புதுச்சேரி

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கத்தில் ஆபாச படத்தை பதிவிட்டது யார்?

Published On 2024-01-05 04:31 GMT   |   Update On 2024-01-05 04:31 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது.
  • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால்:

காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக முகநூல் (பேஸ்புக்) பக்கம் உள்ளது.

இதில் கோவிலில் நடைபெறும் விழாக்கள், பூஜைகள் விவரம், கோவில் வரலாறு மற்றும் சாமியின் புகைப்படங்கள பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவிலின் முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து அந்த கணக்கில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டனர்.

இதனை பார்த்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முகநூல் பக்கத்தில் இருந்த ஆபாச படத்தை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நீக்கினர்.

மேலும் கோவிலின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News