புதுச்சேரி

கோப்பு படம்.

பொது மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ப.கண்ணன்

Published On 2023-11-09 06:38 GMT   |   Update On 2023-11-09 06:38 GMT
  • முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • அர்ப்பணித்த தலைவரை இழந்து விட்டோம்

புதுச்சேரி:

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் உடல் நலக்குறைவால் கடந்த 5-ந் தேதி இரவு மரண மடைந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், ப.கண்ணன் மனைவி சாந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

உங்கள் கணவர் ப.கண்ணன் மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வருந்தினேன். பொது மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தலைவரை இழந்து விட்டோம். புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவு கூறப்படும்.

அவரை இழந்து வாடும் உங்கள் வேதனையையும், துயரத்தையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ப.கண்ணன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News