search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    15 பேர் கொண்ட பா.ஜனதா ரகசிய குழு ஈரோட்டில் நேரடி கள ஆய்வு
    X

    15 பேர் கொண்ட பா.ஜனதா ரகசிய குழு ஈரோட்டில் நேரடி கள ஆய்வு

    • 15 பேர் கொண்ட ஒரு ரகசிய குழுவை டெல்லி பா.ஜனதா மேலிடம் ஈரோட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
    • குழுவினர் ஓசையில்லாமல் ஈரோடு தொகுதிக்குள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்று நேற்றே கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

    அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. அதற்கு கூட்டணி கட்சியான த.மா.கா.வும் சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன என்பது மர்மமாகவே உள்ளது.

    பா.ஜனதா போட்டியிட வேண்டும் என்ற கருத்தும் அந்த கட்சியினரிடையே உள்ளது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும் என்று யோசிக்கிறார்கள்.

    ஏற்கனவே பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியாகவில்லை.

    இதற்கிடையில் 15 பேர் கொண்ட ஒரு ரகசிய குழுவை டெல்லி பா.ஜனதா மேலிடம் ஈரோட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த குழுவினர் ஓசையில்லாமல் ஈரோடு தொகுதிக்குள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சென்று நேற்றே கள ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.

    தொகுதியின் கள நிலவரம் எப்படி இருக்கிறது? ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் செல்வாக்கு, ஆளும் கட்சி மீது மக்களுக்கு அதிருப்தியா? திருப்தியா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்கிறார்கள்.

    இந்த குழுவினர் சேகரித்த தகவல்களை நாளை மறுநாள் (22-ந்தேதி) டெல்லி மேலிடத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கிறார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லி பா.ஜனதா மேலிடம் எடுக்கப்போகும் முடிவு என்ன? அடுத்த கட்டம் என்ன? என்ற பரபரப்பு அ.தி.மு.க. கூட்டணிக்குள் நிலவுகிறது.

    Next Story
    ×