search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்
    • 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்

    ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை கண்டுபிடித்து, சுமார் ₹300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

    ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒசியான் மற்றும் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

    அதில், சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் இதுவரை ₹ 4,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது.
    • ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    பா. ஜனதாவின் 400 இடங்களுக்கு மேல் என்ற இலக்கின் காரணம், அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற விரும்புவதற்காகத்தான். அதன் மூலம் அவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கவும், இடஒதுக்கீடு இல்லாம இந்தியாவை உருவாக்கவும் விரும்புகிறார்கள்.

    பிரதமர் மோடி, அமித் ஷா நாட்டின் பூர்வீகக்காரர்களாகிய தலித்கள், எஸ்டி-கள் மற்றும் ஓபிசிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் செய்கிறார்கள். இந்த தேர்தலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கான களமாக மாற்ற அவர்கள் (பாஜக) முடிவு செய்துள்ளனர்.

    ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது. ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-க்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்க பாஜக முயற்சிக்கிறது.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என முணுமுணுக்கப்படுகிறது.
    • அவர்களால் மூன்று இலக்க இடங்களை பிடிக்க முடியாது அல்லது ஆட்சி அமைப்பதற்கான கதவை தட்ட முடியாது.

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள கோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. துணை முதல்வராக இருக்கும் நபரிடம் 2.5 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றம் ராஜஸ்தானில் இதே ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    கர்நாடகா மாநிலத்தின் மாடலான ஓபிசி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததை மற்ற இடங்களிலும் நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை மாற்றி மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி தலித் மற்றும் ஓபிசிக்களின் இடஒதுக்கீடு பயனை பறிக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி ராமர் கோவிலுக்கு எதிராக மட்டும் இருக்கவில்லை. கும்பாபிஷேகத்திற்கான அழைப்பையும் நிராகரித்தது.

    கோலாபூர் கால்பந்து முனையம் என அறியப்படுகிறது. 2-வது கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி இரண்டு சுய கோல்களை (Self-Goals) அடித்துள்ளபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2-0 என முன்னிலை வகிக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

    3-வது கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அதுபோன்று கோல் அடிப்பார்கள் என நம்புகிறேன். அதன்மூலம் இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்படும். அடுத்தடுத்த கட்ட தேர்தல்களில் இந்தியா கூட்டணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 37 திரும்ப கொண்டு வரப்படும், சிஏஏ ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியுமா?, அப்படி செய்தால், அதன் பின் விளைவு என்ன என்பது அவர்களுக்கு தெரியுமா?.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என முணுமுணுக்கப்படுகிறது. அவர்களால் மூன்று இலக்க இடங்களை பிடிக்க முடியாது அல்லது ஆட்சி அமைப்பதற்கான கதவை தட்ட முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் வாய்ப்பு பெற்றால் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு பிரதமர் என்ற திட்டத்தை வைத்துள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்தது
    • பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்

    பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை படை பறிமுதல் செய்தது

    கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுதாகர் சார்பில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதாக கூறப்படும் ₹4.8 கோடியை ஏப்ரல் 24 அன்று பறக்கும் படை பறிமுதல் செய்தது.

    இதனையடுத்து பாஜக வேட்பாளர் சுதாகர் மீது மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் தேர்தல் அதிகாரி முனிஷ் முட்கலை பாஜக வேட்பாளர் சுதாகர் தொடர்புகொண்டு பேசியதாகவும் பிடிபட்ட பணத்தை விடுவிக்கும்படியும், வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி பணத்தை விடுவிக்க சுதாகர் உதவி கோரியதாகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முனிஷ் மௌத்கில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து மதநாயக்கனஹள்ளி போலீசார் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    • நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்.
    • பள்ளிக்கூடங்களை கட்டினார், இலவச மின்சாரம் வழங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால். இவரது மனைவி சுனிதா. கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அக்கட்சியின் தலைவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று கிழக்கு டெல்லி தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில் "நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும். உங்களடைய முதல்வர் (அரவிந்த கெஜ்ரிவால்) சிங்கம். அவரை உடைந்து போக செய்ய முடியாது. அவர் யாருக்கும் தலைகுனியமாட்டார். கெஜ்ரிவால் பள்ளிக்கூடங்களை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். மொகல்லா கிளினிக் தொடங்கினார். இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    நாளை மேற்கு டெல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

    • அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள்.
    • ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள்.

