தமிழ்நாடு (Tamil Nadu)

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க 'BanNEET'- மு.க. ஸ்டாலின்

Published On 2024-06-28 12:24 GMT   |   Update On 2024-06-28 12:24 GMT
  • நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
  • தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையில் சிக்கியது. இதனால் இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்தன. பாராளுமன்ற இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,

நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க BanNEET என்று கூறியுள்ளார்.


Tags:    

Similar News