search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் 3 பேர் கைது
    X

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- மேலும் 3 பேர் கைது

    • ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×