search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில் தயாநிதிமாறன் இடம் பிடித்தார்
    X

    பாராளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில் தயாநிதிமாறன் இடம் பிடித்தார்

    • பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்து இந்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனா்.
    • ஐந்துக்கு மேற்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட கட்சி பிரதிநிதித்துவம் பெறலாம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் அன்றாட அலுவல்களை தீர்மானிக்கும் அலுவல் ஆய்வுக் குழுவுக்கு 8 கட்சிகளைச் சோ்ந்த 14 உறுப்பினா்களை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிா்லா பரிந்துரைத்துள்ளாா். இதில் பாஜக கூட்டணி கட்சியைச் சோ்ந்த 8 உறுப்பினா்களும் 'இந்தியா' கூட்டணி கட்சியை சோ்ந்த 6 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனா்.

    பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்து இந்த குழுவில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனா். அதன்படி பாராளுமன்றத்தில் 240 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க. சாா்பாக பி.பி.சவுத்ரி, நிஷிகாந்த் துபே, டாக்டா் சஞ்சய் ஜெய்ஸ்வால், பா்த்ரு ஹரி மகதாப், பைஜயந்த் ஜெய் பாண்டா, அனுராக் சிங் தாக்குா் உள்ளிட்ட 6 உறுப்பினா்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கு தேசக் கட்சியை சோ்ந்த பிரதிநிதியாக லவு ஸ்ரீகிருஷ்ண தேவராயலுவும், 12 உறுப்பினா்களைக் கொண்ட ஜக்கிய ஜனதா தளக் கட்சியைச் சோ்ந்த திலேஷ்வா் கமைத் என ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு 8 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

    பாராளுமன்றத்தில் 98 உறுப்பினா்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கவுரவ் கோகோய், கொடிக்குன்னில் கே.சுரேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். சமாஜ்வாடி கட்சி (மொத்தம் 37 உறுப்பினா்கள்), திரிணாமுல் காங்கிரஸ் (29 உறுப்பினர்கள்), தி.மு.க. (22 உறுப்பினா்கள்), சிவசேனா-(உத்தவ்தாக்கரே பிரிவு 9 உறுப்பினா்கள்) ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு முறையே லால்ஜி வா்மா, சுதீப் பந்தோபாத் யாய், தயாநிதிமாறன், அரவிந்த் கண்பத் சாவந்த் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இதன் மூலம் 'இந்தியா' கூட்டணிக்கு 6 உறுப்பினா்கள் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.

    ஐந்துக்கு மேற்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட கட்சி பிரதிநிதித்துவம் பெறலாம். அப்படி பெறாதபட்சத்தில் சபாநாயகர் அந்த கட்சிகளைச் சோ்ந்தவர்களை கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்க அழைக்கலாம். இந்த குழுவில் தேசியவாதக் காங்கிரஸ் (8 உறுப்பினா்கள்), சிவசேனா-ஏக்நாத் (7 உறுப்பினா்கள்) ஆகிய கட்சிகளுக்கு பிரதி நிதித்துவம் கிடைக்கவில்லை.

    பாராளுமன்றத்தில் விவாதங்களுக்கான நேரத்தை ஒதுக்குதல், அரசின் மசோதாக்களை எடுத்துக் கொள்வது உள்ளிட்ட பிற அலுவல்களின் நிகழ்வுகளை அலுவல் ஆய்வுக் குழு பரிந்துரைக்கும். பொதுவாக குழுவால் எடுக்கப்படும் முடிவுகள் எப்போதும் ஒருமனதாக இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை ஜூன் மாதத் தொடக்கத்தில் இந்த குழு மாற்றியமைக்கப்படும்.

    Next Story
    ×