என் மலர்
Recap 2024
- ஆர்சிபி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார்.
ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரபலமான கிரிக்கெட் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் எப்போது பல சுவாரஸ்யமான மற்றும் மிரட்டலான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் 2024-ம் ஆண்டிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் சிறப்பான சம்பவங்கள் இந்த செய்தியின் மூலம் காணலாம்.
ஐ.பி.எலில் ரசிகர்கள் அதிகம் கொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய கேப்டன்களின் மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணியாக பார்க்கபடும் அணி மும்பை இந்தியன்ஸ். அந்த 2024-ம் ஆண்டில் கேப்டனான ரோகித் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் நீக்கி ஹர்திக் பாண்ட்யாவை நியமித்தனர். இது பெரிய அளவில் வெடித்தது. இதனால் சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார். இதனையடுத்து டி20 உலககோப்பை இறுதிபோட்டியில் சிறப்பாக விளையாடியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு கேலி செய்தவர்களை தனக்கு புகழ் பாட வைத்தார்.
2024-க்கு முன்பு ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணி அடித்திருந்த அதிகபட்ச ரன்களான 263 ரன்களை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஆர்.சி.பி. அணியின் சாதனையை முறியடித்தது.
ஐபிஎல் 2024-ன் 57-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. எல்எஸ்ஜி பிளேஆஃப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் சன்ரைசர்ஸ்-க்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் போட்டியின் முடிவு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது, ஏனெனில் ஐதராபாத் 62 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே. எல் ராகுல் மீது கோபமடைந்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடமும் பேசிய வீடியோ வைரலானது. இதனால், கிரிக்கெட் வல்லுநர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் வரம்பிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
ஒரே பெயர் குழப்பத்தால் தவறுதலாக ரூ.20 லட்சத்துக்கு ஷஷாங் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்ததாக பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு பதில் தரும் விதமாக குஜராத் அணிக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அவுட் ஆன நேரத்தில் பஞ்சாப் அணிக்காக நிதானத்துடன் ஆடிய ஷஷாங் சிங், 61 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக்கான், உள்ளிட்ட 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா ஐசிசிக்கு தலைவர் ஆனது சமூகவலைத்தளங்களில் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை அதிசயமாக அடைந்தது. ஆர்சிபி தனது முதல் எட்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று முதல் அணியாக மாறியது. அதனை தொடர்ந்து ஆறு வெற்றிகளைப் பெற்றது. இது ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் இரண்டாவது நீண்ட தொடர் வெற்றியாகும்.
- இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் 2024-ம் ஆண்டில் உயிரிழந்தார்.
- அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.
நியூசிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக விளங்கிய மார்டின் குரோ, நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

மார்டின் குரோ 1992 உலக கோப்பை போட்டிகளில் மிக சிறப்பாக தன் அணியை வழிநடத்தி, தன் அணி அரையிறுதி போட்டிக்கு இடம்பெற செய்தார். அவரின் மரணத்துக்கு உலகில் உள்ள பல விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆன கிரஹாம் தோர்ப் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஸ் பாகர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

அதிகாலையில் ஜோஸ் பாகர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாகருக்கு என்ன நடந்தது என்ற தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் நட்சத்திர கூட்டைப்பந்து விளையாட்டு வீரராக வளம்வந்தவர் லாக்கர்ஸ் அணியின் கோபி பிரையன்ட் இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மகள் ஜியானாவும் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பிரைன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா பிரைன்ட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.

இந்தோனிசியாவில் 2 எஃப்.எல்.ஒ. பாண்டுங் மற்றும் எஃப்.பி.ஐ. சுபாங் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில் திடிரென மின்னல் தாக்கி 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்பவர் உயிரிழந்தது.

இளம் ரக்பி வீரரான கோகில சம்மந்தபெரும (28) கோர விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.

