search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடருவேன் - குஷ்பு
    X

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடருவேன் - குஷ்பு

    • மீண்டும் மீண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார்.
    • பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள். அது போன்று மீண்டும் மீண்டும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவர் அவதூறான கருத்துக்களை கூறி உள்ளார். இதனால் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை திரும்ப அழைப்பதற்காக மட்டும் சஸ்பெண்டு செய்கிறார். ஏனென்றால் அவர்களை மகிழ்விக்க இந்த வகையான நோயுற்ற மனம் கொண்டவர்கள் தேவை.

    இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேசிய வீடியோ பதிவையும் நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×