search icon
என் மலர்tooltip icon
    • உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும்.
    • இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது.

    நெற்றியில் அணியக்கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருக்கின்றன. பொதுவாக சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் என்பது இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் அணிவது அல்லது பூசுவது ஆகியவற்றின் பின்னணியில் எளிய அறிவியல் மற்றும் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதை ஆன்றோர்கள் அறிந்துள்ளார்கள்.

    சந்தனம்:-

    பொதுவாக, சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அங்கு இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் `ஹிப்போகேம்பஸ்' என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்பவும் உதவுகிறது.

    நெற்றியில் உள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டு, சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக உள்ளது. அந்த இடத்தை மெதுவாக தொட்டு சந்தனம் பூசும்போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும்.

    தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக இருப்பதால் மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு அந்த நிலை ஏதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

    சந்தனம் இடுவதன் மூலம் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதால், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.

    குங்குமம்:-

    பெண்களால் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் பெரும்பாலும் அணியப்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அணிவது வழக்கம். மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை ஒன்றாக குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும்.

    மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதியாக செயல்படு வது நெற்றிக்கண். அதாவது, புருவ மத்திய பகுதி ஆகும். மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளையும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்க முடியும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகளும் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

    பெண்களின் முன் வகிடு பகுதி, மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டின் குங்குமம் இடுவதன் மூலம் மங்கலம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்கள் சொல்கின்றனர்.

    • குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும்.
    • அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன.

    குழந்தை பருவத்தில் கீரை என்றாலே ஒருவித வெறுப்பு இருக்கும். கீரையை உணவாக சாப்பிடுவது, மாத்திரையை விழுங்குவது போல முகத்தை சுழித்துதான் சாப்பிட்டிருப்போம். உண்மையில், கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

    உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி-1, பி-2, பி-6 மற்றும் சி, இ, கே ஆகியவை கிடைக்கின்றன. கீரைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் வைட்டமின் ஏ சத்தாக மாறி, உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.

    உடல் இயக்கத்துக்கு நார்ச்சத்து மிக மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றன. செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுக்கின்றன. குடல் இயக்க மாறுபாட்டை தடுப்பதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    உணவு பழக்க வழக்க மாறுபாட்டால், இதய பிரச்சினைகள் வாழ்வியல் நோயாக மாறியுள்ளது. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகளை சுவைக்காக மட்டும் எடுத்துக்கொள்வதால் இதயப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

    கீரைகள் சாப்பிடும்போது இதயத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. கீரைகளில் உள்ள நைட்ரேட் ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்துக்கு சீரான அளவில் ரத்தத்தை அனுப்புகிறது. நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை அகலப்படுத்தி தமனிகளில் அடைப்பை தடுக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    கண் பார்வைத் திறனை பராமரிப்பதில் கரோட்டினாய்டு நிறமிகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டீன் மிக அவசியமானவை என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவை கண் பார்வைக்கு துணைபுரிவதுடன், விழித்திரை பாதிப்பு அபாயத்தையும் குறைக்கின்றன.

    மேலும், கண்புரை உருவாகுவதை தடுப்பதுடன், இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் வயதாவதையும் குறைக்கின்றன. இந்த சத்துக்களும் கீரைகளில் நிரம்ப கிடைக்கின்றன.

    உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பாகங்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான மிக அத்தியாவசிய வைட்டமின்கள் கீரைகளில் இயல்பாகவே கிடைக்கும்போது, அவற்றை தவிர்க்காமல் அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிப்பீர்கள்.

    • கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
    • தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் ஆகும்.

    கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

    தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

    • பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

    www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 26 ஆயிரத்து 663 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர்.

    • விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    • பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    பஸ், ரெயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ. விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அவர் அருகே அமர்ந்திருந்த மற்றொரு பயணி விமானத்தில் காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார். இந்நிலையில் இருமிக்கொண்டிருந்த பயணி எழுந்து சென்று, ஏற்கனவே தன் அருகே இருந்து விலகி சென்று அமர்ந்த பயணியின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சண்டை போட்ட பயணிகளை விலக்கி விட முயன்றனர். ஆனாலும் 2 பயணிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சமாதானபடுத்த முடியாமல் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கனவே பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை பாராட்டி பதிவிட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட பயணிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

    • பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
    • வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வெள்ளத்தில் பிரிந்துபோன தனது வளர்ப்பு நாய்களுடன் மீண்டும் இணைந்த உரிமையாளர் குறித்தான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    பிரேசிலின் ரியோ கிராண்ட் சுலே மாகாணத்தில் கனமழை காரணமாக அங்கு திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிய நிலையில் பலர் வீடுகளை இழந்தும், சொந்தங்களை பிரிந்தும் தவித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பேரிடரின்போது பிரிந்துபோன தன் வளர்ப்பு நாய்களுடன் அதன் உரிமையாளர் மீண்டும் இணைவது குறித்தான காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவுகிறது. அதில் பெருவெள்ளம் சூழ்ந்த நகர்ப்பகுதி நடுவே பைபர் படகு மூலம் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார்.

    மேலும் வெள்ளத்தில் சிக்கியபோது பிரிந்த அவரின் 4 வளர்ப்பு நாய்களும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் பெருமகிழ்ச்சியில் அவர் தன் நாய்களை அணைத்தவாறு அவர் கதறி அழுதார். இந்த பதிவு காண்போரை நெகிழ வைத்து வேகமாக பகிரவும் செய்துள்ளது.


    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.

    இதனால் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று தங்கம் விலை 2-வது முறையாக உயர்ந்துள்ளது.

    காலையில் கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் 45 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் இன்று தங்கம் சவரன் 720 ரூபாய் அதிகரித்து ரூ.53,640-க்கும் கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.90-ஆகவும் பார் வெள்ளி ரூ.90,000ஆகவும் விற்பனையாகிறது.

    மீனம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செலவுகள் ஏற்படும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும், தொலைதூரப் பயணங்கள் செல்லப்போட்ட திட்டம் நிறைவேறலாம். தங்கம்,வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.

    கும்பம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மகரம்

    இன்றைய ராசி பலன்

    கவலைகள் தீர கண்ணனை வணங்க வேண்டிய நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உள்ளம் மகிழும் செய்தி உடன்பிறப்புகள் வழியில் வந்துசேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    ஆபரண சேர்க்கை ஏற்படும் நாள். எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும். லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    ×