இது போன்ற மரணங்கள் அந்தந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர்.
- ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.
2024-ம் ஆண்டு முழுவதும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களால் ஏற்பட்ட சில டாப் உணர்ச்சிமிக்க தருணங்களைப் பற்றி பார்ப்போம்.
2024-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஜாக்பாட் என்று சொல்லலாம், அந்தளவிற்கு அதிகமான பதக்கங்களையும், சாம்பியன் பட்டங்களையும் விளையாட்டு வீரர்கள் வென்றுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி பெருமை சேர்த்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ஐன் நகரில் ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயதான ஷர்வானிகா என்ற சிறுமி, யு-8 கிளாசிக்கல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் யு-8 ரேபிட் பிரவு மற்றும் பிளிட்ஸ் பிரிவில் தங்கம் பதக்கமும் பெற்றிருந்தார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், மெஹுலி கோஷ் ஜோடி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.
குரோஷியா நாட்டில் நடைபெற்ற ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் அமன் ஷெராவத் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்திருந்தார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தாய்லாந்தை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஹங்கேரியில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளின் அணி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி அதிலும் சாம்பியன் பட்டம் பெற்றார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று சாதித்தார்.
பாரிஸில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதன் பின்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கம் வென்று சாதித்தனர். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

57 கிலோ மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் போட்டியிட்டு வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் சுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே வெண்கல பதக்கம் வென்று சாதித்தார். இது அவரின் அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும்.
அதே போல் பாரீசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல்(உயரம் தாண்டுதல்), பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதில் தொடர்சியாக பாராலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை மாரியப்பன் தங்கவேல் பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்திருந்தார்.
பி.சி.சி.ஐ சார்பில் பிளேயர் ஆஃப் தி இயர் விருது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருதை முகமது ஷமி (கிரிக்கெட்), கிருஷ்ணன் பகதூர் பதக் (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரித்து நெகி (கபடி), நஸ் ரீன் (கோ-கோ), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), ஈஷா சிங் (துப்பாக்கி சுடுதல்), உள்ளிட்ட 27 பேருக்கு சிடைத்தது.
மேலும் துரோணாச்சார்யா விருதை லலித்குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்) ஆகியோருக்கு கிடைத்தது. துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை மஞ்சுஷா கன்வர் (பாட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
2019-ம் ஆண்டிலிருந்து 2023-ம் ஆண்டுவரை டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முகமது ஷமி, அஸ்வின், பும்ரா, கில், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பெற்றுக்கொண்டனர்.
கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு விளையாட்டு துறையில் அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக தெலங்கானா அரசு டி.எஸ்.பி. பொறுப்பு வழங்கியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்.சி.பி. அணி டபள்யூ.பி.எல். கோப்பை தட்டி சென்றனர்.

பா.ஜ.க. எம்.பி-யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டம் நடத்தியது, 100 கிராம் எடையை காரணம் கூறி பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது, இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு வினேஷ் போகத் தனது ஓய்வை அறிவித்தார்.
மத்திய அரசு சார்பில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருக்கான பெயர் பட்டியல் அண்மையில் வெளியானது இதில் பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டு முறை வெண்கலம் வென்ற மனு பாக்கர் பெயர் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ஆடவருக்கான யு(Under)-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
- கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார்கள் பட்டியல் வெளியானது.
- ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனை.
ஒரே ஆண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற சாதனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது.
இதுதவிர கடந்த 40 ஆண்டுகளாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் வருடாந்திர விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டாடா பன்ச் நிறுவனம் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை படைத்துள்ளது.

