புதுச்சேரி

வ.உ.சி. பள்ளியை ஒப்படைக்கும் விதமாக கட்டிட மாதிரியை முதல்-அமைச்சர் ரங்கசாமி கல்வி அமைச்சர் நமச்சிவாயத்திடம் அளித்த காட்சி.

புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி. பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைப்பு

Published On 2023-11-16 08:26 GMT   |   Update On 2023-11-16 08:26 GMT
  • இந்த பள்ளியில் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளனர்.
  • இந்த பள்ளி கட்டடம் சேதமடைந்து பலவீனமானது.

புதுச்சேரி:

புதுவை மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளி 1886-ம் ஆண்டு எக்கோல் பிரைமரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

ஆரம்பகாலத்தில் பிரெஞ்சு மொழியில் கல்வி போதிக்கப்பட்டது. இந்த பிரெஞ்சு கல்வி முறை 1960-ம் ஆண்டு வரை நீடித்தது. அதன்பிறகு தமி ழ்மொழியில் கல்வி போதி க்கப்பட்டது. இந்த பள்ளியில் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக பணியாற்றியுள்ளனர்.

வ.சுப்பையா, பாரூக் உட்பட பல்வேறு தலைவர்களை இந்த பள்ளி உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் சிவா இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் நூற்றாண்டு கண்ட இந்த பள்ளி கட்டடம் சேதமடைந்து பலவீனமானது.

இதையடுத்து புதுவை அரசு 2021-ல் பழமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் இன்டாக் அமைப்பு உதவியுடன் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 ஆண்டாக புதுப்பிப்பு பணிகள் நடந்து வந்தது. கட்டிடத்தின் மீது வளர்ந்த மரங்கள், செடிகள் அகற்றப்பட்டது.

சுவற்றில் பூச்சுகள் சுரண்ட ப்பட்டது. கட்டிட மேல்தளத்தை தாங்கும் வகையில் ஆங்காங்கே இரும்பு கம்பிகள் பொருத்தி, பலம் சேர்க்கப்ப ட்டது. பள்ளிக்கு வர்ணம் பூசப்பட்டு அழகு படுத்தப்பட்டது. இப்போது அனைத்து பணிகளும் முடிந்து புதுப்பொலிவு பெற்ற பள்ளியை கல்வித்துறை யிடம் ஒப்படைக்கும் விழா இன்று நடந்தது.

கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை கல்வித்துறையிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலர்கள் மணிகண்டன், முத்தம்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரிகள், வ.உ.சி. அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.

இதே விழாவில் முதல்-அமைச்சர், கவர்னர் அலுவலகங்களில் தகவல் பலகை அமைப்பு, புயல் எச்சரிக்கை செயலி சீற்றம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புதுவை அரசின் பொதுப்பணி துறை, இந்தியன் வங்கி இடையிலான சாலை மேம்பாடுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெ ழுத்தானது. 

Tags:    

Similar News