என் மலர்tooltip icon

    இந்தியா

    • புனித ரமலான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும்.
    • இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.

    ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    புனித ரமலான் நம் சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை மேம்படுத்தட்டும்.

    இஸ்லாமியர்கள் அனைவரின் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை
    • அரசு விடுமுறை தினமான இன்று (மார்ச் 31) வங்கிகள் செயல்படுவது தொடர்பாக ஆர்.பி.ஐ. விளக்கம்

    இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    இந்தியா, ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது. எனவே 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்க வேண்டும். இதற்காக மார்ச் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன் அறிக்கையில், அனைத்து வங்கிகள் மற்றும் அரசாங்க வருவாய் மற்றும் செலவுகளை நிர்வகிக்கும் கிளைகள் மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பணிநேரத்தில் பணியாற்ற வேண்டும்.

    அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம். இதர பொதுவான வங்கி சேவைகள் இன்று இயங்காது.

    • புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது.
    • புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    ரம்ஜான் பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

    புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிரார்த்தனையும் நிறைவடைவதை ரம்ஜான் பண்டிகை குறிக்கிறது. இது சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் கருணை ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.

    இந்த பண்டிகை சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கிறது மற்றும் அமைதியான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும். மேலும் நேர்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை வலுப்படுத்தட்டும்.

    இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    துணை ஜனாதிபதி ஜன்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    ரம்ஜான் பண்டிகை நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் பகிரப்பட்ட பிணைப்புகளில் அதன் வலிமையை நினைவூட்டுகிறது.

    "ஈத்தின் சாராம்சம் வெறும் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டது; இது ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் நமது அரசியலமைப்பு லட்சியங்களை உள்ளடக்கியது.

    இந்த புனிதமான சந்தர்ப்பம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதுப்பித்தல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆழமான உணர்வைக் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

    • 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
    • தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.

    ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.

    • ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
    • முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது

    சத்தீஸ்கர் பயணப்பட்டுள்ள பிரதமர் மோடி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.

    இந்த நிகழ்வில் ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக நக்சலிசம் ஊக்கம் பெற்றது. வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது, ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது? அத்தகைய மாவட்டங்களை பின்தங்கியதாக அறிவித்து அதன் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றது.

    மாவோயிஸ்ட் வன்முறையில் பல தாய்மார்கள் தங்கள் அன்புக்குரிய மகன்களை இழந்தனர், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்களை இழந்தனர்.

    முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    மேலும் பேசிய அவர், பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் காணப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது. ஆனால் பாஜக அரசு மக்களுக்கு வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

    • நான் மெதுவாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார்
    • அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்டுள்ளார்.

    இன்று மாலை நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி நின்றது.

    சம்பவத்தின் பின் இதுதொடர்பாக வெளியான வீடியோவில், நடைபாதையில் சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் நின்றிருப்பதும், கட்டுமான தொழிலாளர்கள் அதை நோக்கி ஓடுவதையும் காட்டியது.

    காரை ஒட்டியவர்களிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "நீங்கள் இங்கு ஸ்டண்ட் கற்றுக்கொண்டீர்களா?, இங்கே எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்கிறார்.

    அதற்கு காரை ஓட்டியவர் அலட்சியமாக, இங்கே யாராவது இறந்தார்களா? என்று கேட்கிறார். அந்த வீடியோவைப் பதிவுசெய்து கொண்டிருந்த நபர், "காவல் துறையினரை அழைக்கவும்" என்று கூறுகிறார் அதற்கு கார்ஓட்டி "நான் மெதுவாக ஆக்சிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார், அதற்கு வீடியோ எடுப்பவர், " அதை மெதுவாக அழுத்தினீர்களா?" என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கார் மோதியதில் படுகாயமபட்ட 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் ஆபத்தில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    • மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர்.
    • பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டனர். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை அளித்தனர்.

    அதன்பின் நடந்த கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசுகையில், பாஜகவை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. என்னை யார் முதலமைச்சராக்கியது? அடல் பிகாரி வாஜ்பாய் என்னை முதலமைச்சராக்கினார். நாம் எப்படி மறக்க முடியும்?

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் மத்தியில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்தோம். 2014இல் பிரிந்தோம்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிந்தோம். ஆனால் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.

    பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம். இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்றார்.

    • வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    உத்தரப் பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரன் யாதவ் இன்டர் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவி ரியா பிரஜாபதி (17 வயது) நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.