கடந்த 2024 ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் 2.02 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் 1.90 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடலும், நான்காவது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா மாடலும் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஐந்தாவது இடம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் பெற்றுள்ளது.
2024 இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் டாப் 5 பட்டியல்:
டாடா பன்ச்: எஸ்.யு.வி. பிரிவில் விற்பனை செய்யப்படும் டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 02 ஆயிரத்து 030 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மாருதி சுசுகி வேகன் ஆர்: மாருதியின் ஹேச்பேக் மாடலான வேகன் ஆர் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 855 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மாருதி சுசுகி எர்டிகா: இந்திய சந்தையில் பிரபல எம்.யு.வி. மாடல்களில் ஒன்றான எர்டிகா கடந்த ஆண்டு 1 லட்சத்து 90 ஆயிரத்து 091 யூனிட்கள் விற்பனையானது.
மாருதி சுசுகி பிரெஸ்ஸா: மாருதி சுசுகியின் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு 1 லட்சத்து 88 ஆயிரத்து 160 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா: இந்திய சந்தையில் பிரபல எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்று கிரெட்டா. இந்த மாடல் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 919 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.
- 2024 ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது.
- அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து வெற்றியின் ஆட்டத்தை தொடங்கி வைத்தது.
2024 ஆம் ஆண்டு பல திரைப்படங்கள் வெளியானது. அதில் பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது சில திரைப்படங்கள் வெற்றியடைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வெளிவந்து வெற்றியின் ஆட்டத்தை தொடங்கி வைத்தது. அதேப்போல் 2024 ஆம் ஆண்டு பல படங்களில் பார்ட் 2, 3 என வெளிவந்து பாக்ஸ் ஆபிசை நிறப்பியது. அந்த திரைப்படங்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
அரண்மனை 4
சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் சுந்தர் சி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது அரண்மனை 4 திரைப்படம். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் வேட்டையாடியது. இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
புஷ்பா 2 தி ரூல்
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் வெளியானது புஷ்பா 2 திரைப்படம். இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தி மொழியில் அதிகம் வசூலித்த திரைப்பட பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. திரைப்படம் இதுவரை 1800 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும்.
பூல் புல்லையா 3
அனீஸ் பஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், வித்யா பாலன், மாதுரி திக்ஸித் மற்றும் டிரிப்டி திம்ரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பூல் புல்லையா 3 திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. திரைப்படம் இதுவரை உலகளவில் 423 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்
ஸ்ரீ 2
நிரன் பாட் எழுத்தில் அமர் கௌஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரதா கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஸ்ரீ 2 திரைப்படம். இப்படம் ஒரு நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படமாகும், இப்படம் மாடாக் சூப்பர் நேட்சுரல் யூனிவர்ஸ்-இன் 4 படமாகும். இப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.இப்படம் இதுவரை உலகளவில் 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
டிமான்ட்டி காலனி 2
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது டிமான்ட்டி காலனி 2 திரைப்படம். இப்படம் ஒரு ஹாரர் திரைப்படமாக அமைந்தது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் 85 கோடி ரூபாய் வசூலில் பெற்று மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது விடுதலை 2 திரைப்படம். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2024 சிறந்த மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.
- ஸ்மார்ட்போன் பிரான்டுகள் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்தன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னணி ஸ்மார்ட்போன் பிரான்டுகள் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்தன. மிட் ரேஞ்ச் பிரிவில் ஏராளமான மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 2024 சிறந்த மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்..
மோட்டோ எட்ஜ் 50 நியோ:
மிட் ரேஞ்ச் பிரிவில் மோட்டோ பிரான்டின் எட்ஜ் 50 நியோ சக்திவாய்ந்த பிராசஸர், சிறப்பான கேமரா சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வீகன் லெதர் பேக் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் பிரீமியம் தோற்றத்துடன், சீரான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டுள்ளது.

நத்திங் போன் 2a பிளஸ்:
நத்திங் பிரான்டின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக 2a பிளஸ் விற்பனைக்கு வந்தது. தனித்துவ டிசைன், சக்திவாய்ந்த மீடியாடெக் டிமென்சிட்டி 7350 ப்ரோ 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இத்துடன் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.
போக்கோ F6:
போக்கோ பிரான்டின் F சீரிஸ் மாடல்கள் மிட் ரேஞ்ச்-இல் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்டிருக்கின்றன. அந்க வகையில் போக்கோ F6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் உள்ளது. இந்த பட்ஜெட்டில் இத்தனை சக்திவாய்ந்த பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக போக்கோ F6 தனித்து நிற்கிறது.

