என் மலர்tooltip icon
    • கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன.
    • நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    வேளச்சேரி, அடுத்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது43). வக்கீலானா இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராக இருந்தார்.

    இவர், விருகம்பாக்கம் கணபதிராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து அலுவலகம் நடத்தி அங்கேயே தங்கி இருந்தார். கடந்த 2 நாட்களாக பூட்டி கிடந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது, வக்கீல் வெங்கடேசன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் வெட்டிய கத்தியை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

    கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலையாளிகள் சித்ரவதை செய்து கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சம்பவத்தன்று 4 பேர் கும்பல் வெங்கடேசனை கொலை செய்து விட்டு அவரது வீட்டில் இருந்து தப்பி செல்வது பதிவாகி உள்ளது. இதனை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலையுண்ட வெங்கடேசன் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது நண்பரான சேதுபதி என்பவருடன் சேர்ந்து வக்கீல் அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். கடந்த மாதம் சேதுபதி மர்ம கும்பலால் நெல்லையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக வெங்கடேசனின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.

    கொலை தொடர்பாக வெங்கடேசனின் நண்பர்கள் உள்பட 4 பேர் மீது போலீசாருக்கு சந்கேதம் ஏற்பட்டு உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட வக்கீல் வெங்கடேசன் மனைவி சரளா விருகம்பாக்கம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் கொலையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உடன் இருந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில் வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வெங்கடேசனிடம் ஓட்டுநகராக இருந்த கார்த்திக் மற்றும் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வைத்து இருவரையும் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?.
    • பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார்.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றார். அங்கு சென்ற அவர் ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து பேசினார். பாஜக தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளதால், விரைவில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் "பிரதமராக பதவியேற்றது முதல் ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லாத மோடி, தற்போது சென்றது ஏன்?. பாஜக தலைமையை மாற்ற ஆர்எஸ்எஸ் விரும்புவதால் மோடி விலக உள்ளார். ஓய்வை அறிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சென்றிருந்தார். அடுத்த 2029ஆம் மக்களவை தேர்தலிலும் மோடிதான் பிரதமர் எனத் தெரிவித்திருந்தார்.

    • தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.
    • அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. கட்சிக்கு புதிய மாநில தலைவர் யார் என்ற அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மீண்டும் அண்ணாமலையே நியமிக்கப்படுவார் என்று கட்சி வட்டாரத்தில் உறுதியாக கூறப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு சூழ்நிலைகள் மாறி வருவதாக கருதப் படுகிறது.

    பா.ஜ.க.வுடன் கூட் டணி அமையும்போது தமிழகத்தில் இரு கட்சிகள் இடையேயும் நெருடல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இதை அடுத்து அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து விவாதித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி அண்ணாமலை அமித்ஷாவிடம் எடுத்து கூறி இருக்கிறார்.

    டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலையிடம் கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைமையில் மாற்றம் வருமா? அ.தி.மு.க.வை ஏற்கனவே கடுமையாக விமர்சித்த உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:-

    நான் 2020-ல் பா.ஜ.க.வில் சேர்ந்தது முதல் எந்த பதவியையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் வளர்ச்சி தங்கு தடை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

    எந்த தலைவர் மீதும், எந்த கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.

    கூட்டணி பற்றி எல்லாம் தலைவர்கள்தான் முடிவு எடுப்பார்கள். எனது கடமை நடுநிலையாக இருந்து தமிழகத்தின் களநிலவரத்தை உள்ளதை உள்ளபடியே கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்த கடமையை செய்து இருக்கிறேன். அது சரியாக இருந்தால் தான் அதற்கேற்ப தலைவர்கள் முடிவெடுக்க முடியும்.

    என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. நான் கடுமையாக விமர்சித்தேன் என்பது சரியல்ல. தனிப்பட்ட முறையில் யாருடனும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. கருத்துக்களைத்தான் கருத்துக்களால் எதிர்கொண்டு வருகிறேன்.

    அன்று முதல் இன்று வரை நான் வெளிப்படையாகவே இருக்கிறேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பிசிறு கூட மாற்றம் கிடையாது.

    எல்லா சூழ்நிலைகளையும் ஆய்ந்து தமிழக தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். விரைவில் பார்ப்பீர்கள்.

