search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.
    • வங்கதேச சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி இக்கோவிலுக்கு சென்றார்.

    டாக்கா:

    வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள காளி தேவி சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் தற்போது திருடப்பட்டுள்ளது. நேற்று கோவில் பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு கிளம்பிய பின் மதியம் 2 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த திருட்டு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
    • இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில், இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் வீரர்கள் விவரம் வருமாறு:

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமிம், பர்வேஸ் ஹொசைன் எமான், தவ்ஹித் ஹிருடோய், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மெஹிதி ஹசன், ரிஷத் ஹொசைன், முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.

    14 மாத இடைவெளிக்கு பிறகு ஆல் ரவுண்டரான மெஹிதி ஹசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

    முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 போட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷேக் ஹசீனா கட்சியின் எம்பியாக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
    • மாணவர்கள் போராட்டத்தின் போது ஷகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.

    மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    கலவரத்தின்போது கனடாவில் நடந்த குளோபல் டி20 லீக்கில் ஷகிப் அல் ஹசன் விளையாடி கொண்டிருநதார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை. .

    இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், நாடு திரும்பினால் எந்த துன்புறுத்தலும் இருக்காது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

    இதனையடுத்து, அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்திற்கு ஷகிப் அல் ஹசன் திரும்ப உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    • தினசரி தொழுகையின்போது துர்கா பூஜை பந்தல்களுக்கு வங்கதேச அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
    • துர்கா பூஜை மண்டல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்குகிறது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தின் போது இங்கு வசிக்கும் இந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

    வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பந்தல் அமைத்து அங்கு பிரமாண்ட துர்க்கை சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர். கடந்த சில ஆண்டாக துர்கா பூஜை காலங்களில் இந்துக்கள்மீது தாக்குதல் நடப்பது வழக்கமாக உள்ளது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட உள்ளது என இந்து அமைப்புகள் தெரிவித்தன. துர்கா பூஜையின்போது இந்துக்கள் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வங்கதேச அரசு உத்தரவிட்டது.

    துர்கா பூஜை பந்தல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்க உள்ளது என உள்துறை ஆலோசகர் தெரிவித்தார்.

    இந்நிலையில், துர்கா பூஜை கொண்டாட உள்ள சில மண்டல்களுக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும். அப்படி தந்தால் மட்டுமே பூஜை நடத்த முடியும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுதொடர்பாக மண்டல்களின் பொறுப்பாளர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 20-ம் தேதி சில மண்டல்களின் பிரதிநிதிகள் டகோப் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம். ராணுவக் குழுவுடன் இணைந்து ரோந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    • வங்கதேசத்தில் கடந்த சில நாளாக கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

    ரோஹிங்கியா அகதிகள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள ஹதிகும்ருல்-14 ரோஹிங்கியா முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவால் ரோஹிங்கியா குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பல குடியிருப்புகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நிலச்சரிவை தொடர்ந்து ஆபத்தான மலைச்சரிவுகளில் வசித்து வருவர்களை வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    • ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
    • முக்கிய துறைகளில் மாற்றம் கொண்டுவர கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை.

    வங்கதேசம் நாட்டிற்கான தலைமை ஆலோசகர் டாக்டர் முகமது யூனுஸ், தனது நாடு இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறது, ஆனால் அது "நியாயம் மற்றும் சமத்துவத்தின்" அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    தொலைக்காட்சியில் உரையாற்றிய முகமது யூனுஸ், "யூனுஸ் நிர்வாக தலைவராக பதவியேற்ற பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் அவரை வாழ்த்தினார்கள்."

    "நாங்கள் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறோம், ஆனால் அந்த உறவுகள் நியாயம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த சார்க் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கவும் நான் முன்முயற்சி எடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார்.

    சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. வங்கதேசத்தை மரியாதைக்குரிய ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    வங்கதேசத்தை சீர்திருத்தும் முயற்சியில், தேர்தல் முறை உட்பட ஆறு முக்கிய துறைகளில் மாற்றங்களை கொண்டுவர ஆறு கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக யூனுஸ் கூறினார்.

    • வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • இந்தியாவில் இருந்கொண்டு கருத்து தெரிவிப்பதை நல்லதல்ல எனக்கிறார் முகமது யூனுஸ்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் உள்ளார்.

    இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அவர் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் அடிக்கடி அரசியல் கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மீது வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தொடர்ந்து அவர் இந்தியாவில் இருக்க விரும்பினால் அமைதியாக இருக்க வேண்டும் என முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முகமது யூனுஸ் கூறியதாவது:-

    வங்கதேச அரசு அவரை திரும்ப அழைக்கும் வரை, இந்தியா தொடர்ந்து அவரை வைத்திருக்க விரும்பினால், அவர் அமைதியாக இருக்க வேண்டும். இது நிபந்தனையாக இருக்கும்.

