முற்பட்டான்.

    அப்போது அவன் கரத்திலிருந்து விடுபட்ட பராசக்தி, தனது உண்மைத் தோற்றத்தை அவனுக்கு காட்டி மறைந்தாள்.

    பின்னாளில் கண்ண பரமாத்மாவால் கம்சன் சம்ஹாரம் செய்யப்பட்டான்.

    இத்தேவியே மகாமாரி என்னும் மாரியம்மனாக மக்களால் பூஜிக்கப்படுகிறாள்.

    அநீதியையும் தீமைகளையும் அழித்து மக்களுடைய தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் அந்த அன்னை மகாமாயியே சமயபுரத்தில் அற்புத அம்மனாக காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டுள்ளாள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள்.
    • அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.

    நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம்.

    புது வீட்டுக்குள் வரும் பசு அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அது தன் கோமியத்தை இட வேண்டும்;

    அந்தக் கோமியத்தில் மஞ்சள் பொடி கலந்து அந்தப் புதுமனையின் உள்ளும் புறமும் எங்கும் தெளிக்க வேண்டும் என்பதே.

    புதுமனை புகு விழாவின் முக்கிய நிகழ்வாகும்.

    இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய், நொடியின்றி செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.

    புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள்.

    அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.

    இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப் பலன் உண்டு.

    பால் நீண்ட வாழ்வையும், தயிர் புத்ர விருத்தியையும், நெய் மோட்சத்தையும், பஞ்ச கவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும்.

    பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

    சிவனுக்கு அபிஷேகம் செய்து, அவனை அர்ச்சித்து, ஆராதித்தால் அவனது அருட்கடலில் மூழ்கித் திளைக்கும் பெரும் பேறு அடியவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.

    சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்ச கவ்வியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.
    • தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.

    உலகத்தைப் படைத்தபோது பிரம்மா பசுவையும் படைத்தார். அது மட்டுமின்றி பசுவின் உடலில் பதினான்கு உலகங்களையும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் இடம் பெறச் செய்தார்.

    எல்லாத் தேவர்களும் பசுவின் உடலில் இடம் பெற்றுவிட்ட நிலையில் கங்கா தேவிக்கும், மகாலட்சுமிக்கும் தாமதமாக வந்ததால் பசுவின் உடலில் இடமில்லாத நிலை ஏற்பட்டது. பசு அவர்கள் மீது இரக்கம் கொண்டது.

    தன் பின் பகுதியைக் காட்டி, இந்த இரண்டு பாகங்களும்தான் காலியாக உள்ளன. நீங்கள் வேண்டுமானால் அங்கு குடியேறிக் கொள்ளலாம் என்று சொன்னது.

    அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தை ஏற்றுக்கொண்டனர்.

    அதனால்தான் நாம், பசுவின் முன் பாகத்தையோ, முகத்தையோ தொட்டு நம்முடைய கண்களில் பக்தி உணர்வுடன் ஒற்றிக்கொள்வதோடு கோமாதா வழிபாட்டை முடித்து கொள்வதில்லை.

    பசுவின் பின் பகுதியையும் தொட்டு இரண்டு கண்களிலும் பணிவுடன் ஒற்றிக்கொள்கிறோம்.

    அதனால்தான் சாணத்துக்கும், கோமியத்துக்கும் அவ்வளவு மரியாதையும் மதிப்பும் உள்ளது.

    பசு தரும் சாணத்தைத்தான் நாம் பெரும் புனிதப் பொருளாகக் கருதி அதிலிருந்து விபூதி தயாரித்து நம் உடம்பெங்கும் பூசி நோய்கள் அனைத்தையும் போக்கிக் கொள்கிறோம்.

    அதுபோல பசுவிடம் இருந்து நாம் பெறும் கோமியமும் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.

    • சோமவாரம்‘ என்பது விரதம் மேற்கொள்ளும் நாள். எனவே அன்று தலையில் எண்ணை தேய்த்துக் கொள்ளக் கூடாது.
    • சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசி) லட்சம் சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும்.

