search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    X

    வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    • மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது.
    • மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்பொழுது மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் கேஸ் சிலிண்டர் என்பது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் இருக்கிறது.

    இச்சூழலில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×