    இந்தியாவில் இருந்து கருத்து தெரிவிப்பது நட்பற்ற சைகையாகும். இந்தியாவில் இருந்து அவர் கருத்து தெரிவிப்பது யாருக்கும் வசதியானது அல்ல. ஏனென்றால் அவரை நாங்கள் மீண்டும் வங்கதேசத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். அவர் இந்தியாவில் இருக்கிறார், சில சமயங்களில் அவர் கருத்து தெரிவிக்கிறார். இது பிரச்சனையாக இருக்கிறது.

    அவர் அமைதியாக இருந்திருந்தால் நாங்கள் மறந்திருப்போம். அவர் தன் சொந்த உலகத்தில் இருந்திருப்பார் என மக்கள் அதை மறந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அமர்ந்து கொண்டு, பேசிக்கொண்டு இருப்பதோடு அறிவுரைகள் கொடுத்து வருகிறார். இது யாருக்கும் பிடிக்காது.

    ,இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    • உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.
    • கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

    வங்காளதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள்.

    இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது மேலும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள தேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் இடைக்கால அரசின் நிலைப்பாடு குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவு ஆலோசகர் டூஹித் ஹொசைன் கூறியதாவது:-

    ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியிருக்கிறார். அவரை நாடு கடத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுப்பது தொடர்பாக பதில் சொல்ல நான் சரியான நபர் இல்லை. உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் சார்பில் கோரிக்கை விடுத்தால், நாங்கள் அவரை திரும்பி அனுப்ப கேட்போம்.

    இந்த கோரிக்கை எழுந்தால் அது இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சங்கடமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

    அது இந்திய அரசாங்கத்திற்கு தெரியும் என்று நினைக்கிறேன். இவ்விவகாரத்தை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாக்க அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதே எங்களின் கொள்கையாகும். யாருடனும் பகைமை கொள்ளாமல், சமநிலையான உறவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளோம். எங்களது முதன்மைப் பணி நமது நலன்களைப் பாதுகாப்பதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியாகியது.

    ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தக் கொலை வழக்கில் 147 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த இரு மாதமாக நடைபெற்ற கலவரங்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர்.

    இந்தக் கலவரத்தின்போது ரபிகுல் இஸ்லாம் என்பவரின் மகன் ஆகஸ்ட் 5-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கு அடாபூர் காவல்நிலையத்தில் நடந்து வருகிறது.

    இந்தக் கொலை வழக்கில் சுமார் 150-க்கு மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் நஜ்முல் ஹுசைன் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கலவரத்துக்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் ஷகிப் அல் ஹசன்.

    தற்போது 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷேக் ஹசீனா மீது இடைக்கால அரசு கொலை குற்றவழக்கு பதிவு செய்துள்ளது.
    • வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதாக வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவு ஷேக் ஹசீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டியதில்லை.

    வங்கதேச பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பராளுமன்றத்தில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் ரத்து செய்யப்படுவதாக இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

    இனிமேல் ஷேக் ஹசீனா வழக்கமான நடைமுறையின்படி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன்பின் பார்ஸ்போர்ட் வழங்கப்படும்.

    இதற்கிடையே மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தலாமா? என்பதை மதீப்பிட ஐ.நா. குழு இன்று வங்கதேசம் வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • 25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • 25 வயதில் கைது செய்யப்பட்ட ஷாஜகான் 62 வயதில் நாடு திரும்பியுள்ளார்.

    வங்கதேசத்தில் 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த இந்தியர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார்.

    திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்பவர் 1988 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மாமியார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவரை கைது செய்தனர்

    25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பின்பும் வேறு வழக்கிலும் அவரை போலீசார் தொடர்புபடுத்தியதால் அவரது விடுதலை சாத்தியமில்லாமல் போனது

    இந்நிலையில், ஜாரா அறக்கட்டளையின் உதவியினால் 37 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினரிடம் ஷாஜகான் ஒப்படைக்கப்பட்டார்.

    அவர் கைது செய்யப்படும் போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இப்போது தான் முதன்முறையாக தனது மகனின் முகத்தை ஷாஜகான் பார்த்துள்ளார்.

    தனது விடுதலை குறித்து பேசிய ஷாஜகான், "என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன். எனக்கு மறு பிறவி எடுத்தது போன்று உள்ளது. இந்த வாழ்நாளில் நான் என சொந்த ஊருக்கு திரும்புவேன் என்று நான் நினைக்கவில்லை. என்னை வீட்டிற்கு அழைத்து வந்தது ஜாரா அறக்கட்டளைக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    ×