    பிரியங்கா காந்தி இன்று குஜராத் மாநிலம் தரம்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களுடைய யுக்தி.

    அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களைப் பலவீனப்படுத்தவும், நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் அரசியலப்பை மாற்ற நினைக்கிறார்கள்.

    தேர்தலின்போது சூப்பர்மேன் போன்று மேடைகளில் அறிமுகம் ஆகிறார். ஆனால், அவர் பணவீக்கம் மேன் என்பதை மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த முடியும் என பா.ஜனதா தலைவர்கள் அவர் வலிமையான நபராக முன்நிறுத்த விரும்புகிறார்கள். பின்னர் ஏன் அவரால் அதேபோன்ற வறுமையை ஒழிக்க முடியவில்லை.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    • வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி.
    • மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி.

    2023-24-ல் வெங்காயத்தின் உற்பத்தி அதற்கு முந்தைய காலக்கட்டத்தை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததாலும், வெளிநாட்டிலும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.

    இந்த நிலையில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மொரிசியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    இந்த வெங்காயம் முற்றிலும் ஏற்றமதியைச் சார்ந்தது. வழக்கமான வெங்காயத்தை விட இந்த வெங்காயம் அறுவடை செய்வதற்கு அதிக செலவாகும்.

    • காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
    • நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்

    உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,

    "காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.

    அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.

    நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

    நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.

    'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
    • உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

    இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.

    அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:-

    ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். மோடி, அமித் ஷா ஆகிய இருவரும விற்பனையாளர்கள். அப்படி என்றால் வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இரண்டு வாங்குபவர்கள். இப்படித்தான் நாடு வளர்ச்சி அடையும்?.

    அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயை கோடீஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்துள்ளனர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
    • ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தென் மாநிலங்களில் தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு முயற்சிகளை கையாண்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அடிக்கடி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.

    இதில் கேரள மாநிலத்தில் 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் போட்டியிட்டன. இந்த முறை கேரளாவில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சுரேஷ்கோபி உள்ளிட்ட பல பிரபலங்களை பாரதிய ஜனதா களம் இறக்கியது. மேலும் மற்ற கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் சிலர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர். இதில் முன்னாள் முதல்-மந்திரிகள் ஏ.கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, கருணாகரன் மகள் பத்மஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

    இதனை இடது சாரி கூட்டணி குறை கூறி வந்த நிலையில், அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான ஈ.பி.ஜெயராஜன், பாரதிய ஜனதாவில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணம் அவர், தற்போது தேர்தல் நடைபெறும் சூழலில் பாரதிய ஜனதாவின் கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து பேசியது தான். திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.

    இந்த சந்திப்பு விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயராஜன், நான், எல்.டி.எப். கன்வீனர். என்னை சந்திக்க பலர் வருகிறார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா முக்கிய தலைவர்கள் அனைவரும் என்னை சந்திக்க வந்துள்ளனர். ஜவடேகருடனான சந்திப்பு தனிப்பட்டது. எனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி, இந்த சந்திப்பு, முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரிந்தே நடந்துள்ளது. கம்யூனிஸ்டுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் புனிதமற்ற தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் ஜெயராஜனுக்கு ஆதரவாக, முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஜவடேகரை சந்திப்பதில் தவறில்லை. இங்கு தேர்தல் மூலம் பா.ஜனதாவுக்கு எதுவும் கிடைக்காது. ஈ.பி.ஜெயராஜன் மீதான குற்றச்சாட்டுகள், கம்யூனிஸ்டு எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதி என்றனர். இருப்பினும் ஜெயராஜன் இன்னும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன்.
    • அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கான இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்.

    காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பார்ளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    அப்போது அமேதி, ரேபரேலி தொகுதியில் யாரை நிறுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மேலும், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதி வேட்பாளர்களுக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆலோசனை முடிந்து வேட்பாளர்கள் பெயர் என்னிடம் வரும்போது, அதற்கான அறிவிப்பாணையில் கையெழுத்திடுவேன். அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்

    ராகுல் காந்தி தொகுதி மாறியதாக அடிக்கடி கூறப்படுகிறது. வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் எத்தனை முறை தொகுதிகள் மாறினார்கள் என்பதை என்னிடம் தெரிவிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி பாய்ந்தோடும் ஆறு போன்றது. கட்சியில் வளர்ச்சி பெற்று பின்னர் வெளியேறிய சிலரால் பாதிக்கப்படாது.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    ×