search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கர்நாடகாவில் கழிவறைக்கு வந்த மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்த மாணவர் கைது
    X

    கர்நாடகாவில் கழிவறைக்கு வந்த மாணவிகளை செல்போனில் வீடியோ எடுத்த மாணவர் கைது

    • கழிவறை முன்பு சக மாணவ, மாணவிகள் திரண்டனர்.
    • மாணவி கழிவறையில் தன்னை யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிவித்தார்.

    பெங்களூரு;

    கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் தொட்டபெலே சாலையில் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்த மாணவர் குஷால் என்பவர் மாணவிகள் கழிவறைக்கு சென்று அங்குள்ள ஒரு அறையில் பதுங்கி கொண்டார்.

    பின்னர் கழிவறைக்கு வந்த மாணவிகளை அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார். அப்போது கழிவறைக்கு வந்த ஒரு மாணவி தன்னை யாரோ செல்போனில் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுக் கொண்டே கழிவறையை விட்டு வெளியே ஓடிவந்தார்.

    இதையடுத்து கழிவறை முன்பு சக மாணவ, மாணவிகள் திரண்டனர். மேலும் கல்லூரி ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவி கழிவறையில் தன்னை யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிவித்தார். உடனடியாக மாணவர்கள் சிலர் கழிவறைக்குள் சென்று தேடிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள ஒரு கழிவறையில் பதுங்கி இருந்த மாணவர் குஷாலை வெளியே இழுத்து வந்து தாக்கினர். மேலும் வீடியோ எடுத்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவர் குஷாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது காலை 10 மணி முதல் 10.45 வரை அவர் 2 மாணவிகளை வீடியோ எடுத்து இருந்தது பதிவாகி இருந்தது. அதில் ஒரு வீடியோ 14 நிமிடங்கள், மற்றொரு வீடியோ 59 வினாடிகள் இருந்தது. மேலும் கைதான மாணவர் இதேபோல் இதற்கு முன்பு வீடியோக்களை எடுத்து உள்ளாரா? மேலும் அந்த வீடியோவை வேறு யாரிடமாவது பகிர்ந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×