விவோ T3 அல்ட்ரா:
விவோ நிறுவனம் மிக மெல்லிய டிசைன் மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனாக விவோ T3 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200+ பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 4:
ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை நார்டு சீரிசில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த நார்டு 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன், ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 பிராசஸர், 256 ஜிபி மெமரி, சிறப்பான கேமரா சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
- 2024-ம் ஆண்டில் மொத்தம் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
- 150 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2024-ம் ஆண்டு அமைந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சுவாரசியமான போட்டிகளை 2024-ம் ஆண்டில் கொடுத்திருந்தது. குறிப்பாக இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
2024-ம் ஆண்டில் மொத்தம் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 150 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2024-ம் ஆண்டு அமைந்துள்ளது.
இதில் இங்கிலாந்து 9 வெற்றிகளுடன் கடந்த ஆண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணியாக மாறியதோடு, அந்த அணி கடந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 823 ரன்கள் பெற்று, 2024-ல் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ரன்கள் குவித்த அணியாகவும் சாதனை செய்தது.
இங்கிலாந்தினை அடுத்து அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்தியாக 8 வெற்றிகளுடன் நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் 6 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.
இதில் தென் ஆப்ரிக்கா ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதியான முதல் அணியாகவும் உள்ளது.
வங்கதேச அணி 2024-ம் ஆண்டிற்கு சிறந்த தருணமாக மாறியது. வங்கதேச வீரர்கள் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியினைப் பதிவு செய்ததோடு, பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியினையும் பதிவு செய்தது.
இதேபோல ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தியாவில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கையில் முதல் முறையாக இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
2024-ம் ஆண்டு, டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. அவ்வணிகளினால் கடந்த ஆண்டில் எந்த டெஸ்ட் வெற்றிகளையும் பதிவு செய்ய முடியவில்லை.
மறுமுனையில் 2024-ல் இந்திய, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைவான இன்னிங்ஸ் ரன்களை பதிவு செய்துள்ளது. இதில் இலங்கை தென் ஆப்பிரிக்காவுடன் 42 ரன்களையும் இந்தியா நியூசிலாந்துடன் 46 ரன்களையும் தென் ஆப்பிரிக்கா இந்தியாவுடன் 55 ரன்களையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டில் பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா (71) உள்ளார். பேட்டிங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் (1556 ரன்கள்) உள்ளார். அதிக சராசரியில் (74.92) இலங்கையின் இளம் நட்சத்திரமான கமிந்து மெண்டிஸ் உள்ளார்.
- 2024 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
- டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன்.
இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன். 1944-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பிறந்த இவர் இந்திய விமானப் படையில் (IAF) இணைந்து, 1964 முதல் 1974 வரை பணியாற்றினார். இதன்பிறகு 'டௌரி கல்யாண வைபோகமே' என்ற நாடகத்தில் குசேலர் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் டெல்லி கணேஷூக்கு திருப்புமுனையாக அமைந்தது. குசேலராக கணேஷின் நடிப்பு இயக்குநர் கே. பாலச்சந்தரின் கவனத்தை ஈர்த்தது.
டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'டெல்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