    பள்ளிக் கட்டணத்தில் ரூ.800 நிலுவைத் தொகையை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணம் செலுத்தாததற்காக அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தற்கொலை செய்த சிறுமியின் தாய் பேசுகையில், "பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், அதிகாரி தீபக் சரோஜ் மற்றும் முதல்வர் ராஜ்குமார் யாதவ் மற்றும் பலர் அவளை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளனர். அவளை தேர்வு எழுத விடவில்லை.

    அவர்களின் நடத்தையால் வருத்தமடைந்த என் மகள் வீட்டிற்கு திரும்பி வந்து தன் அறைக்குச் சென்றாள். நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    நான் வீடு திரும்பியபோது, என் மகள் தூக்கில் தொங்குவதை கண்டேன்" என்று தெரிந்தார். பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இமாச்சல் பிரதேசம் மாநிலம் குல்லு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலச்சரிவில், குலுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 6 பேர் இறந்தனர்.

    ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் ஜாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குலு துணைத் தலைவர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

    • பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
    • நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன.

    பீகார் மாநிலத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பற்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தற்போது முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடைய ராஷ்டிரிய ஜனதா தளம்  இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு கூட்டணிக்குமிடையில் இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, "நிதிஷ் குமாரின் ஆட்சிக் காலத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் ஆகியவை ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன. இன்று, பீகாரின் ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், தண்ணீர், மருந்துகள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்த பிரதமர் மோடி பாடுபட்டுள்ளார்.

    1990 முதல் 2005 வரை பீகாரில் லாலு யாதவ் அரசு என்ன செய்தது? மாநிலம் முழுவதும் கால்நடை தீவன ஊழலை நடத்தியதன் மூலம் நாட்டிலும் உலகிலும் பீகாரை லாலு யாதவ் அரசு அவமானப்படுத்தியது. பீகார் வரலாற்றில் அவரது அரசு எப்போதும் 'காட்டு ராஜ்ஜியம்' என்று அழைக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • ஜய் கவானே மற்றும் ஸ்ரீராம் சகடே என்ற அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
    • இன்று காலை குடி பத்வா மற்றும் ரம்ஜான் ஈத் கூட்டுக் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

    மகாராஷ்டிரத்தில் மசூதியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் அமைந்துள்ள அர்த்தமசாலா கிராமத்தில் உள்ள ஒரு மசூதியில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வெடித்துச் சிதறியது.

    இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும் மசூதியின் ஒரு பகுதி சேதமடைந்தது. சம்பவம் குறித்து கிராமத் தலைவர் அளித்த புகாரை அடுத்து அங்கு போலீசார் விரைந்தனர்.

    பின்னர் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு மற்றும் தடயவியல் குழுவும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இருவர் ஜெலட்டின் குச்சிகளை உள்ளே வைத்துவிட்டு சென்றது தொடர்பான ஆதாரங்கள் சிக்கன. இதைதொடர்ந்து விஜய் கவானே மற்றும் ஸ்ரீராம் சகடே என்ற அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

     

    இந்த சம்பவம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய ஒரு கிராமவாசி, இந்த கிராமத்தில் பண்டிகைகளை ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் உள்ளது

    இந்துக்கள் பண்டிகையான குடி பத்வா பண்டிகையின் போது, மசூதிக்கு அருகிலுள்ள ஹஸ்ரத் சையத் பாட்ஷா தர்காவிற்கு இந்துக்கள் வருகை தருவர்.

    இன்று காலை குடி பத்வா மற்றும் ரம்ஜான் ஈத் கூட்டுக் கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி மசூதியை வெடிக்கச் செய்ய முயன்றதாக தெரிவித்தார். இருப்பினும் கிராமத்தினர் ஒன்றிணைந்து மசூதியின் சேதங்களை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

    • மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
    • பிரசவத்தின்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் 50 வயது பெண் ஒருவர் தனது 14 வது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டம் பில்குவாவில் உள்ள பஜ்ரங்புரியில் வசிப்பவர் இமாமுதீன். இவரது 50 வயது மனைவி குடியா. இவர்களுக்கு 13 குழந்தைகள். மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.

    இந்நிலையில் 50 வயதில் மீண்டும் கருத்தரித்த குடியா, கடந்த வெள்ளிக்கிழமை 14வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனை செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.

     

    அதன்பின் குடியாவும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

    இமாமுதீனின் மனைவிக்கு 14வது குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், தொலைதூர இடங்களிலிருந்தும் மக்கள் இமாமுதீனையும் அவரது 14 குழந்தைகளை கொண்ட குடும்பத்தையும்  வருகிறார்கள்.  

    ×