    01. பிலிப்பைன்சில் வாழும் மக்கள் சிவனைச் 'சிவப்பன்' என அழைத்து வழிபடுகின்றனர்.

    02. சி-சிவன், வா-அருள்,ய-ஆவி, ந-திரோதம், ம-மலம் என 'சிவாயநம' என்பதில் ஒவ்வோர் எழுத்தும் ஓர் உண்மையினைச் சுட்டி நிற்கிறது.

    03. சிவராத்திரி பெரு நாளைச் சிவபெருமான் லிங்கத்தில் தோன்றிய நாளென்றும், சோதிமயமாய்த் தாணு வடிவில் பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் இடையே தோன்றிய நாளென்றும், புனர் உற்பவத்திற்காகத் தேவி பூஜை செய்த நாளென்றும் கூறுகின்றனர்.

    04. சிவ வழிபாட்டினை இன்னும் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் தொடர்கின்றனர்.

    05. காஞ்சி ஏகாம்பர நாதரைத் திங்கட்கிழமை தோறும் வணங்கினால் நலம் பெருகும்.

    06. திருவூறல் என்னும் திருத்தலத்தில் உள்ள 'நந்திமடு'வில் நீராடுதல் விசேஷம்.

    07. திருப்பாசூரு சிவ திருத்தலத்தில் உச்சிக் காலப் பூஜையை தரிசிப்பது நல்லது.

    08. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி சிவன் ஆலயத்தில் ஒரே வெள்ளைக் கல்லில் செய்த 6 அடி நீளமுள்ள நந்தி உள்ளது. இதன் அகலம் 3அடி.

    09. சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று எண் குணத்தான். அந்த எட்டுக் குணங்களாவன் பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, ஒரு வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை, கோத்திரம் இன்மை.

    10. ராஜபோகத்தை விரும்புவோன் பழுதில்லாத பத்துக் கோடி மலர்களால் பாத்திவ லிங்கத்தைப் பூஜிக்க வேண்டும்.

    11. பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்குப் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை. இதுவே ஜென்ம நட்சத்திரம். இதனை சங்க இலக்கியம் 'பிறவா யாசகப் பெரியோன்' எனக் கூறுகின்றது.

    12. 'சோமவாரம்' என்பது விரதம் மேற்கொள்ளும் நாள். எனவே அன்று தலையில் எண்ணை தேய்த்துக் கொள்ளக் கூடாது.

    13. சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசி) லட்சம் சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும்.

    14. முற்பிறப்பில் சிவனைக் குறித்துத் தவமிருந்து (பதிம்தேசி) கணவன் வேண்டும் என்று ஐந்து முறை கூறியதால் திரவுபதி ஐந்து கணவரை மணக்க வேண்டியதாயிற்று.

    15. 'சிவாயநம' என்னும் சூட்சும பஞ்சாட்சரம் ஒரு தலைமாணிக்கம் என்றும், 'சிவயசிவ' என்ற காரண பஞ்சாட்சரம் இருதலை மாணிக்கம் என்றும் அழைக்கப்படுகின்றது.

    16. சிவபெருமானின் திருக்காதுகளில் குழை வடிவில் இருக்கும் கந்தர்வர்கள் "அவசுதரர், கம்பளர்" அவர்களை 'ஹாஹா', 'ஹூஹூ' என்றும் அழைப்பர்.

    • இளநீர், கரும்பின் சாறு, தயிர், தேன், நீர், நீறு, பசுநெய், பழம், பால், வெண்ணை இவையே சிவபிரானுக்கு உகந்த அபிஷேகப் பொருட்கள்.
    • பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு என்கிற இவை ஐந்துமே சிவனுக்குரிய ‘ஆனிடை ஐந்து’

    01. ஜப்பானிய மக்கள் முற்காலத்தில் சிவனைச் 'சிவோ' என அழைத்து வணங்கியுள்ளனர்.

    02. சிவபெருமான் முதன் முதலில் படைத்த மலை திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம்.

    03. இறைவன் சிவபெருமான் அர்ச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுத்த திருத்தலம் திருவேட்களம் என்னும் சிற்றூர். இங்கு இறைவனின் பெயர் பாசுபதேஸ்வரர்.

