search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரம் மாற்றம்
    X

    கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரம் மாற்றம்

    • காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.
    • 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு இன்று (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    அதன்படி நெல்லையில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 8 மணிக்கு புறப்படும் ஹாபா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 19577) காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.

    வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20923) ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ந் தேதி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×