என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வினரின் அகங்காரமான பேச்சுக்கள்- அண்ணாமலை கண்டனம்
    X

    தி.மு.க.வினரின் அகங்காரமான பேச்சுக்கள்- அண்ணாமலை கண்டனம்

    • வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்துவது, தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகி விட்டது.
    • பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் தி.மு.க.வினரின் அகங்காரமான பேச்சுக்களை தமிழக பா.ஜனதா சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றார் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி.

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்று கூறி வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்துவது, தி.மு.க.வினருக்கு வாடிக்கையாகி விட்டது.

    தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் தி.மு.க.வினரின் இதுபோன்ற அகங்காரமான பேச்சுக்களை தமிழக பா.ஜனதா சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×