என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு
- தீண்டாக்கல் கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோவில் வசம் மீட்கப்பட்டுள்ளது
- கோவில் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும்.
சென்னை:
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், தீண்டாக்கல் கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கோவில் வசம் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வீரபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 180.98 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து வருவாய் மற்றும் போலீசாரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் வி.சுரேஷ் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடியாகும்.
இந்த நிகழ்ச்சியின்போது குஜிலியம்பாறை வட்டாட்சியர் கே.ரமேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, குஜிலியம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் ராஜலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story






