என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
    • அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

    இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.

    • யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
    • ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தம்பி கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரப் பிரதேசம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கொய்ராவ்னா பகுதியை சேர்ந்தவர் கீதா தேவி. இவரது 22 வயது மகளுக்கு யோகேஷ் என்பவருடன் வரும் மே மாதம் திருணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தனது மகளையும், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளையும் காணவில்லை என கீதா தேவி இன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

    யோகேஷின் இளைய சகோதரன் ராஜா தனது மகளை கடத்திச் சென்றதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
    • அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் மறுவாழ்க்கைக்கு உதவுவதாக பல ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. இதனால் சிலருக்கு நன்மை நடந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கிறது.

    அதே போல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டேட்டிங் செயலில் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த வாலிபர் காதலை தேடும் முயற்சியில் தனது வாழ்நாளுக்காக சேமித்து வைத்த பணத்தை இழந்தள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    டேட்டிங் செயலில் சுயவிவரத்தை பதிவு செய்த நெய்டாவைச் சேர்ந்த தல்ஜித் சிங் என்பவருக்கு அனிதா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்த இவர்கள் நாளடைவில் இருவருக்கும் இடையேயான பேச்சும், நெருக்கமும் அதிகரித்தது.

    ஒரு கட்டத்தில் தல்ஜித் சிங்கின் நம்பிக்கையை பெற்ற அனிதா, பங்குச்சந்ததை மூலம் பெரும் லாபம் ஈட்டுவது குறித்து தகவல்களை பகிர்ந்து 3 நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலில் ரூ.3.2 லட்சம் முதலீடு செய்து சில மணி நேரங்களுக்குள் ரூ.24,000-ஐ சிங் சம்பாதித்தார். இதனால் அனிதா மீதான நம்பிக்கை சிங்கிற்கு வலுவடைந்து அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.

    இதனை தொடர்ந்து தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ.4.5 கோடியை முதலீட்டில் மாற்றினார். மேலும் அனிதாவின் ஆலோசனையின் பேரில், சிங் ரூ.2 கோடி கடனை எடுத்து அதையும் முதலீடு செய்தார். மொத்தம் ரூ.6.5 கோடியை 30 வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.

    இதையடுத்து முதலீடு செய்யப்பட்ட தொகையில் 30 சதவீதத்தை திருப்பி தரும்படி அனிதாவிடம் சிங் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சிங்குடனான தொடர்பை அனிதா துண்டித்துள்ளார். மேலும் அனிதா தெரிவித்ததாகக் கூறப்படும் 3 நிறுவனங்களில் 2 துண்டிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சிங் இச்சம்பவம் தொடர்பாக நொய்டா செக்டர் 36-ல் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் பணம் மாற்றப்பட்ட கணக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் சிசேரியன் முறையில் குழந்தை பெற்றெடுத்தார்.
    • பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது

    உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது மருத்துவரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    லக்னோவில் 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண் ஷி மெடிக்கல் கேர் என்ற மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்தார். அதன்பின் பல ஆண்டுகளாக சந்தியாவிற்கு தீராத வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் சந்தியா எடுத்த எக்ஸ்ரேயில் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26 ஆம் தேதி அவரது வயிற்றிலிருந்த கத்திரிக்கோலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    இதனையடுத்து தனது மனைவி சந்தியாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், 17 ஆண்டுகளாக தனது மனைவி வேதனைப்பட்டதற்கு மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வாலின் அலட்சியம் தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

    • இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
    • சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரின் பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் சர்மா (30 வயது). இரண்டு வருடங்களுக்கு முன்பு பிங்கி (26 வயது) என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் வேறொரு ஆணுடன் பிங்கி பேசுவதற்கு கணவர் அனுஜ் சர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிங்கி அனுஜின் காபியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

    அதைக்குடித்ததும் அனுஜின் உடல்நிலை மோசடமைந்தது. அவர் கட்டௌலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

    இந்நிலையில் அனுஜின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பிங்கி மீது காலவத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பிங்கிக்கு திருமணத்தின் முன்பே வெவேறு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும் அவரின் விருப்பத்துக்கு மாறாக அனுஜ் உடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர். 

