search icon
என் மலர்tooltip icon

    துருக்கி

    • வீடுகள் குலுங்கியதால் பலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
    • 190 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்தாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துருக்கியில் இன்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் அச்சம் நிலவிய நிலையில், சேதம் அதக அளவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.46 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.24) இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே என்ற நகரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. சிரியாவின் வடக்குப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் வீட்டிற்கு திரும்ப மக்கள் அச்சப்பட்டு தெருக்கள் மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது.

    நிலநடுக்கத்தால் 190 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 43 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர் என துருக்கி உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

    பயம் காரணமாக வீட்டிற்கு ஜன்னல் வழியாக குதித்ததில் பலர் காயம் அடைந்துள்ளதாக எலாஜிக் மேயர் தெரிவித்துள்ளார். மாலத்யாவில் இது போன்று 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    மொத்தம் நான்கு கட்டடங்கள் இந்த நிலநடுகத்தில் பாதிப்படைந்துள்ளது. எலாஜிக்கில் நான்கு பேர் சேதமைடைந்த கட்டடத்தில் இருந்து காயமின்றி மீட்கப்பட்டனர்.

    கடந்த வரும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் ஒன்று மலாத்யா. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    வடமேற்கு துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்னர். 

    • தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்
    • அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த துருக்கியை சேர்ந்த இளம் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பிரபலமடையத் தொடங்கியுள்ள தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் சோலோகேமி [SOLOGAMY] திருமண முறைப்படி கடந்த வருடம் [2023] தான் திருமணம் செய்து கொண்டதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்ட்டா பிரபலம் குப்ரா அய்குட் (வயது 26) அறிவித்திருந்தார்.

     

    இந்நிலையில் நேற்றய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி [Sultanbeyli] மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது.

    நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுட தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
    • துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி இஸ்ரேலிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்

    இஸ்ரேலிய  பயங்கரவாதம் 

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40,000 துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். போர் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் துருக்கி நாட்டின் அதிபர் இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

     

    இஸ்லாமிய நாடுகளின் கூட்டணி 

    நேற்று இஸ்தான்புல் அருகே கூட்டம் ஒன்றில் பேசிய துருக்கி அதிபர் தாயேப் எர்டோகன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவாகிக்கொண்டே வருகிறது. இஸ்ரேலின் இந்த திமிரையும், அடாவடித்தனத்தையும், இஸ்ரேலிய பயங்கரவாதத்ததையும் அடக்க ஒரே வழி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பதே என்று தெரிவித்துள்ளார்.

     

    ராஜாங்க உறவுகள் 

    மேலும் எகிப்து மற்றும் சிரியா உடனான ராஜாங்க உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் துருக்கி உள்ளது. இதன்மூலம், அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரே அணியாக நிற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லெபனான் மற்றும் சிரியாவும் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தில் உள்ளது என்று எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் எகிப்து அதிபர் துருக்கி சென்று எர்டோகனுடன் காசா போர் நிலவரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 12 வருடங்களுக்குப் பிறகு எகிப்து அதிபர் ஒருவர் துருக்கி வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

    உயிரிழந்த பெண்ணும் உலக அரசியலும்

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சமூக செயல்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்கப் பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

     

    துருக்கிய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஐசெனுா் எஸ்கி சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்நதவர். அவரது கொலைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த கொலைக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தனது பேச்சின்போது கண்டனம் தெரிவித்து ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது மத்திய கிழக்கில் முக்கிய நகர்வாக பார்க்கப்டுகிறது. 

    • பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
    • ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது.

    மும்பை:

    மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கிக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு பத்திரமாக தரைறக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது எக்ஸ் தளத்தில், "பிராங்பேர்ட் நகருக்கு சென்ற விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

    • இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.
    • ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார்.

    துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச் சாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கேன் அட்டால் கைதாகி சிறையில் உள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக் பேசும்போது, அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சியை "பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டார். உங்களுக்கு [ஆளும் கட்சி] ஆதரவாக இல்லையென்று கேன் அட்டாலை பயங்கரவாதி என்கிறீர்கள்.ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.

    இதனால் ஆளும் கட்சி எம்.பிக்கள் தரப்பில் கூச்சல் எழுந்தது. ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர் துணை சபாநாயகர் சொல்லச் சொல்ல கேட்காமல் எம்.பி.க்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அவர்களை பாது காப்பு அதிகாரிகள் விலக்கி விட்டனர். இந்த தாக்குதலில் பெண் எம்.பி. ஒருவர் உட்பட சிலருக்குக் காயம் ஏற்பட்டது. இதில் சிலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றமே களேபரமாகக் காணப்பட்டது.

    • இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
    • . ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது.

    இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் யூசுப், எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வரவுள்ள ரோபோட்கள், ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வாய்ப்பிருக்கிறதா? இதைப்பற்றி கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரமான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    முன்னதாகவே யூசுபின் ஒலிம்பிக் ஸ்டைலை வியந்து பாராட்டிய எலான் மஸ்க் தற்போது அவரது பதிவுக்கு உடனே பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எ திர்கால ரோபோட்கள் பலகையின் மையத்தைக் குறிவைத்தே சுடும் திறன் கொண்டிருக்கும். நான் இஸ்தான்புல் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று அது என்று பதிலளித்துள்ளார்.

