search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்பு
    X

    கவர்னர் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்பு

    • தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.
    • தேநீர் விருந்தில் பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கெள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவர்னர் மாளிகையில் நாளை மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.முக. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.

    ஆனால் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்கிறது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×