search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    X

    துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    • வீடுகள் குலுங்கியதால் பலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
    • 190 பேர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்தாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துருக்கியில் இன்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் அச்சம் நிலவிய நிலையில், சேதம் அதக அளவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.46 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.24) இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே என்ற நகரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. சிரியாவின் வடக்குப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் வீட்டிற்கு திரும்ப மக்கள் அச்சப்பட்டு தெருக்கள் மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது.

    நிலநடுக்கத்தால் 190 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 43 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர் என துருக்கி உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

    பயம் காரணமாக வீட்டிற்கு ஜன்னல் வழியாக குதித்ததில் பலர் காயம் அடைந்துள்ளதாக எலாஜிக் மேயர் தெரிவித்துள்ளார். மாலத்யாவில் இது போன்று 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

    மொத்தம் நான்கு கட்டடங்கள் இந்த நிலநடுகத்தில் பாதிப்படைந்துள்ளது. எலாஜிக்கில் நான்கு பேர் சேதமைடைந்த கட்டடத்தில் இருந்து காயமின்றி மீட்கப்பட்டனர்.

    கடந்த வரும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் ஒன்று மலாத்யா. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    வடமேற்கு துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்னர்.

    Next Story
    ×