    இவர்களின் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    • இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

     

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவரே இணையத்தின் நாயகன். ஆனால் அந்த 45 நொடிகளுக்காக தான் தனது வாழ்க்கை முழுவதும் உழைத்ததாக யூசுப் மனம் திறந்துள்ளார்.

     

     

    தனது வெற்றி குறித்து துருக்கி ஊடகத்தில் பேசியுள்ள யூசுப், எனக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவைப்பட்டதில்லை, எனது நண்பர்கள் கூட அது பற்றி என்னிடம் கேட்பதுண்டு. ஏன், பிற வீரர் வீராங்கனைகளும் என்னிடம் அதுபற்றி கேட்டனர். நான் அவர்களிடம் சொல்வதெல்லாம், நான் இயல்பாக இருக்க விரும்புகிறேன், நான் இயற்கையாகவே ஒரு ஷூட்டர் என்று தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் துருக்கியின் சிவில் பாதுகாப்புப் படையான Gendarmerie இல் பறிச்சி பெற்றவர் ஆவார். 2001 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடுதல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். ISSF உலக சாம்பியன் போட்டிகளில் 5 கோப்பைகளை வென்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

     

     

    மேலும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நிச்சயம் தான் தங்கம் வெல்வேன் என்றுநம்புவதாக யூசுப் தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் போட்டியின்போது ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்து மற்றொரு கையால் சுட்டது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு மட்டுமல்ல. அதன்மூலம் சுடும்போது அதிக பேலன்ஸை ஏற்படுத்தவும் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், யூசுப் இன்றைய இன்டர்நெட் சென்சேஷன் என்பது மிகையாகாது. 

    • நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.
    • விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.

    பிளாஸ்டிக் பாட்டிலை போட்டால், நாய்களுக்கான உணவு வழங்கும் எந்திரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரங்கள் போல, பல்வேறு பொருட்களை வினியோகிக்கும் வென்டிங் மெஷின் எந்திரங்கள் வெளிநாடுகளில் பிரபலம். அதுபோல நாய்களுக்கான உணவை வினியோகிக்கும் எந்திரங்கள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டு உள்ளது.


    இந்த எந்திரங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் போட்டால் மறுபுறம் நாய்களுக்கான உணவு சிறிதளவு மற்றும் தண்ணீர் வினியோகிக்கப்படும். இதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கழிவுகள் குறைவதுடன், பசியுடன் உள்ள தெருநாய்களும் பசியாறும்.

    விலங்கு நல ஆர்வலர் என்ஜின் கிர்கின், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து 2014-ல் இஸ்தான்புல்லில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வித்தியாசமான யோசனை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் இதுகுறித்த பதிவில், "மாற்றத்தை உருவாக்கும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புகிறேன்" என்று பதிவிட்டார். அவரது ஆதரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டு உள்ளனர்.

    • கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை சுமார் 3 ஆயிரம் பேர்.
    • நடவடிக்கை அங்காரா, அன்டால்யா, புர்ஸா, மெர்சின், ஒர்டு, இஸ்தான்புல் ஆகிய மாகாணங்களில் நடைபெற்றுள்ளது.

    துருக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆறு மாகாணங்களில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். உடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் வகையில் 30 பேரை கைது செய்துள்ளதாக துருக்கி உள்துறை மந்திரி அலியெர்லிகயா தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை அங்காரா, அன்டால்யா, புர்ஸா, மெர்சின், ஒர்டு, இஸ்தான்புல் ஆகிய மாகாணங்களில் நடைபெற்றுள்ளது.

    கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை சுமார் 3 ஆயிரம் பேர் ஐ.எஸ். பயங்கரவாத குழுவுடன் தொடர்ந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

    • எஸ்டோனியா அணியை 232-229 என வீழ்த்தி தங்கம் வென்றது.
    • ஏற்கனவே 2 முறை தங்கம் வென்ற நிலையில், 3-வது முறையாக தங்கம் வென்றது.

    துருக்கி:

    துருக்கியில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-3) நடைபெற்றது. இதில் காம்பவுண்ட் பிரிவில் 3 பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி எஸ்டோனியா அணியை 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி உலகக் கோப்பை ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிசில் நடந்த போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.

    • மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    துருக்கியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சமீபத்தில் முக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை இளமையாக காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.

    அதில், சிகிச்சைக்கு முன்பு அவரது தோற்றம் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவரது தோற்றம் குறித்த படங்கள் உள்ளன.

    புகைப்படங்களுடன் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நிபுணர்கள் வெளியிட்ட பதிவில், மைக்கேலுக்கு பேஸ் லிப்ட், நெக் லிப்ட், கீழ் கண் இமை உள்ளிட்ட இடங்களில் முடி மாற்று செயல்முறைகளை நாங்கள் செய்தோம். அவர் நம்பமுடியாத மாற்றத்தை பெற்றார். அதை நீங்கள் புகைப்படங்களில் காணலாம். நாங்கள் எப்போதும் முழுமையானதாக எடுத்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.

    இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றத்தை நம்ப முடியவில்லை என ஒரு பயனரும், துருக்கியில் அற்புதங்களை செய்கிறார்கள் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர். இதேபோல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட இந்த பதிவு விவாதமாக மாறி உள்ளது.

    • முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    சரக்கு விமானம் ஒன்று அதன் முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 விமானம் பின் தரையிறங்கும் கியரை மட்டுமே பயன்படுத்தி தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்தது.

    இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் தெரிவித்தார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணியின் போது விமானம் தரையிறங்கிய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

    ×