தமிழ்நாடு

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை

Published On 2024-01-05 10:15 GMT   |   Update On 2024-01-05 10:15 GMT
  • சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
  • பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.

சென்னை:

அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வருகிற 9-ந்தேதி முதல் 'ஸ்டிரைக்' நடத்த உள்ளனர்.

இதையடுத்து 9-ந்தேதி வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News