என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
    • அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது,

    மகாராஷ்டிரா மாநிலம் ஆலியாநகர் மாவட்டம் ரஹுரி பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் புகுந்து கும்பல் ஒன்று, பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றியுள்ளது.

    சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், கும்பல் வலுக்கட்டாயமாக தர்காவிற்குள் நுழைந்து, பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவி கொடியை ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிலர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடுவதை கேட்க முடிகிறது. மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.

    "அவர்கள் தர்காவைத் தாக்கி அதன் மீது காவி கொடியை ஏற்றும்போது, போலீசார் அங்கேயே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை" என சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் நேற்று முன் தினம் (மார்ச் 26) அன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத்த அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • பிரதமர் மோடி மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்தின் விரிவாக்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.
    • பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திர் வளாகத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

    நாக்பூர்:

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் மறைந்த ஆா்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோல்வால்கரின் நினைவிடங்கள் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திரில் அமைந்துள்ளன. நாளை மறுதினம்(30-ந்தேதி) நாக்பூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த நினைவுச்சின்னங்களுக்கு வருகை தருவார் என்று மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான சந்திரசேகர் பவன்குலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு நாக்பூர் வருகை தருகிறார். அவா் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்தின் விரிவாக்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பின்னர் ரெஷிம்பாக்கில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்கு பிரதமர் வருகை தருகிறார். இதைத்தொடர்ந்து 1956-ம் ஆண்டு அம்பேத்கர் தனது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்த மதத்தை தழுவிய தீக்ஷா பூமிக்கும் பிரதமர் மோடி செல்வார். பின்னர் அங்குள்ள சூரிய வெடிபொருள் ஆலையையும் அவர் பார்வையிடுவார். நாக்பூர் வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. பெரிய அளவிலான ஏற்பாடுகளை செய்துள்ளது".

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஆஸ்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திர் வளாகத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். மறைந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் 2007-ம் ஆண்டு நினைவிடத்திற்கு வருகை தந்தார். ஆனால் அப்போது அவர் பிரதமராக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக பிரசாரகராக நினைவிடத்திற்கு வருகை தந்தார். ஆனால் பிரதமரான பிறகு முதல் முறையாக அந்த இடத்திற்கு வருகை தருகிறார்" என்றார்.

    • நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தானே:

    சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள இரானி பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

    சென்னையில் கொள்ளையன் ஜாபர் கொல்லப்பட்டதையடுத்து இரானி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இரானி கும்பலை சேர்ந்தவர்கள் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க இரானி பகுதிக்கு போலீசார் செல்லும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மும்பையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கார் மீது பேருந்து ஒன்று மோதியது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

    மும்பையில் நேற்று ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சம்பவத்தின்போது நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது.
    • மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

    கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கும் சூழலில் குணால் கம்ரா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக குணால் கம்ரா 1 வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.

    காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவரது கோரிக்கையை மும்பை போலீஸ் நிராகரித்துள்ளது. உடனே அவர் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே சேனா ஆதரவாளர்கள் தனது ஸ்டூடியோவை அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்து அவர்களை கிண்டல் செய்து மேலும் ஒரு நகைச்சுவை பாடலை வெளியிட்டார்.

    இந்நிலையில் மத்திய மாநில பாஜக அரசின் சர்வாதிகார செயல்பாடுகள் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்மானை கிண்டலடித்து மேலும் ஒரு நகைச்சுவை பாடல் வீடியோவை குணால் கம்ரா வெளியிட்டுள்ளார்.

    அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது. "உங்கள் வரிப்பணம் வீணாக போகிறது" என்பது இந்த பாடலின் தலைப்பு. "அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், உடைந்துவிழும் பாலங்கள், இது சர்வாதிகாரம்" என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

    மேலும் நிர்மலா சீதாராமன் குறித்த வரிகளில், "அவர் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறார், சம்பளத்தைத் திருட வந்திருக்கிறார், நடுத்தர வர்க்கத்தை அடக்கி ஒடுக்க வந்திருக்கிறார், மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.

    பாஜக அரசு பெருநிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சுமையையும் வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    மேலும் கடந்த வருடம் பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதித்து அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் கேலிக்கு உள்ளானது. இவற்றை முன்வைத்து குணால் கம்ரா தனது பாடலில் அவரை விமர்சித்துள்ளார்.

    • சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.
    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.