பவதாரிணி
தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடர்களுள் முக்கியமானவராக இருந்தார். இவர் இசை ஞானியான இளையராஜாவின் மகளாவார். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இவர் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா , கார்த்திக் ராஜா, தேவா மற்றும் பல இசையமைப்பாளர் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கயில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உயிரழந்தார்.
டேனியல் பாலாஜி
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து வில்லத்தனத்திற்கு பெயர் போனவர் டேனியல் பாலாஜி. 'காக்க காக்க' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'பொல்லாதவன்', 'வடசென்னை', 'பிகில்' போன்ற படங்களில் நடித்து இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மாரடைப்பு காரணமாக கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் காலமானார். இறப்பிற்குப் பிறகு இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லொள்ளு சபா சேஷூ
'மண்ணெண்ண வேப்பென வெளக்கெண்ண, யார் ஜெயிச்சா எனக்கென்ன' போன்ற நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் சேஷூ. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் பிரபலமானவர். 'வேலாயுதம்', 'பாரிஸ் ஜெயராஜ்' போன்ற படங்களில் மூலம் தன் நடிப்பில் முத்திரை பதித்தவர். அதுவும் அச்சச்சோ இவரா பயங்கரமான ஆள் ஆச்சே போன்ற நகைச்சுவை வசங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானார்.
இலவச திருமணம்,கல்வி ,மருத்துவம் என தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தவர் சேஷூ. உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.
நடிகை சி.ஐ.டி சகுந்தலா
சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா.
'சிஐடி சங்கர்', 'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'வசந்த மாளிகை' உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த செப்.17 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜாகிர் உசேன்:
இந்திய இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் பல்வேறு மொழி திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த தேநீர் விளம்பரம் wah taj மிகவும் பிரபலமடைந்தது.
தபேலா இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
ஷ்யாம் பெனகல்:
இந்திய சினிமாவில் சுயாதீன சினிமாவை உருவாக்கியதில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் ஷ்யாம் பெனகல் (90). ஷ்யாம் பெனகல் படங்கள் பல்வேறு ஜானர்களில் சமூக கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. தனது திரை வாழ்வில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் முத்திரை பதித்துள்ளார்.
இயக்குநர் ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக உயிரிழந்தார்.

எம்.டி.வாசுதேவன் நாயர்
கேரளாவின் பழம்பெரும் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், சிறு கதைகள், நாவல்கள், திரைக்கதை, இலக்கியம், பத்திரிகைத்துறை என மலையாள கலையுலகின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எம்.டி.வாசுதேவன். 91 வயதான இவர் கோழிக்கோடு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
- பிக்சல் 9 சீரிஸ் மாடல்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் பல்வேறு புது மாடல்களும், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் அடங்கும். மலிவு பட்ஜெட்டில் துவங்கி மிக அதிக விலை என பல்வேறு விலை பிரிவுகளில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.
இதில் கடந்த ஆண்டு வெளியான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