    04. சிவபெருமான் ஆலகால நஞ்சினை அருந்திய பொழுது, உமாதேவியார் அவருடைய கண்டத்தைப் பிடிக்க, அவர் அவ்விஷக் கறையைத் தமது கண்டத்திற் காட்டியருளிய திருத்தலம் இலுப்பைப்பட்டு, இவ்வூர் பந்தணை நல்லூருக்கு அருகில் உள்ளது.

    05. சிவனே கணக்கராய் இருந்து கோயிற் கணக்கை அரசனிடம் ஒப்புவித்த திருத்தலம்-'இன்னம்பர்' திருக்குடந்தை அருகில் உள்ளது.

    06. சிவபிரானுக்கு பிடித்த ராகம் சங்கராபரணம். அன்னை உமையவளுக்கு பிரியமான ராகம்-கல்யாணி, தோடி, சாவேரி, தன்யாசி, பைரவி.

    07. திருவாரூர் தியாராசர் பெருமானுக்கு தினமும் செங்கழுநீர்ப் பூ படைக்கப்படுகிறது.

    08. கஸ்தூரி, கோரோசனம், குங்குமப்பூர், பச்சைக்கற்பூரம் முதலிய நறுமணப் பொருட்களைக் கூட்டி சிவபெருமானுக்கு ஒருமுறை சந்தனக் காப்பு அலங்காரம் செய்பவர் தேவ வருடத்தில் கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பர் எனச் 'சிவ புண்ணியத் தெளிவு' கூறுகிறது.

    09. இளநீர், கரும்பின் சாறு, தயிர், தேன், நீர், நீறு, பசுநெய், பழம், பால், வெண்ணை இவையே சிவபிரானுக்கு உகந்த அபிஷேகப் பொருட்கள்.

    10. பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு என்கிற இவை ஐந்துமே சிவனுக்குரிய 'ஆனிடை ஐந்து'

    • ‘நமச்சிவாயத்’ திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.
    • சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.

    1. சிவன் பேயன் வாழையிலும், விஷ்ணு முகுந்தன் வாழையிலும், பிரம்மா-பூவன் வாழையிலும் குடி கொண்டிருப்பதாலேயே இந்த மூன்று வாழைப் பழங்களில் ஒன்றையாவது இறைவனுக்குப் படைக்க வேண்டும்.

    2. சிவத் தியானம் செய்யும் மகா வித்துவானான நந்தியே மகாதேவனைத் தரிசிக்க எனக்கு அனுமதி கொடு என்று கூறிக் கோவிலின் உள்ளே செல்லும்போத இரு கரங்களையும் மார்புக்கு நேராகக் குவித்து அஞ்சலி செய்து கொண்டே வலம் வருதல் வேண்டும்.

    3. சிவனுடைய கடைசி அம்சம் கால பைரவர் அதனாலேயே கோவில்களில் அர்த்த ஜாமம் முடியும் போது கடைசியாகப் பைரவர்க்குத் தீபாராதனை செய்கின்றனர்.

    4. 'நமச்சிவாயத்' திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.

    5. சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.

    6. பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் செய்ய வேண்டும். சிவாலயங்களில் காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும்.பகலில் வலம் வந்தால் விருப்பம் அளிக்கும். மாலையில் வலம் வந்தால் பாவங்கள் அகலும் அர்த்த சமாத்தில் வலம் வந்தால் மோட்ச சித்தி உண்டாகும்

    7. பிரதோச விழாவின் போது நந்தி தேவர் பக்கத்திலும் இறைவன் திருச்சந்நிதியிலும் நெய் விளக்கு வைக்க வேண்டும்.

    8. சிவன் என்னும் பெயர் திராவிட மொழிச் சொல். இது பிற்காலத்தில் வடமொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    9. மாதப் பிறப்பு சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி, திங்கள் ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கக் கூடாது.

    10. சங்க இலக்கிய காலத்திலும் சிலப்பதிகார காலத்திலும் சிவாலயங்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.

    ×