    தொடர்ந்து 7 நாட்களாக ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 0.93 சதவீதமும் நிஃப்டி 0.77 சதவீதமும் சரிந்து இன்று வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 77,966.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே சென்செக்ஸ் இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,194.22 புள்ளிகளிலும் அதிகபட்சமாக 78,167.87 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 728.93 புள்ளிகள் சரிந்து 77,288.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 6 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,685.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் இறங்குவதுமாகவே நிஃப்டி இருந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,451.70 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,736.50 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 181.80 புள்ளிகள் சரிந்து 23,486.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 41 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 9 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
    • மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

    குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

    • முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
    • ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    மும்பை பவாய் பகுதியில் புகழ்பெற்ற மும்பை ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் பெரிய முதலை ஒன்று புகுந்தது. அதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும் முதலை யாரையும் பொருட்படுத்தாமல் அங்கு இருந்து அருகில் உள்ள பவாய் ஏரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து வனவிலங்கு நலச்சங்க நிறுவனர் பவான் சர்மா கூறுகையில், "ஏரியில் இருந்து வெளியே வந்தது பெண் முதலையாக இருக்கலாம். அது முட்டைபோட இடம் தேடி இருக்கும். அந்த பகுதியில் இருந்தவர்கள் முதலையை யாரும் துன்புறுத்தாத வகையில் பாதுகாத்து உள்ளனர். சிறிது நேரத்தில் முதலை தானாக ஏரிக்குள் சென்றுவிட்டது" என்றார்.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் முதலை ஊர்ந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே முதலை நடமாட்டம் இருந்த பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம், முதலை நடமாட்டத்துக்கு வாய்ப்பு உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டு கொண்டு உள்ளனர்.

    பவாய் பகுதியில் பத்மாவது ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள முதலைகள் ஒரு சில நேரங்களில் ஏரியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

    • தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை
    • மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததை சுட்டிக்காட்டினார்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார். சிவசேனாவின் இருந்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவிக்கு தாவிய ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா விமர்சித்திருந்தார்.

    ஆனால் அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர்.

    போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மேலும் குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டுள்ளார்.

    காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஷிண்டேவுடன் கூட்டணியில் உள்ள மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததையும் குணால் கம்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.

    அதோடு நிற்காமல் தனது ஸ்டூடியோவை சேனா தொண்டர்கள் அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள குணால் கம்ரா அவர்களை கிண்டல் செய்து பாடல் ஒன்றையும் பாடி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  

    • சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.
    • நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 78,385.79 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,745.63 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 78,741.69 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்ந்து 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 10 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்வை சந்தித்தது.

    நேற்று நிஃப்டி 23,658.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,762.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக நிஃப்டி இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,601.40 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,869.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 10.30 புள்ளிகள் உயர்ந்து 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 20 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    தொடர்ந்து 7 ஆவது நாளாக ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 0.04 சதவீதமும் நிஃப்டி 0.04 சதவீதமும் உயர்ந்து இன்று வர்த்தகம் ஆனது.

    • மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. .
    • குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

    முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்.

    பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிவசேனா சிவசேனா ஆதரவாளர் ஒருவர் குணால் கம்ராவிடம் செல்போனில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த ஆடியோவில் பேசப்பட்டவை:

    குணால் கம்ரா: வணக்கம்

    சிவசேனா சிவசேனா: குணால் கம்ராவா?

    குணால் கம்ரா: ஆமா, சொல்லுங்க.

    சிவசேனா சிவசேனா: ஜெகதீஷ் சர்மா பேசுகிறேன். உங்கள் வீடியோவில் சாஹேப் பற்றி என்ன சொன்னீர்கள்?

    குணால் கம்ரா: எந்த சாஹிப்?

    சிவசேனா சிவசேனா: ஷிண்டே சாஹேப், எங்கள் (துணை) முதல்வர். உங்கள் வீடியோவில் அவரைப் பற்றி என்ன பேசினீர்கள்?

    குணால் கம்ரா: அவர் இப்போது எங்கே முதலமைச்சராக இருக்கிறார்? அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

    சிவசேனா சிவசேனா: அவர் துணை முதல்வர். அவரைப் பற்றி என்ன வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள்?

    குணால் கம்ரா: நீங்க வீடியோவை பார்த்தீர்களா?

    சிவசேனா சிவசேனா: பார்த்தேன். நீங்கள் நிகழ்ச்சி நடத்திய ஓட்டலை நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள். நாங்கள் உங்களை எங்கு கண்டாலும் இதே நிலைதான். புரிகிறதா?

    குணால் கம்ரா: தமிழ்நாட்டுக்கு வந்தால் என்னை பார்க்கலாம்.

    சிவசேனா சிவசேனா: நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?

    குணால் கம்ரா - தமிழ்நாட்டில் தான்.

    சிவசேனா சிவசேனா: தமிழ்நாட்டிற்கு வந்து உங்களை அடிப்பேன்.

    குணால் கம்ரா: வாருங்கள், தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.

    சிவசேனா சிவசேனா: இப்போ தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? நம்ம ஐயாகிட்ட ஒரு நிமிஷம் பேசுங்க.

    காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் இந்த ஆடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இதனை நகைசுவை என்று குறிப்பிட்டார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
    • சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.

    பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.

    இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.

    முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    ×