விவோ X200 ப்ரோ:
விவோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது ஸ்மார்ட்போன்களின் கேமரா தரம் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக விவோ X சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கேமரா சிறப்பாக இருப்பதை பயனர்களும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், விவோ நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த விவோ X200 ப்ரோ ஸ்மார்ட்போன் 2024 ஆண்டின் சிறந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அமைந்தது.
புகைப்படங்களை எடுக்க விவோ X200 ப்ரோ மாடலில் செய்ஸ் பிரான்டிங் கொண்ட 50MP கேமரா, 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிராசஸர், 16 ஜிபி ரேம், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 9 ப்ரோ XL:
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த பிக்சல் 9 ப்ரோ XL மாடலில் அதிநவீன, சக்திவாய்ந்த டென்சார் ஜி4 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS, வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா:
அதிவேகமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், மேம்பட்ட டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள், அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்:
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்ததில் டாப் எண்ட் ஐபோன் மாடல் தான் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ். மேம்பட்ட டிசைன், அதிவேக பிராசஸர், ஏ.ஐ. வசதிகளை வழங்கும் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் என ஏராளமான சுவாரஸ்ய அம்சங்களுடன் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.
- 2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வாங்கிய முக்கிய திரைப்படங்கள்
- இரண்டாம் உலகபோரின் திசையை மாற்றிய அணுஆயுத கண்டுபிடிப்பை பற்றி பேசுகிறது.
2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வாங்கிய முக்கிய திரைப்படங்கள்
சிறந்த படம் : ஓபன்ஹெய்மர்
கிரஸ்ட்டோபர் நோலன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த வெற்றி படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. விருதுகள் மட்டுமில்லாமல் வணிக ரீதியாக அந்த ஆண்டின் மிக பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்து குறிப்பிடத்தக்கது
ஓபன்ஹெய்மரின் உண்மை வாழ்க்கையை பின்தொடரும் இந்த படம், இரண்டாம் உலகபோரின் திசையை மாற்றிய அணுஆயுத கண்டுபிடிப்பை பற்றி பேசுகிறது. ஆராய்ச்சியாளர் ஓபன்ஹெய்மராக நடித்தது ஹாலிவுட் ஸ்டார் Cillian Murphy. இவர் ஏற்கனவே பல திரைப்படங்கள் மற்றும் புகழ் பெற்ற நெட்ப்ளிக்ஸ் தொடரான பீக்கி ப்லன்டர்ஸ்லில் நடித்து குறிப்பிடத்தக்கது.
அணுஆயுத கண்டுபிடிப்பின் முன் பின் என்று இருவேறு காலகட்டமாக காட்டப்படும் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை தான் இந்த முழுப்படமே. இந்த படத்தின் மூலம் கிரஸ்ட்டோபர் நோலனுக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதும், Cillian Murphyயுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதும் வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு. இந்த படத்தை தற்போது ஜியோ ottயில் கண்டுகளிக்கலாம் .
சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே: Anatomy of a Fall
2023ஆம் ஆண்டு வெளியான இந்த பிரெஞ்சு திரைப்படம், பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை குவித்தது.
Justine Triet எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளி வந்த இந்த படம், ஒரு courtroom டிராமா. கதாநாயகி சன்றா தன் கணவனை கொன்ற வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட. உண்மையில் அவள் கொன்றாலா இல்லை அது ஒரு விபத்தா என்பதே மீதி கதை.
சன்றாவின் மன போராட்டம் முக்கிய சாட்சியாக அவர்கள் மகனே வாக்கு மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்று டிராமா கலந்து விறுவிறுப்பாக செல்லும் திரைப்படமே இந்த அனாடமி ஒப் தி பால். இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்த்து ரசிக்கலாம்.
சிறந்த Adapted Screenplay: American Fiction
Erasure என்ற 2001 ஆம் வெளிவந்த நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமே அமெரிக்கன் பிக்சன். இந்த படத்திற்கு 2024கின் சிறந்த adapted screenplayவிற்கான ஆஸ்கார் வழங்கப்பட்டது அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மக்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை கார்ட் ஜெபர்சன் இயக்கி உள்ளார். அமெரிக்காவில் வாழும் ஒரு ஆப்ரிக்கா எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகள் மீது வரும் விமர்சனமும் அதனால் வரும் அவனுக்கு ஏற்படும் சம்பவங்களே இந்த படம்..
கதாநாயகன் எல்லிசன் அவனுடைய புத்தகங்களை விமர்சனத்திற்கு ஏற்ப மாற்றி எழுத நினைக்கிறான். அது ஆப்ரிக்கா மக்களை எவ்வாறு இந்த உலகம் பார்க்க நினைக்கிறது என்பதை நோக்கி செல்கிறது.. ஆப்ரிக்க மக்கள் மீது இருக்கும் திணிப்பு மற்றும் அடக்கு முறையை காமெடியாக கூறும் இந்த படம் ஒரு மஸ்ட் வாட்ச் என்றே சொல்லலாம். இந்த படம் தற்போது அமேசான் prime வீடியோவில் உள்ளது.
சிறந்த அனிமேடட் திரைப்படம்
தி பாய் அண்ட் தி ஹெரான் ஒரு ஜப்பானிய திரைப்படமாகும். இப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஹயோ மியாசகி என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தாய் இறந்தப்பின் மகன் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ஓர் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு டவரிடம் செல்கிறான் அதில் நுழைந்தப்பின் வேறு உலகத்திற்கு செல்கிறான். இதற்கு அடுத்து என்ன ஆனது என்பதை மையமாக வைத்து உருவான கதைக்களமே இப்படம். இத்திசரைப்படம் பல சரவதேச திரைப்படத விழாக்களில் விருதை வென்றது அது மட்டுமல்லாமல் சிறந்த 2024 அனிமெடட் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை இப்படம் வென்றது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பைக்குகளின் மேம்பட்ட மாடல்களும் இடம்பெற்றன.
- கடந்த ஆண்டு வெளியான பைக்குகளில் டாப் 10 பட்டியல்.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் முற்றிலும் புதிய மாடல்களும், ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பைக்குகளின் மேம்பட்ட மாடல்களும் இடம்பெற்று இருந்தன. அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான பைக்குகளில் டாப் 10 பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
பஜாஜ் பல்சர் என்125
பஜாஜ் நிறுவனம் பல்சர் என்125 மோட்டார்சைக்கிளை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 94,707 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 124.53சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 12 ஹெச்.பி. பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கவாசகி நிஞ்சா ZX-4RR
கவாசகி நிறுவனத்தின் டாப் எண்ட் மாடல்களில் ஒன்றாக இந்த பைக் கடந்த நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 9.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கில் 399 சிசி இன்லைன்-4 எஞ்சின் உள்ளது. இது 77 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.
ஹோண்டா எஸ்.பி. 125 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 125 மாடல் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 91,771 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 124சிசி சிங்கில் சிலிண்டர் ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் மைலேஜை சிக்கனப்படுத்தும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.

