search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கூரியர் சேவை மூலம் ரூ.1½ கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு போக்குவரத்து துறை
    X

    கூரியர் சேவை மூலம் ரூ.1½ கோடி வருவாய் ஈட்டிய கேரள அரசு போக்குவரத்து துறை

    • பொருட்களின் எடை மற்றும் கி.மீட்டர் தூரம் போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • 200 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், 800 கிலோ மீட்டருக்கு ரூ.120-ம் வசூலிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செயல்படும் அரசு போக்குவரத்து துறை லாபத்தை ஈட்டும் வகையில் கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. மாநிலத்தில் 44 கவுண்டர்கள் மற்றும் தமிழகத்தின் கோவை, நாகர்கோவில் பகுதிகளில் செயல்படும் கவுண்டர்கள் மூலம் இந்த சேவை நடைபெற்று வந்தது. பொருட்களின் எடை மற்றும் கி.மீட்டர் தூரம் போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    25 கிராம் எடை உள்ள கூரியர்களுக்கு 200 கிலோ மீட்டருக்கு ரூ.30-ம், 800 கிலோ மீட்டருக்கு ரூ.120-ம் வசூலிக்கப்பட்டது. இந்த கூரியர் சேவை மூலம் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1½ கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    Next Story
    ×