    அண்ணாமலையை பொறுத்தவரை எதையும் மாற்றி பேசுபவன் கிடையாது. அதை வருங்காலத்திலும் பார்ப்பீர்கள். எதற்காக அரசியலுக்கு வந்தேனோ? அந்த வெறியும், நெருப்பும் என் உள்ளத்தில் எரிந்து கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை இப்படி சூசகமாக பேசியது தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்படலாம் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் அண்ணாமலையின் அதிரடி கருத்துக்கள் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் இரு கட்சி மேலிட தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் பற்றி அண்ணாமலையிடம் அமித்ஷா தெளிவுபடுத்தியதோடு அவரது கருத்தையும் கேட்டு உள்ளார். அப்போது தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். எந்த பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சிக்கு வரவில்லை. கட்சியின் சாதாரண தொண்டராக இருந்து கட்சி பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்த வார்த்தையை பயன்படுத்தியது உண்மை என்பதையும் அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். எனவே தலைவர் மாற்றம் என்பது உறுதியாகி விட்டதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    புதிய தலைவருக்கான ரேசில் வானதி சீனிவாசன், எச்.ராஜா, டாக்டர் தமிழிசை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தார்கள்.

    ஆனால் இப்போது மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது மத்திய மந்திரி எல்.முருகன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கோவை முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.

    இதில் கோவை முருகானந்தம் அண்ணாமலை நடத்திய 'என் மண் என் மக்கள்' யாத்திரையை சிறப்பாக நடத்தியதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் புதிதாக ஒருவரை தலைவராக நியமித்தால் சரிப்பட்டு வராது என்று மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் புதிதாக ஒரு வரை தலைவராக நியமித்து வெற்றி பெற முடியாமல் போனதே அதற்கு காரணம் என்கிறார்கள்.

    எனவே முருகனா? தமிழிசையா? என்றுதான் மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்தவர்கள். இந்த இருவரில் ஒருவரைத்தான் தலைவராக நியமிப்பார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    • பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.
    • தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

    இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது,

    பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது, சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி அவர்களது பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது.

    அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு.

    இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6-ந்தேதி வருகை தரும், பாரத பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷினை பறிமுதல் செய்தனர்.
    • தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.

    காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் வி.சி.க. கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

    கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் செல்வத்தை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.

    • சி.எஸ்.கே. அணியை வீழ்த்திய பிறகு இன்ஸ்டாவில் அதிக Follower-களை ஆர்.சி.பி. பெற்றது
    • எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி சி.எஸ்.கே. தான்.

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.

    அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.

    இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

    அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.

    தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது.

    அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    • வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.180 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.275 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.415 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.485 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.725 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.55 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.90 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.185 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.275 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.200 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.290 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.435 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.350 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.525 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.280 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.420 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.490 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.730 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    மேலும் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள உள்ளூர் வணிகம் சாராத வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.350 ஆகும்.

    • ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார்.
    • கடைசியாக 2014ல் சென்னை அணிக்காக விஜய் சங்கர் விளையாடினார்.

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    நேற்றைய போட்டியில் ஹூடாவிற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சி.எஸ்.கே. அணியில் இடம்பிடித்தார். இதன்மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் சி.எஸ்.கே. அணிக்கு திரும்பிய வீரர் என்ற அஸ்வினின் சாதனையை (3,591 Days) விஜய் சங்கர் (3,974 Days) முறியடித்தார்

    2014ல் முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாடிய நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விஜய் சங்கர் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மித்ரன் இயக்கத்தில் கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது.

    சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலையில் வெளியாகி கவனம் ஈர்த்தன.

    இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

    • ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
    • ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார்

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக கேப்டன் ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை.
    • ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரெண்டிங்கில் இருப்பதை காணலாம்.

    கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணைந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜிப்லி டிரெண்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாட்டின் இதயத்திலிருந்து ஸ்டுடியோகிப்லி உலகம் வரை எனது மிகவும் மறக்க முடியாத சில தருணங்களை காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை.
    • எம்புரான் படத்தில் 2002 குஜராத் கலவரத்தை தொடர்புபடுத்தும் காட்சிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    எம்புரான்' திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

    எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்துத்த்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்த்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பை அடுத்து, எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்பட்டது.இதனிடையே , எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்தார்.

    இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக இயக்குனர் பிரித்விராஜை ஆதரித்து அவரது தாயார் மல்லிகா பேஸ்புக்கில் நீண்ட பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

    எம்புரான் திரைப்படம் பலரின் கூட்டுமுயற்சியால் உருவாகியிருந்தாலும் இப்படம் தொடர்பான சர்ச்சையில் தனது மகன் மட்டும் பலிகடா அளிக்கப்படுவதாக பிரித்விராஜின் தாயார் ஆதங்கத்துடன் இப்பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும், "எம்புரான் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தையும் மோகன்லால் நன்றாகவே அறிவார். ஆகவே சர்ச்சியுரிய காட்சிகளுக்கு தனது மகனை மட்டும் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×