உலகம்
ஈரானில் நிதித்துறை மந்திரி பதவி நீக்கம்
- நிதித்துறை மந்திரியின் தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
டெஹ்ரான்:
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்தநிலையில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு நிதித்துறை மந்திரி அப்தோல்நாசர் ஹெம்மாட்டியின் (வயது 68) தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து ஆளுங்கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நிதித்துறை மந்திரி ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.