    • அதை வீடியோ பதிவு செய்த அன்சாரி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
    • இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள அப்பெண்ணை அன்சாரி வற்புறுத்தியுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்ய வற்புறுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதாக இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூர் பகுதியில் ஹர்தியா ஜாமின் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசாத் அன்சாரி (23 வயது).

    இவர் பாலியா பகுதியை சேர்ந்த முதலாமாண்டு பயின்று வரும் 19 வயது கல்லூரி மாணவியை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி கடந்த டிசம்பர் 17 அன்று ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    அதை வீடியோ பதிவு செய்த அன்சாரி பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் தனது தேர்வு ரிசல்ட்டை பார்க்க சென்றுகொண்டிருந்தபோது அன்சாரி அவரை மிரட்டி மும்பைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள அப்பெண்ணை அன்சாரி வற்புறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அப்பெண் உத்தரப் பிரதேச போலீசில் அளித்த புகாரை அடுத்து நேற்று அன்சாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உத்தரபிரதேச சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்டதாகவும், மருத்தவ அறிக்கையை பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது. 

    • பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போஜ்பூரில் காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். விசாரணையில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக ஏசிபி ஞான பிரகாஷ் கூறினார்.

    பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும்.
    • நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக, சாலைகளில் தொழுகை நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மீரட் எஸ்.பி. ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், தொழுகைகளை உள்ளூர் மசூதிகளில் நடத்த வேண்டும் என்றும், யாரும் சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். எச்சரிக்கையை மீறுபவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சிங் சவுத்ரி கூறுகையில்,

    தனிநபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை பெறுவது கடினமாகிவிடும்.

    நீதிமன்றத்தால் தனிநபர்கள் விடுவிக்கப்படும் வரை அத்தகைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் விபின் தடா கூறுகையில், மாவட்ட மற்றும் காவல் நிலையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பதட்டம் மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அமைதியைப் பேணுவதற்கும், வரவிருக்கும் பண்டிகைகளை சீராகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாகம் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது.
    • மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.

    இதனால் வேறு வழியில்லாமல் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

    நேற்று கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.

    திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்து சென்றார்.

    • அலிகார் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில், சிறிய ஜூஸ் கடை நடத்தி வருபவர் முகமது ரகீஸ்.
    • தினசரி ரூ.400 வருமானத்தில் குடும்பம் நடத்தும் அவருக்கு இது அதிர்ச்சியையும், தீவிர மன உளைச்சலையும் தந்தது.

    அலிகார்:

    உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில், சிறிய ஜூஸ் கடை நடத்தி வருபவர் முகமது ரகீஸ். அவரது வீட்டு முகவரிக்கு ஒரு வருமான வரி நோட்டீஸ் வந்தது. அதில் "வருமான வரி பாக்கி ரூ.7.79 கோடியை 10 நாட்களில் செலுத்தவும்" என்று கூறப்பட்டு இருந்தது.

    தினசரி ரூ.400 வருமானத்தில் குடும்பம் நடத்தும் அவருக்கு இது அதிர்ச்சியையும், தீவிர மன உளைச்சலையும் தந்தது. இதில் இருந்து மீளுவதற்காக அவர், தற்போது சட்ட ஆலோசகரை அணுகி உள்ளார்.

    • ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது.
    • உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத்.

    இதற்கிடையே, மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 8 ஆண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று அரசு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை விமானம் மூலம் லக்னோ புறப்பட்டார்.

    ஆக்ராவின் ஹிரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக ஹிரியா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அதன்பின், கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதே விமானத்தில் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.

    விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டபோது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
    • இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"

    உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.

    இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

    இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    ×