ஹோண்டா எஸ்.பி. 160 (2025)
2025 ஹோண்டா எஸ்.பி. 160 மோட்டார்சைக்கிள் கடந்த டிசம்பர் 24 ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 162.71 சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9.7 கிலோவாட் பவர், 14.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கவாசகி நிஞ்சா 1100SX
இந்திய சந்தையில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிஞ்சா 1100SX ரூ. 13.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதில் 1099சிசி இன்லைன் 4-சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 135 ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகள், பவர் மோட் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் ஸ்பீடு டுவின் 900
டிரையம்ப் நிறுவனம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்த புதிய ஸ்பீடு டுவின் 900 மாடலில் 900சிசி பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65 ஹெச்.பி. பவர், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 8.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ராயல் என்பீல்டு கோன் கிளாசிக் 350
இந்திய சந்தையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 2.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கிலும் கிளாசிக் 350 மாடலில் உள்ள எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிஜிட்டல் அனலாக் கன்சோல், டிரிப்பர் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கே.டி.எம். 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர்
கே.டி.எம். நிறுவனம் தனது 1290 சூப்பர் அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 22.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1301சிசி, டுவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஸ்லிப்பர் கிளட்ச், ரைடு மோட்கள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு பியர் 650
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பியர் 650 மோட்டார்சைக்கிளை கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 3.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 650சிசி பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் ஆர்
இந்திய சந்தையில் கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 22.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1350சிசி வி டுவின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 190 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
- சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
- பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.

இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அவ்வாறு சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெற தாமதம் ஏற்பட்டதை அடுத்து, முதல் நாளில் தகுதிச்சுற்று போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.

இரண்டாவது நாளில் முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்த கார் பந்தயத்தில் ஃபார்முலா 4 கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.
இந்த பார்முலா-4 கார் பந்தயத்தை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் கண்டு களித்தனர். இந்திய அணியின் முன்னள் கேப்டன் சவுரவ் கங்குலி, நடிகை த்ரிஷா, யுவன்சங்கர் ராஜா, நடிகர்கள் நாக சைதன்யா, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் உள்பட பலரும் வருகை தந்து பார்வையிட்டனர்.
கார் பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.